Tuesday, March 12, 2013

நீ யாரு.. யாரு..யாரு...???

அன்பார்ந்த ஆண்களே!!! ஆருயிர் பெண்களே!!! உலகம் உருண்டை இல்ல.. அது சர்பத்ல போடாத சாத்துக்குடி வடிவம் தான்னு கண்டுபுடிச்சது எவ்ளோ பெரிய விஞ்ஞானியோ அத விடப் பெரிய ஆளு தான் நம்ம சினிமால "பஞ்ச்" டயலாக்க கண்டுபுடிச்ச ஆளும்...

படத்துல, லஞ்சுக்கே காசில்லாத கேரக்டரா இருந்தாலும் பஞ்ச் பேசலன்னா, ஆர்டிஸ்ட்டும் ஒத்துக்க மாட்டாங்க, தமிழகத்து மகாஜனங்களும் ஒத்துக்க மாட்டாங்க...

"என்னை நம்பாமல் கெட்டவர்கள் பலபேர் உண்டு.. ஆனால் நம்பிக் கெட்டவர்கள் இதுவரை யாருமில்லைன்னு" மக்கள் திலகத்துகிட்ட ஆரம்பிச்சு, "கண்ணா.. நான் எப்போ வருவேன், எப்டி வருவேன்னு யாருக்குமே தெரியாது.. ஆனா வரவேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்"ன்னு தொடர்ந்து, "நான் எர்ர்ர்ரங்க்கி போறவன் இல்ல... ஏர்ர்ர்ர்றி போறவன்..." அப்டின்னு வள்ர்ந்து, "ஒருவாட்டி முடிவுபண்ணிட்டா என் பேச்ச நானே கேக்கமாட்டேன்"னு முத்திப் போயி...கடைசில "ஆக்சுவலா நான் அப்டி கெடையாதுங்க.. எனக்கு நடிக்கத் தெரியாது..."வரைக்கும் வந்து நிக்குது...

இதுல "ஹேய்.. தமிள்நாட்ல மொத்தம்.." அப்டின்னு சென்சேஷனலா டயலாக் பேச ஆரம்பிச்சு, சென்சஸ் விபரம் எல்லாம் சொல்லி, இந்திய பொருளாதாரம், வரலாறு, கணக்கு, பாட்டனி எல்லாத்தயும் பிரிச்சு மேஞ்சுட்டு, ஒரு சென்செக்ஸ் புள்ளிவிபரத்தோட முடிக்கிற அளவுக்கு "பஞ்ச்" தன்னோட பரிணாம வளர்ச்சிய காட்டிருக்கு...

கொஞ்சம் ஆழ்ந்து இதையெல்லாம் பாத்தோம்னா நமக்கு ஒரு விஷயம் தெளிவா வெளங்கும்.. இது எல்லாமே ஒரு "Selling Techinique".. அதாவது "Tell about yourself" அப்டின்னு Interview ல கேப்பாங்களே, அந்த கேள்விக்கு கேக்காமலே சொல்ற பதில் தான் இதெல்லாமே...

சினிமாலேர்ந்து வெளி உலகத்துல, இந்த "Tell about yourself"க்கு ஒவ்வொரு ஆளும் ஒவ்வொரு அளவுகோல் வச்சிருப்பாங்க..

வேலை தேடிட்டிருக்கிற எல்லா பேச்சிலர் ரூம்லயும் இந்தக் கேள்வி ஒரு தடவையாச்சும் வந்துட்டு போயிடும்.. சில பேர் மச்சான்.. டெக்னிக்கல மட்டும் சொல்லு, சொந்தக் கத சோகக்கத எல்லாம் சொல்லாத.. ரிஜெக்ட் பண்ணிருவாங்ய...அப்டின்னு.. இன்னும் சில பேர் அதெல்லாம் சும்மா, அஞ்சு பைசாவுக்கு பஸ்கி போட்டதுலேந்து, ஆஃப் பாட்டில் விஸ்கி போட்டது வரைக்கும் எத வேணா சொல்லு மச்சி.. அப்டின்னு கெளப்பிவிடுவான்...

இதுல சிலபேர் ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு, இந்த எடத்துல நான் இருந்தேன்னா, எப்டி பதில் சொல்றேன் பாருன்னு, தாவணிக்கனவுகள் பாக்யராஜ் மாதிரி பெர்ஃபாமன்ஸ் எல்லாம் பண்ணிக்காட்டுவாங்ய..

சில‌பேர் என்ன‌ சொல்ற‌துன்னே தெரியாம‌.. "I come from Decent Family sir" அப்டின்னுலாம் சொல்வாங்ய‌.. (கேள்வி கேட்டவன் ம‌ட்டும் என்ன‌ மான‌ங்கெட்டு ரோட்டுல‌யா அலையிறான்..)

உண்மையில‌ இந்த‌க் கேள்வி ஏன் கேட்க‌ப்ப‌டுகிற‌துன்னு பாத்தா..

உரையாட‌ல‌ ஆர‌ம்பிக்க‌ற‌துக்கு ஒரு "ஐஸ் பிரேக்கரா".., ஆர‌ம்பிச்ச‌ பிற‌கு "Communication & Attitude" இது ரெண்டையும் அள‌க்குற‌துக்கு ஒரு கருவியா பயன்படுத்தப்படுது.. (சொல்ட்டார்ப்பா..)

அன்றாட‌ வாழ்க்கையில‌, Interview ல ம‌ட்டுமில்லாம‌, க‌ல்யாண‌ம் மாதிரி ஒரு பொது நிக‌ழ்ச்சிலேயோ, அல்ல‌து டிரெயின் / ப‌ஸ் ப‌ய‌ண‌த்திலேயோ ப‌க்க‌த்துல‌ இருக்கிற‌ ஆள்கிட்ட‌ 'அப்ப‌ற‌ம் நீங்க‌..." அப்டின்னு நாம ஆர‌ம்பிக்கிற‌ அதே விஷ‌ய‌ம் தான் இந்த "Tell about yourself"..

அந்த மாதிரி சூழல்ல இந்தக்கேள்வி, Newton's third law மாதிரி... "It has its own equal and oppsosite reaction"..

நான் ஒரு டாக்டர், அல்லது வக்கீல், அல்லது வாத்தியாருன்னு நேரா பதில் சொல்லிட்டா.. அது நேர் வினை.. equal reaction.. ஆனா பாதி பேரு சொல்லமாட்டான்.. அது oppsosite reaction.. அந்த மாதிரியான சில சுவாரசியமான பதில்கள பத்திதான் இந்த போஸ்ட்டே..

கேட்டகிரி #1) என்னாச மைதிலியே...

எந்த‌க் கேள்விய‌க் கேட்டாலும், சுத்தி வ‌ள‌ச்சு, க‌டைசில‌ என்னாச‌ மைதிலியே பாடி முடிக்கிற‌ டி. ஆர் மாதிரி இவிங்ய‌..

"ந‌ம்ம‌ குடிகாட்டுல‌ ராம‌மூர்த்தி மாம‌ன் அக்கா ம‌வ‌ள‌ க‌ட்டிக்குடுத்தாவ‌ள்னா, அவுங்க‌ மாமியாரோட‌ அத்த‌ பைய‌னுக்கு ஒண்ணுவுட்ட‌ ச‌க‌ல‌பாடி யாரு???? உங்க‌ப்பா தான்.." அப்டின்னு முடிச்சுருவாங்ய..

நீ, இல்லயே என் சொந்த‌ ஊரு அஜித் ப‌ட்த்துல‌ அழிஞ்சுபோன‌ அத்திப்ப‌ட்டின்னு சொன்னாலும் அங்க‌தான் எங்க‌ தாத்தாவும் உங்க‌ தாத்தாவும் ஒண்ணா வ‌த்திப்பெட்டி வாங்குவாங்க‌ன்னு ச‌த்திய‌மே ப‌ண்ணுவாங்ய‌..

இவங்களுக்கு இந்தக் கேள்வி உறவுகளோட சம்பந்தப் பட்டது...இவ‌ங்க‌ சொல்ல‌ வ‌ர்ர‌ விஷ‌ய‌ம் என்ன‌ன்னா.. "நான் உன‌க்கு சொந்த‌க்கார‌ன்..."

நாம‌ளும் ப‌திலுக்கு ப‌ருத்திவீர‌ன் கார்த்தி மாதிரி "என்ன‌ மாமா சௌக்கிய‌மா??"ன்னு சொல்லிட்டு போயிர‌ணும்..

கேட்டகிரி #2)அலோ..துபாயா? அங்க என் பிரதர் மார்க் இருக்காரா?

இவிங்ய ஆரம்பமே அதிரடி தான்... "திருக்கொவளையில, நம்ம கலைஞர் வீட்டுக்கு நேர் பின்னாடி மூணாவது தெருவுல ரெண்டாவது வீடு நம்ம வீடு தான்..".. இது வில்லேஜ் பார்ட்டியோட டயலாக்கு..

இதே சிட்டி பார்ட்டின்னா அது கொஞ்சம் வேற மாதிரி இருக்கும்.." Actually.. my son in law is working as an additional general manager in Oracle.."

இவர பத்திக்கேட்டாலே சன் இன் லாவுலேந்து தான் கத ஸ்டார்ட் ஆகும்.. இவுங்க எல்லாருக்குமே இந்தக் கேள்வி சமூக அந்தஸ்த்தோட சம்பந்தப்பட்டது..

இவுங்க‌ சொல்ல‌ வ‌ர்ர‌து என்னன்னா..."என‌க்கு ஐ. ஜி ய‌ ந‌ல்லாத் தெரியும்..."

கேட்டகிரி #3) திஸ் செக்கோஸ்லேவியா, ஆ.. திஸ் யுக்கோஸ்லேவியா..திஸ் இஸ் மிஸ்ஸிசிப்பி..

இது கொஞ்சம் சிக்கலான பார்ட்டி.. கேள்வி கேட்ட உடனேயே நம்மள திருப்பி கேள்வி கேக்க ஆரம்பிப்பாங்க.. நாம மட்டும் இங்க தான் வேல பாக்குறோம்ணு சொன்னோம்.. அதோட நாம காலி.. உங்க கம்பெனியோட Annual Turn over எவ்ளவு.. எத்தன branches இருக்கு.. Abroad ல‌ head office எங்க இருக்குன்னு நோண்டி நொங்கெடுத்துருவாங்ய...

இவங்கள பொருத்த வரைக்கும் இந்தக் கேள்வி அவங்க பொது அறிவோட சம்பந்தப்பட்ட விஷயம்..

சமீபத்துல இந்த மாதிரி ஒரு ஆளுகிட்ட தெரியாத்தனமா சிக்கி சின்னாபின்னம் ஆனேன்..  Connecticutt ல இருக்கிர எங்க‌ head office pincode எல்லாம் கேட்டாரு.. கோடு நம்பரு, ரோடு நம்பரு, எக்ஸ்ட்ரா நம்பரு இதெல்லாம் ஒனக்கு எதுக்குயான்னு பொலம்ப உட்டுட்டாரு..

கேட்டகிரி #4)ஆப்பிரிக்கால வைரச் சொரங்கம்.. ஜப்பான்ல ரப்பர் தோட்டம்..

போன கேட்டகிரி ஆளுங்க ரெய்டுக்க வந்த ஆஃபீசர் மாதிரி கேள்வி கேட்டா, இவுங்க நம்மள என்னமோ "Ayakar Bhavan"லேந்து வந்த அம்பாசிடர் மாதிரி நெனச்சு சொத்து கணக்கெல்லம் சொல்லுவாங்ய.. ஊட்டில நமக்கு ஊறுகா ஃபேக்ட்ரி இருக்கு.. சேலத்துல செங்கல் குவாரி இருக்குன்னு..புட்டு புட்டு வைப்பாங்க..

இதுல காமெடி என்னன்னா, வார்த்தைக்கு வார்த்த "நமக்கு" "நமக்கு"ன்னே சொல்லுவாங்ய (என்னமோ ஒம்போதாவது பொண்ணு நவலட்சுமிய நமக்கு கட்டிகுடுக்க போறமாதிரி...)

இவங்கள பொருத்த வரைக்குக்கும் இந்த "Tell about yourself", அசையும் / அசையா சொத்துக்களோட சம்பந்தப்பட்டது.. இவங்க சொல்ல வர்ரது.. "ஐ யம் எ மில்லினேர்ர்ர்.."

க‌டைசி கேட்ட‌கிரி)  தொர‌ இங்கிலீசெல்லாம் பேசுது.. சினேகித‌னைய்ய்...

ந‌ம்ம‌ கூட‌வே ப‌ஸ் ஏறிட்டு, "ஐ ஸ்டே இன் டேஞ்சூர்.. யுவர் நெகட்டிவ் வேர்??" அப்டின்னு ஒரு கேள்வி வேற‌.. இன்னும் சொல்ல‌ணுமா என்ன‌..

இவ‌ங்க‌ளோட‌ பார்வைல‌ இந்த‌க் கேள்வி ஆங்கில‌ அறிவோட‌ ச‌ம்ப‌ந்த‌ப் ப‌ட்ட‌து.. இவ‌ங்க‌ சொல்ல‌ வ‌ர்ர‌து.." I can Talk English.. I can walk english.. I can laugh english you bloody fellow..."

நாம‌ளும் க‌டைசியா ஒரு "ப‌ஞ்ச்" வ‌ச்சு முடிக்க‌லாம்...

இந்த கேட்டு சொல்றது, கேக்காமலே சொல்றது, நேர் வினை, எதிர்வினை எல்லாமே டைம் ந‌ல்லா இருக்க‌ற‌ வ‌ரைக்கும் தான்...

அது ம‌ட்டும் ஒருத்த‌னுக்கு ந‌ல்லா இல்ல‌..

"இதெல்லாமே Self Expense ல தானே வச்சுக்கிற செய்வினை தான்..." எப்பூடி!!! (எகிறு.. எகிறேய்ய்ய்...)

Thursday, March 7, 2013

ஒரு துண்டு போஸ்ட்!!!!

போன தடவ ஊருக்கு போயிருந்த சமயம், இந்த சம்பவம் நடந்துச்சு.

எங்கூரு பஸ்ஸுல அடிச்சு புடிச்சு ஏறி உக்காந்ததுக்கப்பறம் ஒரு மொரட்டு உருவம் வந்து, தம்பி.. எந்திரி.. இது என் சீட்டு.. துண்ட போட்டு வச்சிருக்கம்ல... அப்டின்னு மெரட்டுச்சு..

அப்புறம் அந்த பெருசுகிட்ட சமாதானமாப் போயி, அந்த உரிமை மீறல் பிரச்சினைய சட்ட ஒழுங்கு பிரச்சினயா மாறாத அளவுக்கு சரி பண்ணிட்டு வேற சீட்டுல போயி உக்காந்துகிட்டேன்..

துண்டுங்கிறது துவட்டிக்க அல்லது துடைச்சுக்க தானே அத தூக்கிட்டு வந்து பஸ் சீட்டுல போடலாம்ங்கிற ஐடியா எல்லாம் நம்மாளுங்களுக்குத்தான் வரும்...

"இதே நான் இந்த துண்ட தூக்கிட்டு போயிருந்தேன்னா என்ன பண்ணிருப்பான் அந்தாாளு?" ன்னு  நான் மெல்லமா மொனங்குனது பக்கதுல உக்காந்து இருந்தவருக்கு கேட்ருச்சு..

அதுக்கு அவரு ஒரு பதில் சொன்னாரு.. துண்டில்ல தம்பி.. பெத்த புள்ளையக் கூட தூக்கி போட்டு சீட்டு புடிப்பாய்ங்க.. நீ அத தூக்கிட்டு போனா கூட அடுத்த வருஷமே வேற ஒண்ண ரிலீஸ் பண்ணிப்பாய்ங்கன்னு...

அவனுங்க கெடக்கானுங்க.. ஆனா இந்த துண்டு மேட்டர் மட்டும் எனக்குள்ள நெறய யோசனைகளை கொண்டுவந்தது... அதோட மொத்த Collection  தான் இந்த post..

English ல‌ Unusual usage of things ன்னு சொல்லுவாங்க.. அதாவது ஒரு பொருளை அல்லது விஷயத்த, அதுக்கு உரிய விதத்துல இல்லாம சம்பந்த்மில்லாத வகையில பயன்படுத்துறது..
 
சொல்லப்போனா நாம நெறைய விஷயங்கள்ள இந்த Un usual usage அ Follow பண்றோம்... விபூதி மடிக்க Daily Calendar Sheet, காலேஜ் நோட்டுக்கு அட்டை போட  Monthly Calendar Sheet, வீட்டு shelf ல கவர் மாதிரி அடில போட News Paper, கார்ல தொங்கவிட சி.டி, வடை தட்டறதுக்கு பால் கவர் இப்படி சொல்லிகிட்டே போகலாம்..

இத சொல்லும் போது ஒரு பழைய தமிழ்ப் பாடல் என்னோட நினைவுக்கு வருது...

 ராமச்சந்திரக் கவிராயர்னு ஓரு தமிழ்ப்புலவர் தன்னோட பாக்குவெட்டி காணாமபோச்சுனு எழுதுனது...

விறகுதறிக்கக் கறிநறுக்க வெண்சோற்றுப்புக் கடகுவைக்கப்
 பிறகு பிளவுகிடைத்ததென்றா னாலாறாகப் பிளந்துகொள்ளப்
 பறகுபறகென்றே சொறியப் பதமாயிருந்த பாக்குவெட்டி
 இறகுமுளைத்துப் போவதுண்டோ வெடுத்தீராயிற் கொடுப்பீரே!!

விறகு பிளக்க, காய்கறி நறுக்க, ராத்திரி வேளைகளில் அந்தக் காலத்தில் உப்பு மாதிரியான பொருள பக்கத்து வீடுகளில் கடனா வாங்க அடமானமாக வைக்க, பாக்கு கெடச்சா அதையும் பிளக்க.. எல்லாத்துக்கும் மேல முதுகு அரிக்கும் போது சொறிஞ்சுக்க பயன்பட்ட பாக்குவெட்டி காணாம போச்சே.. அத யாராவது எடுத்தா கொடுத்துடுங்க அப்டின்னு பாடிருக்காரு..

ஓடற டிரெயின நிறுத்த தாவணி, ஆம்லெட் போட அடிவயிறுன்னு பல Un usual usage அ இந்த தமிழ்கூறு நல்லுலகத்துக்கு கத்துக்கொடுத்த சினிமாவிலும், இந்த "துண்டு"ங்கிறது மிகமிகப் பெரிய பங்கு வகிக்குது அப்படின்னு சொல்லலாம்..

அங்கவஸ்த்திரம், பரிவட்டம், துண்டு, கோவணம்னு அது பல பரிமாணங்களை கடந்த ஒண்ணா இருக்கு...

Producerக்கு low அல்லது high அப்டின்னு Budget Fix பண்ணுது, Directorக்கு கிராமம் அப்டின்னு Location Fix பண்ணுது, Writterக்கு நாட்டாமைன்னோ அல்லது விவசாயின்னோ அல்லது பூசாரின்னோ Plot Fix பண்ணுது.. இதெல்லாம் பண்றது வெறும் துண்டு தான்...

முதல் மரியாதை சிவாஜி, எஜ‌மான் ர‌ஜினி, தேவ‌ர் ம‌க‌ன் க‌ம‌ல்,சின்ன‌க் க‌வுண்ட‌ர் விஜ‌ய‌காந்த், நாட்டாமை ச‌ர‌த், கிழ‌க்குச் சீமையிலேயிலிருந்து ப‌ல‌ ப‌ட‌ங்க‌ள்ல‌ விஜ‌ய‌குமார்.. சாக்லேட் ல‌ மும்தாஜ் (அட‌ அதையும் சொல்லித் தானே ஆக‌ணும்..).. இப்ப‌டி துண்டால‌ எக்க‌ச்ச‌க்க‌மா க‌ல்லா க‌ட்டாத‌ ஆட்க‌ள் த‌மிழ் சினிமால‌யே இல்ல‌ன்னு சொல்ல‌லாம்..

அவ்வ‌ள‌வு ஏங்க‌.. ச‌ன் டி.வி ல‌ யாக‌வா முனிவ‌ர் ஃபேம‌ஸ் ஆன‌தே துண்டால‌ அடிச்சு தான‌..

இந்த‌ துண்ட‌ வ‌ச்சு தான் எவ்வ‌ள‌வு ட‌ய‌லாக் வ‌ந்திருக்கு.. உதார‌ண‌த்துக்கு ஒண்ணே ஒண்னு.. ந‌ம்ம‌ சின்ன‌க் க‌வுண்ட‌ர் சொல்ற‌து..

ம்ஹூம்ஹூம்.. (அட‌ அவ‌ர் ஸ்பெஷாலிட்டியே இந்த‌ சிரிப்பு தானே..)

நான் துண்ட‌ இடுப்புல‌ க‌ட்டுனேன்னா கோயிலுக்கு போறேன்னு அர்த்த‌ம்.. தோள்ள‌ போட்டேன்னா தீர்ப்பு சொல்ல‌ப்போறேன்னு அர்த்த‌ம்..
அத‌யே அப்டி ஓர‌மா எடுத்து வ‌ச்சேன்னா ப‌ட்ட‌ய‌ கெள‌ப்ப‌ப்போறேன்னு அர்த்த‌ம்..

இது சின்ன‌க் க‌வுண்ட‌ர் பேச்சிலரா இருந்த‌ போது சொன்ன‌ ட‌ய‌லாக்.. இத‌யே எங்கூருல‌ க‌ல்யாணாம் முடிச்ச‌ ஆளுக‌ வேற‌ மாதிரி சொல்லுவாங்க‌..

நான் துண்ட‌ த‌லைல‌ க‌ட்டுனா, பொண்டாட்டி அரிசி உளுந்து ஊற‌ப்போட்டுருக்கான்னு அர்த்த‌ம்.. அதே துண்ட‌ இடுப்புல‌ க‌ட்டுனேன்னா துணி ஊற‌ப்போட்டுருக்கான்னு அர்த்த‌ம் அப்டின்னு..

ஒரு விவ‌சாயியோட‌ Life ல‌ இந்த‌ ட‌ய‌லாக் கூட‌ ஒரு Un usual usage தான்..

அவ‌ன் தோள்ல‌ துண்டு விழுந்தா‌ வீட்ல‌ விசேஷம்னு அர்த்த‌ம்..
த‌லைல‌ துண்டு விழுந்தா உள்ளூர் ரேஞ்சுல‌ க‌ட‌ன்னு அர்த்த‌ம்.
ப‌ட்ஜெட்ல‌யே துண்டு விழுந்தா ஒலக‌ ரேஞ்சுல‌ க‌ட‌ன்னு அர்த்த‌ம்..
க‌டைசியா அவ‌ன் க‌ழுத்த‌ சுத்தி துண்டு விழ்ந்தா அவ‌னுக்கே இறுதிக் க‌ட‌ன்னு அர்த்த‌ம்..

சரி அவ்ளோ பில்ட் அப் எதுக்கு.. நெஜமாவே இந்த துண்டுல அப்டி என்னென்ன Un usual usage இருக்கு..???

  • தோட்ட‌த்துல‌ க‌த்திரிக்காய் திருட‌லாம்..
  • திருடுன‌ க‌த்திரிக்காய‌ Secret Bidding ல‌ dispose ப‌ண்ண‌லாம் (அதாங்க‌ கையில‌ துண்டால‌ மூடி சந்தைல பேர‌ம் பேசுற‌து..)
  • திருடிப்புட்டு திருட‌வே இல்லைன்னு துண்ட‌ கீழ‌போட்டு தாண்டி ச‌த்திய‌ம் ப‌ண்ண‌லாம்..
  • அதையும் மீறி ஒத‌ச்சாணுங்க‌ன்னா, அடிவிழுந்த‌ எடத்துல‌ ர‌த்த‌ம் வ‌ராம‌ துண்டுல க‌ட்டுப் போட‌லாம்.
  • சத்தம் வெளியே தெரியாம அதே துண்ட வாயில பொத்தி அழுவலாம்
  • அப்புறம் கூட்டம் கலஞ்சதுக்கு பின்னாடி துண்ட விரிச்சு மல்லாக்க படுத்துக்கலாம்..
  • அப்டியே மழை வந்தா தலைக்கு மேல இருக்கிறத நனையாம துண்டால மூடி காப்பாத்திக்கலாம்.. (உள்ள இருக்கிறத பத்தி யாருக்கென்ன கவல..)
  • குளிர‌டிச்சா துப்ப‌ட்டியா போத்திக்க‌லாம்..
  • சுருட்டி வ‌ச்சா சும்மாடா ப‌ய‌ன்ப‌டுத்திக்க‌லாம்..
என்ன‌ எல்லாம் வில்லேஜ் மேட்ட‌ராவே இருக்குன்னு பாக்க‌றீங்க‌ளா..

துண்ட‌ க‌ழுத்துல‌ சுத்தி, அது மேல‌ ச‌ட்டைக்கு ச‌ம்ப‌ந்த‌மே இல்லாத‌ ஒரு T.T.R Coat போட்டுட்டோம்னா "Yo" Model ஆயிடுவோம்..

இதெல்லாமே ஆண்க‌ளுக்கு ம‌ட்டும் தானான்னு கேக்க‌ற‌ தாய்க்குல‌ங்க‌ள், துண்ட திடீர் விருந்தாளிகள் வந்துட்டா அவ‌ச‌ர‌த்துக்கு நைட்டி மேல‌ துப்ப‌ட்டாவா ப‌ய‌ன்ப‌டுத்திக்க‌லாம்..

அதே துண்டுல‌ கொஞ்சூண்டு த‌ண்ணிய‌ தெளிச்சு த‌லைய‌ சுத்தி க‌ட்டிட்டா ச‌ங்க‌ர் சார் ப‌ட‌த்துல‌ வ‌ர்ர‌ ச‌தா மாதிரி ச‌ட‌ன்னா கெட்ட‌ப் சேஞ்ச் ப‌ண்ணிர‌லாம்..
ரொம்ப முக்கியமா...   புருஷ‌ன‌ அடிக்க‌ ஆப‌த்தில்லாத‌ ஆயுத‌மா கூட‌ ப‌ய‌ன்ப‌டுத்திக்க‌லாம்..
 
இந்த‌ ஐடியாவ‌ உங்க‌ளுக்கு சொல்லிக்கொடுத்த‌தால‌ என்ன‌ய‌ யாரோ அடிக்க‌ வ‌ர‌மாதிரி இருக்கு..
 
I am Esscaaaaapeee......!!!!!!!

Wednesday, March 6, 2013

Toronto Concert ம்... ஓணாண்டிப் புலவரும்!!!

விஜய் டி.வி ல இளையராஜாவின் எங்கேயும்.. எப்போதும் ராஜா... வரும் ஞாயிறு காலை 11:30க்குன்னு விளம்பரத்த பாத்த உடனே, இது எப்போ நடந்துச்சு, எங்க நடந்துச்சுன்னு, நெட்ட துழாவ ஆரம்பிச்சேன்.. Toronto மாநகரில் கடந்த மாதம் நடந்த நிகழ்ச்சி என்று தெரியவந்தது...
 
அதில் திரு.இளையராஜா அவர்கள் குறித்த சில / பல விமர்சனங்களும் (அல்லது குற்றச்சாட்டுன்னும் சொல்லலாம்...) நெட்டுல‌ பாக்க முடிஞ்சது...
 
என்னோட மொதல் போஸ்ட் Music க பத்தி தான் போடணும்னு நெனச்சிட்டு இருந்த எனக்கு, அதப் பாத்த உடனேயே முடிவு பண்ணிட்டேன்.. இது தான் நம்ம மொதல் போஸ்ட் அப்படின்னு...
 
ரொம்ப சீரியஸா, "அவர் ஒரு இசைக்கடவுள்.." அப்படிங்கிற எல்லைக்கு அவரையும் தள்ளாம.. "அவரை எப்படி விமர்சிக்கலாம்"ங்கிற எல்லைக்கு நாமும் செல்லாம.. வந்த விமர்சனங்களை பத்தி மட்டும் அலசலாம்...
 
#1) 2:30 மணி நேரம் லேட்டாக வந்தார்... ஆனால் Sorry கூட கேக்கல!!!
 
இந்த நிகழ்ச்சிய ஏற்பாடு செஞ்சது.. ஒரு தனியார் நிறுவனம்... பாட வர்ர ஆட்களை ஓட்டல் ரூம்ல இருந்து நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு கொண்டு செல்லும் வழியில் ரோஜர் சாலையில் ஏற்பட்ட Traffic Jam la திரு. இளையராஜாவும் மற்ற பாடகர்களும் மாட்டிகிட்டாங்க.. இதில் திரு.இளையராஜாவோட தப்பு அல்லது பங்கு என்னன்னே எனக்கு புரியல..
 
பொதுவாகவே அதிகாலை 5 மணிக்கெல்லாம் பிரசாத் ரெக்கார்டிங் தியேட்டர்ல டாண்ணு ஆஜர் ஆகக்கூடிய மனிதர் வேண்டுமென்றே 2:30 மணி நேரம் லேட்டா வருவாரான்னு நாம் கொஞ்சம் நிதானமா யோசிக்கணும்...
 
இந்த எடத்துல ஒரு சின்ன சம்பவத்த சொல்றது ரொம்ப பொருத்தமா இருக்கும்... ஒரு நாள் ரெக்கார்டிங்குக்கு கார்ல போகும்போது, வழியில கார் நின்னு போச்சுன்னு, விடுவிடுன்னு கார விட்டு இறங்கி பொடிநடையா ரெக்கார்டிங் தியேட்டருக்கு போன சம்பவத்த, அவரே சில வாரங்களுக்கு முன் விகடன் பதில்கள்ள சொல்லி இருந்தாரு..

அப்ப‌டிப்ப‌ட்ட‌ ஒரு மனிதர் ச‌ம்ப‌ந்த‌மே இல்லாம‌ ஏன் லேட்டா வ‌ர‌ணும்..
 
ஆக இந்த லேட்டா வந்தாரு அப்டிங்கிற குற்றச்சாட்டு, வாசக்கடக்காரன் சரியா டீ போடல, வண்ணாந்தொறைல சரியா துணி வெளுக்கலன்ற காரணுத்துக்கெல்லாம் அவரு தான் பொறுப்புன்னு சொல்றது மாதிரி இருக்கு..
 
ஆனா திரு.இளைய‌ராஜா அவ‌ர்க‌ள் உண்மையிலேயே ஒரு விஷ‌ய‌த்துக்கு வ‌ருத்த‌ம் தெரிவிச்சாரு.. 3 மாத‌ கால‌மாக‌ ப‌யிற்சி செஞ்சு இங்கே உங்க‌ முன்னாடி வாசிக்கிறோம்..இதுல‌ சில‌ர் சில‌ நோட்ஸ வாசிக்கும் போது த‌வ‌று செஞ்சிருக்க‌லாம்..அதுக்கு வ‌ருத்த‌ம் தெரிவிச்சுக்கறேன் அப்டின்னு...
 
நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிறுவனம் பதில் சொல்ல வேண்டிய விஷயத்துக்கெல்லாம், இளையராஜா சாரி கேக்கல, மேட்சிங் பிளவுஸ் கேக்கலன்னு சொன்னா ஞாயமா??
 
#2)100$, 400$ கொடுத்து வ‌ந்தோம், இளைய‌ராஜாவுக்கு ப‌ண‌த்தாசையா???...
 
Again இந்த‌ நிக‌ழ்ச்சியை ந‌ட‌த்திய‌ த‌னியார் நிறுவ‌ன‌ம் ப‌தில் சொல்ல‌ வேண்டிய‌ விஷ‌ய‌ம்.. எத்த‌னை ரூபாய்க்கு டிக்கெட்டுக‌ள் விற்க‌ப்ப‌ட்டாலும் அதில் இளைய‌ராஜாவின் த‌லையீடு என்று எதுவும் இல்லை.. அதே போல‌ தியேட்ட்ர் வாச‌லில் வ‌ந்து, 20 - 60, 20 - 60 என்று அவ‌ர் விற்க‌வும் இல்லை.. இதுவும் கொஞ்சங்கூட பொருத்தமில்லாத‌ குற்ற‌ச்சாட்டு..
 
தூரல் நின்னு போச்சு ப‌ட‌ விழாவில், அப்போதைய‌ முத‌ல்வ‌ர் திரு.எம்.ஜி.ஆர் அவர்கள் அணிவித்த‌ மோதிர‌த்தை, "நான் ந‌கை அணிவ‌தில்லை"ன்னு சொல்லி அங்கேயே க‌ழ‌ட்டிக்கொடுத்த‌ ச‌ம்ப‌வ‌த்தை அவ‌ர‌து "யாருக்கு யார் எழுதுவ‌து - ப‌க்க‌ம் 56ல்" பாக்க‌ முடியும்...
 
அதே போல‌ க‌ர‌காட்ட‌க்கார‌ன் ப‌ட‌த்தை எடுத‌த‌ த‌யாரிப்பாள‌ர் பின்னாட்க‌ளில் ப‌ண‌க்க‌ஷ்ட‌த்தில் இருந்த‌போது, அவ‌ர் கொடுத்த‌ செக்கை திருப்பிக் கொடுத்துட்டு, 10 பைசா வாங்காம‌ல் இசையமைச்சுக்கொடுத்த‌ ப‌ட‌ம் தான் "வில்லுப்பாட்டுக்கார‌ன்"... இந்த‌ த‌க‌வ‌லை விஜ‌ய் டி.வி நீயா நானாவில் அந்த‌ த‌யாரிப்பாள‌ரே சொன்னாரு..
 
அப்ப‌டிப்ப‌ட்ட‌ ஒரு ஆளுக்கு என்ன‌ ப‌ண‌த்தாசை இருக்க‌ முடியும்??????
 
(நீங்க‌ளே சொல்லுங்க‌ யுவ‌ர் ஆன‌ர்.. அத‌க் க‌ள‌வாண்டு போயி அவ‌ர் என்ன‌ செய்ய‌ப்போராரு?? )
 
#3)விசிலடிக்கக் கூடாதுன்னு சொல்றாரே.. இதென்ன பஜனை மடமா??
 
இது ரொம்ப முக்கியமான ஒரு கேள்வி...
 
ஒரு விஷ‌ய‌த்த‌ இந்த‌ எட‌த்துல‌ தெளிவுப‌டுத்த‌ணும்னு நென‌க்கிறேன்..
 
இளைய‌ராஜா பாட்டு கேக்க‌ற‌துக்காக‌ ஒரு க‌ச்சேரிக்கு போற‌து வேற‌... இளைய‌ராஜா க‌ச்சேரிக்கு போற‌து வேற‌.. ரெண்டும் ஒண்ணு கெடையாது...
 
இது அவரோட மொதல் Concert கிடையாது.. 6வது நிகழ்ச்சி (எனக்கு தெரிஞ்சு)..
 
ஒவ்வொரு தடவையும், வெறும் சினிமா பாட்ட மட்டும்  அவ‌ர் நிக‌ழ்ச்சி ந‌ட‌த்துற‌தில்ல‌...
 
அதையும் தாண்டி த‌ன்னுடைய‌ ர‌சிக‌னுக்கு தெரியாத‌ ப‌ல‌ நுணுக்க‌மான‌ விஷ‌ய‌த்த‌ சொல்ல‌ அவ‌ர் முய‌ற்சி செஞ்சுகிட்டே இருக்காரு..
 
உதார‌ண‌த்துக்கு..
 
1) ச‌ ரி க‌... இந்த‌ மூணே மூணு ஸ்வ‌ர‌த்த‌ வ‌ச்சுகிட்டு ஒரு பாட்டு க‌ம்போஸ் பண்ண‌முடியும்னு காட்டுறார்..
 
2) அவ‌ரோட‌ அடுத்த‌ நிக‌ழ்ச்சியிலேயெ இன்னும் ஒரு ப‌டி மேல‌ போயி 2 நோட்டுல‌ ஒரு சாங் பாடிக்காட்டுறாரு.. இன்னும் ஒருபடி மேல போயி "வா வா பக்கம் வா" பாட்டு ஒரே ஒரு நோட்டுல போட்ட் பாட்டுணு சொல்றாரு
 
3) ஒரு ம‌னித‌னுடைய‌ வாழ்க்கையில் இசை எங்கெங்கு எல்லாம் ப‌ங்கெடுக்கிற‌து அப்டிங்கிற‌த‌ ஒரு பீஸா க‌ம்போஸ் ப‌ண்ணிக் காட்டுறாரு..
 
4) ஒரே வரிய எத்தனை விதமா கம்போஸ் பண்ணமுடியும்.. பண்ணுவாங்கன்னு சொல்ராரு (மாங்குயிலே பூங்குயிலேவை 6 விதமாக இவர் பாடிக்காட்டியது இன்னும் எனக்கு நெனப்பிருக்கு..)
 
இதெல்லாம் ஒரு கடைக்கோடி ரசிகனால் வேறு எங்கும் பார்க்க‌வோ அல்ல‌து தெரிஞ்சுக்கவோ இயாலாத ஒரு விஷயம்..
 
இன்னொரு அற்புதமான சம்பவம்..
 
அதுவரைக்கும் வயலின் மாதிரி இருக்குற எல்லாமே வயலின் தான்னு நெனச்ச ஆளு நானு..
 
சிம்பொனி என்பது எப்படி இருக்கும்னு.. ரொம்ப எளிமையா "இதயம் போகுதே.." பாட்ட வச்சுகிட்டு ஒண்ணுக்கு மேற்பட்ட் கவிதைகளை ஒரே நேரத்தில் வாசிக்கும் அனுபத்தைப் போன்றது சிம்பொனின்னு சொல்லி  Explain பண்ணுனாரு பாருங்க..அய்யோ.. வார்த்தையே இல்ல..
 
முதல்ல‌ Violin, பின் Viola, பின்னர் Cello, பின்னர் Double Bass இன்னு ஒவ்வொண்ணா சேந்து, இதெல்லாம் மொத்தமா ஒரு இசைப்பிரவாகமா வரும்போது கெடைக்கிற அனுபவம் இருக்கே.. சான்சே இல்ல.. இந்த நுணுக்கத்த சொல்லும்போது.. அல்லது சொல்லவரும்போது விசில் அடிச்சா சொல்ல வந்த விஷயத அவரும் முழுசா சொல்ல முடியாது.. ரசிகனும் முழுசா கேக்க முடியாது..
 
ஒரு சிந்த்சைசர் அப்புறம் ஒரு ஆக்டாபேட்..இந்த ரெண்ட வச்சுகிட்டு கச்சேரிய முடிக்காம.. மெனக்கெட்டு 60 பீஸ் ஆர்க்கெஸ்ட்ராவ கொண்டுவந்து அதன் நுண்மையான ஒலிகளை எல்லாம் எல்லாருக்கும் சேக்க ஒரு ஆளு பிரயத்தனப்படும்போது விசில் மட்டும் அடிக்காதீங்க.. கை தட்டி உற்சாகப்படுத்துங்கன்ணு சொன்னா அவரு சொல்றதுல என்ன தப்புன்னு எனக்கு புரியல...
 
ஜனனி ஜனனியோ, அல்லது ஓம் சிவோஹமோ பாடும்போது அது பக்தி இசை தான்..சிம்பொனிய பத்தி சொல்லும்போது அது ஒரு Operaவுக்கு கொஞ்சமும் இளைச்சதல்ல...
 
இதெல்லாம் எனக்கு வேணாம்யா.. நல்ல குத்து சாங் பாடு.. அப்டின்னு சொல்ற ஆட்கள், கற்கண்டு பாயசத்துல எங்கய்யா கருவப்பிலயே காணுமேன்னு தேடுறதா தான் அர்த்தம்.. அவர்களுக்கான நிகழ்ச்சி நிச்சயம் இது அல்ல..
 
அத சி டி பிளேயரிலோ அல்லது வேறு எந்த கச்சேரியிலோ நாம கேட்டுட்டு போயிடலாம்..
 
இதுல‌ என்ன‌ பெரிய‌ பொல்லாத‌ புனித‌த்த‌ன்ம‌ வ‌ந்திருச்சுன்னு கேக்க‌லாம்.. இது புனித்த‌த்த‌ன்மைய‌ சார்ந்த‌ விஷ‌ய‌ம‌ல்ல‌.. ஒரு அடிப்ப‌டை நாகரிக‌ம்னு அவ‌ரு சொல்ராரு.. அவ்ளோ தான்..
 
மொத்தத்துல இந்த விமர்சனங்கள் / குற்றச்சாட்டுகள் எல்லாமே "சார்.. இவர் என்ன கிள்றான் சார்.. மீஸ்ஸ்.. இவன் என் சிலேட்டுகுச்சிய எடுத்துட்டு தரமாட்டிங்கிறான் மீஸ்ஸ்.." அப்டிங்கிற மாதிரி தான் எனக்கு தோணுது..
 
நல்ல சங்கீதத்த கேக்கணும், தெரிஞ்சுக்கணும்னா இத மாதிரியான விஷயத்த நோண்டி நொங்கெடுக்காம இருந்தாலே போதும்..
 
நாம புலிகேசியா இல்லாத வரைக்கும் இளையராஜா சார் நமக்கு ஓணாண்டிப் புலவரா தெரியவே மாட்டார் ( புதிய தத்துவம் பத்தாயிரத்தி நூத்தி ரெண்டு...)

கொஞ்சம் Arattai!!! கொஞ்சம் Sharing!!!

எல்லாருக்கும் வணக்கம்!!!...

சத்ரியன் படத்துல அந்த குட்டி பையன், "முடியும்... உன்னால முடியும்" அப்டின்னு சொன்ன உடனே நம்ம கேப்டன் 100 மீட்டர்ஸ்ல ஓடற மாதிரி ஓடி... இஹா...இஹா..அப்டின்னு லெக் கிக் எல்லாம் பண்ணிட்டு கடைசில டப டபன்னு ஷீல்ட சுட்டுத் தள்ளுவாரே..

அந்த சீன பாத்துட்டு... நாமளும் எதாச்சும் பண்ணியே தீரணும்னு ஒரு கொலவெறியோட திரிஞ்சு.. (டயலாக் ரொம்ப லெந்த்தா போகுதுல்ல‌..  OK கட் பண்ணிறுவோம்...)

கடைசில என்ன பண்றது... மீண்டு(ம்) உங்கள் முன் Blogger அவதாரம் எடுத்துருக்கேன்....

பன்னீ....ர் (செ)சல்வம்... நீ வருவன்னு தெரியும்னு.. சொல்ற அத்தனை அண்ணாச்சிகளுக்கும் (அக்காச்சி / தங்கச்சி / தம்பிச்சி எல்லாருக்கும் சேத்து தான்..) மீண்டும் ஒரு நன்றி!!!!!!

ஆனா இந்த தடவ மறுபடி கவிதை எழுதி யாரையும் பயமுறுத்தாம... ஜாலியா.. அதே சமயம் கொஞ்சம் மேட்டரோட எழுதலாம் அப்டிங்கிறது தான் இப்பத்திக்கு என்னோட ரூல்ஸ்...

So... Welcome to கொஞ்சம் Arattai!!! கொஞ்சம் Sharing!!!