Wednesday, April 24, 2013

ஸ்மைல் ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்...

பத்து நாள் முன்னாடி தமிழ் நாட்டோட ரெண்டு முக்கிய கட்சிகளும் ஒரு "போட்டோ"போட்டி போட்டுகிட்டாங்க..


அதாவது மம்மிய பாத்த எம்.எல்.ஏக்கள் எப்படி கும்புடுவாங்க.. தலைவர பாத்த உடன்பிறப்புக்கள் எப்படி கும்புடுவாங்கன்னு... அப்பவே முடிவு பண்ணிட்டேன்.. போட்டோவ வச்சி பண்ற அலப்பறையப் பத்தி தான் அடுத்த பதிவுன்னு...

ஆத்துக்குள்ள அந்தர்பல்டி அடிச்ச பஸ்ஸா இருந்தாலும் சரி, ஆண்ட்ரியாவும் அனிருத்தும் அடிச்ச கிஸ்ஸா இருந்தாலும் சரி...பத்து வரில சொல்லுற விஷயத்த பச்சக்குனு ஒரே ஒரு போட்டோ சொல்லிடும்.. அதான் அதோட மகத்துவமே...

அது மட்டுமில்ல.. Photo அப்டிங்கிறதும் தமிழ் மக்கள் வாழ்க்கைல இரண்டறக் கலந்து போன பல விஷயத்துல ஒண்ணு...

பழைய காலத்துல நம்ம வீட்டுல எல்லாம், என்னமோ காத்தால Breakfastக்கு கால் லிட்டர் Fevicol குடிச்சுட்டு வந்த மாதிரி, வெறப்பா, கேமராகாரன மொரச்சுப்பாத்துட்டு இருக்கிற மாதிரி படம் வீட்டுக்கு ஒண்ணு கண்டிப்பா இருக்கும்...

அப்படி ஆரம்பிச்ச நம்ம Photo ஆர்வம், Poster, Cut Out, Vinyl Banner அப்டின்னு தொடர்ந்து, வாழ்த்தும் அன்பு நெஞ்சங்கள்னு Flex Boardக்கு அம்மை வாத்த மாதிரி எங்க பாத்தாலும் ஒரே Photo மயமா இருக்கு...

நம்ம பயபுள்ளைக Photo ஆர்வத்த இன்னும் தீயா வளத்துவுட்ட பெருமை "Facebook"க்கு உண்டு..

ஒரு குழந்தை பொறந்த உடனே "Blessed with a Baby"னு "Facebook" ல ஆரம்பிக்கிற சேட்டை, அடுத்த வருஷமே "Sattelite TV Channel" ல Photo போட்டு "Song Dedicate" பண்றதுன்னு தொடர்ந்து,

பின் நாட்கள்ல "Somaliya"வுக்கு ஆன்சைட் அனுப்பிவச்சாலும், சுவிட்சர்லாந்துக்கு "Honey Moon" போன மாதிரி "Facebook" ல Photo வ‌ போட்டு "Buddy Rocks in Somalia!!!"னு அலப்பறைய குடுக்குறதாகட்டும்..

மானஸ்தன் தங்கச்சி "அழகுமணி" மாதிரி இருந்தாலும், பொண்ணுங்க Photo போட்டாலே, Chris Gayle செஞ்சுரி அடிச்ச மாதிரி மூணு நிமிஷத்துல முப்பது கமெண்ட் அடிக்கிறதும், தமிழ்கூறு நல்லுலகத்தின் Photo ஆர்வத்துக்கு Facebook செஞ்ச பெரிய சேவை..

IT வந்து தான் Photo ஆர்வத்த வளத்துச்சான்னு நீங்க கேக்கிறது நியாயம் தான்.. Passport Size photo எடுக்கணும்னாலே, அஞ்சாம்ப்புல அஞ்சு அரியர் வச்ச ஆளு கூட அம்பானி வூட்டு மருமவப்புள்ள மாதிரி, கோட்டு போடாம நாம எடுக்கவே மாட்டோமே...

இப்படி ஆரம்பிக்கிற இவிங்க‌ சேட்டை, தமிழகத்தின் இமயமே, கரிகால் சோழனே, கல்விக் காவலரே, அறப்பணிச் செம்மலே அப்டின்னு வேற ரேஞ்சுல ரெக்க கட்டும்.. (அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!!!)

கடைசில கண்ணீர் அஞ்சலி போஸ்டர்ல "மாடவிளக்கே"ன்னு photo வோட கொட்டை எழுத்துல போடற வரைக்கும் photo விடாம வாழ்க்கை முழுக்க சுத்தி சுத்தி வந்துட்டே இருக்கு..

அவ்வளவு ஏன், ஒரு மனுசன் செத்ததுக்கு அப்பறம்கூட, "குண்டு பல்பு, பூ, ஊதுபத்தி"ன்னு அவனுக்கு மரியாதைய வாங்கிக் குடுக்கிற ஒரே விஷயம் photo மட்டும் தான்..

த‌மிழ் சினிமாவுக்கும் இந்த‌ photo வெறிய‌‌ வ‌ள‌த்துவிட்ட‌ பெரிய‌ ப‌ங்கு உண்டு...
மூஞ்சியே பாக்காம‌ ல‌வ் ப‌ண்ற‌ ஹீரோ கூட‌ "நிழ‌ற்ப‌ட‌ம் அனுப்பிடு என்னுயிரே"னு நைசா நூல‌ உட்டு பாப்பாரு.. ஆனா அந்த‌புள்ள வெவரமா "நிஜ‌மின்றி வேறில்லை என்னிட‌மே"னு ப‌திலுக்கு ஆஃப் Kg திருநெல்வேலிய‌ குடுத்து உட்டுரும்..

சுருக்கமா சொல்லணும்னா, ப‌ட‌ம் ரிலீஸ் ஆக‌ லேட்டானா கூட‌ கொற‌ஞ்ச ப‌ட்ச‌ம், photo போட்டு Stamp ஆவ‌து ரிலீஸ் ப‌ண்ண‌லைன்னா சினிமால‌ கெத்து போயிரும்...

photo புடிக்க‌ ந‌ம்மாளுக‌ ப‌ண்ற‌ அல‌ப்ப‌றை இப்ப‌டின்னா, photo புடிக்கிற‌வ‌ங்ய‌ ப‌ண்ற‌ கொடுமை இன்னும் ப‌டு காமெடி..

க‌ல்யாண‌த்துக்கு அட்வான்ஸ் குடுக்கும்போதே, "ஹோட்ட்ல்ல..சாருக்கு ரெண்டு இட்லி ம‌ட்டும் தானா, இல்ல‌ தோச‌, காப்பி எதாவ‌து"னு கேக்க‌ற‌ மாதிரி, photo ம‌ட்டும் தானா, வீடியோ ஆல்ப‌ம் உண்டா..ஆல்பத்துல கரிஷ்மா போட்டுரலாமா.. அவங்க தங்கச்சி கரீனாவ போட்டுரலாமானு கேட்டு டெர்ர‌ர‌ ஸ்டார்ட் ப‌ண்ணுவாங்ய‌..

அஞ்சு ம‌ணி நேர‌ம் அக்கினி குண்ட‌த்துக்கு ப‌க்க‌த்துல‌ உக்கார‌ வ‌ச்சு அவிச்சு எடுத்த‌துக்க‌ப்புற‌ம் வ‌ந்து.. "சார்.. அப்டியே ஒரு ரொமான்டிக் லுக் ஒண்ணு உடுங்க‌.. மேட‌ம்.. உங்க‌ Chin ன‌ சார் Shoulder ல‌ வ‌ச்சு, அப்டியே Turn ப‌ண்ணி... (டேய்..டேய்..டேய்.. உங்க‌ள‌ எல்லாம் கும்பீபாக‌த்துல‌ த‌ள்ளி கொல்ல‌ணும்டா...)

க‌டைசில‌ photo டெலிவ‌ரி எடுக்க‌ போகும்போது தான் ஹைலைட்டே.. உள்ள‌ போகும்போது South Africaவுக்கு போன காந்தி மாதிரி போற ஆளுகூட, உள்ளவச்சு மொத்த "காந்தி"யையும் உருவி எடுத்ததுக்கு அப்புறம், உப்பு சத்தியாகிரத்துக்கு போன காந்தி மாதிரி வெளில வருவாரு..

இத எழுதும் போதே Stephen Leacock எழுதுன "With the Photographer" நினைவுக்கு வருது..

Leacock ஒரு ஸ்டுடியோவுக்கு photo எடுக்க போவாரு.. அங்க இருக்குற Photographer, குனி, நிமிரு, சிரின்னு அவர படுத்தி எடுத்துட்டு மூணு நாள் கழிச்சு வான்னு சொல்லுவான்.. இவரும் 3 நாள் கழிச்சு போகும் போது ஒரு போட்டோவ அவருகிட்ட குடுப்பான்...

அவரு அதப்பாத்து ஷாக் ஆகி இது என்ன மாதிரியே இல்லையே இந்தப் புருவம் வேற மாதிரி இருக்கேன்னு கேப்பாரு.. அதுக்கு அவன்.. ஆமாம் எனக்கு உன் புருவம் சுத்தமா புடிக்கல அத "Alter" பண்ணிட்டேன்.. இப்ப சூப்பரா இருக்குல்ல??.. இத நாங்க "Delphide"னு சொல்லுவோம் அப்டிம்பான்..

இந்த தாடை என்னோடத மாதிரியே இல்லையேம்பாரு.. அதுக்கும் அவன்..ஆமா..Photoக்கு அது எடுப்பா இல்ல.. அதையும் "Alter" பண்ணிட்டேன்.. இப்ப சூப்பரா இருக்குல்ல??.. இத நாங்க "Sulphide"னு சொல்லுவோம் அப்டிம்பான்..

அதுக்கு Leacock ஒரு பதில் சொல்லுவாரு..

 "இந்த முகம் என்னோடது.. அது எப்படி இருந்தாலும் அது என்னுடையது.. அத மாத்த வேண்டிய எந்த அவசியமும் இல்ல... இங்க நான் Photo எடுக்க வந்ததே.. நான் இறந்த பிறகு என் நினைவாக என் நண்பர்களிடம் இருக்கத்தான்.. உனக்கு வேணும்னா உன் Photoவ எடுத்து, அதுல "Delphide, Sulphide, Oxide, Bromide, Cowhide" எந்த கருமத்த் வேணும்னாலும் பண்ணிக்கோனு சொல்லிட்டு வெளில வருவாரு..

உண்மையில் இந்த Photo பலருக்கு ரொம்பவே சென்டிமென்டான விஷயம்.. இசைஞானி இளையராஜா, தினமும் ரெக்கார்டிங் போறதுக்கு முன்னாடி தன்னோட அம்மா Photo வுக்கு "மம்மி டாட்டா"னு சொல்லிட்டு தான் கெளம்புவாரு.. அம்மா நிஜமென்றால்..Photo எடுத்த தருணம் நிஜமென்றால்.. அந்த Photoவும் நிஜம்னு அதுக்கு அர்த்தம் சொல்லுவாரு..

நடிகர் சிவகுமார் ஒரு பேட்டில, "ஒரு லட்சம் ஃப்ரேம்லயாவது என் Photo இருக்கும்.. ஆனா சின்ன வயசுல என்னோட ஸ்கூல்ல எடுத்த என்னோட குரூப் போட்டோ என்கிட்ட இல்ல"ன்னு உருக்கமா சொன்னாரு.. இப்படி Photo பலருக்கும் நிஜத்துக்கு ரொம்ப நெருக்கத்துலயே இருக்கு..

ஆழ‌மாவும் அழுத்த‌மாவும் சொல்ல‌ணும்னா... தோட்டத்து ஆப்பிள உதட்டுக்கும், தோட்டாக்களை மார்புக்கும் தின்னக் கொடுத்த ஒரு சின்னப் பையனோட ஒரே ஒரு Photo தான் ஒட்டு மொத்த‌ த‌மிழ்நாட்டையே வீதிக்கு வந்து போராட‌ வ‌ச்சிருக்கு...



எல்லாம் ச‌ரி.. டாடீ.. எனக்கு ஒரு டவுட்டு.....

விஜய் Photo போட்ட ஸ்டாம்ப "தபால் தளபதி"னு தான சொல்லனும்.. அப்பறம் ஏன் தபால்"தல"னு சொல்லறோம்... சொல்லுங்க டாடி சொல்லுங்க.. சொல்லுங்க டாடி சொல்லுங்க..

Monday, April 1, 2013

என்ன சித்தப்பு.. சாப்டீங்களா?????

நடிகவேள் எம்.ஆர்.ராதா ஒரு படத்துல சொல்லுவாரு "வெள்ளக்காரன் நீராவில ரயில் எஞ்சின செஞ்சு ஊரெல்லாம் உடறான்.. நம்மாளுக என்னடான்னா அதே நீராவில புட்டு செஞ்சு உள்ள உடறான்..னு...

இது ஒரு நையாண்டியா இருந்தாலும்..சாப்பாட்டு விஷ‌ய‌த்துல‌ ந‌ம‌க்கு இருக்குற Creativity‌ யே த‌னி தான்..

தேவர் மகன் சிவாஜி ஸ்டைல்ல சொன்னா, பெருமாள் கோயில்ல சக்கரப்பொங்கல் குடுக்கறான்னு கூப்புட்ட உடனே, குடுகுடுன்னு ஓடிப் போய் மொத வரிசைல நின்னாம் பாரு..அதுல முக்காவாசிப்பய நம்ம பயதேன்... அவனப் போயி ரயில உடுறான்னா எப்புடி உடுவான்.. ரவுண்டு கட்டி அடிச்சிட்டு ஏப்பந்தேன் உடுவான்...



Fridge கண்டுபுடிக்கும் முன்னாடியே புளியோதரைய கண்டுபுடிச்சு ஒரு மாசம் வச்சு அடிச்சதும் அவிங்க்ய தான்.. Fridge கண்டுபுடிச்சதுக்கப்புறம் கருவாட்டு கொழம்ப ஒரு வாரம் உள்ள வச்சு Combination ல அடிக்கலாம்னு கண்டுபுடிச்சதும் அவிங்க்ய தான்..

மத்த எடத்துல எல்லாம் சிக்கன் மஞ்சூரியா, மட்டன் கோலாபூரின்னு ஊர் பேர்ல ஃபேமஸான ஐட்டம் அங்க ஒண்ணும் இங்க ஓண்ணுமா இருக்கும்..

ஆனா, காஞ்சிபுரம் இட்லி, மதுர வீச்சு புரோட்டா, விருதுநகர் கொத்து புரோட்டா, ராஜபாளையம் கோலா உருண்ட, ஆம்பூர் பிரியாணி, திருநெல்வேலி அல்வா, திருவையாறு அசோகான்னு தமிழ்நாட்டுல 234 தொகுதிக்கும் எதாச்சும் ஒரு ஐட்டத்த கண்டுபுடிச்சு அத‌ Famous ஆக்குனது மட்டுமில்லாம, கல்யாணம், காதுகுத்துன்னு எல்லா எடத்துலயும் அத கட்டு கட்டுன்னு கட்டுனதுலயும் நம்மாளு Creativity யாருக்கும் வராது...

அந்த அளவுக்கு சாப்பாட்டுக்கும் அவனுக்கும் எப்போதும் ஒரு லிங்க் இருந்துட்டே இருக்கும்..

சாப்பாட்ட பக்தனுக்கு குடுத்தா பிரசாதம், பள்ளிக்கூடத்துல குடுத்தா அது சத்துணவு, கட்சிக்காரனுக்கு குடுத்தா அது எலக்ஷன் பிரியாணி, கடவுளுக்கு குடுத்தா அது நிவேதனம், இல்லாதவனுக்கு குடுத்தா அதுக்கு பேரு பிச்ச.. ஆனா இருக்குறவனுக்கே குடுத்தா அதுக்கு பேரு தான் TREATTU!!!!

"தலக்கறி கொளம்புன்னா தங்கச்சி வீட்ல தான் சாப்புடணும்னு சொல்லுவேன்.. அதுலயும் குறும்பாடு...ம்ம்ம்ம்.. கேக்கணுமா" அப்டின்னு பாசத்த காட்டுறதும்..

எலையில விழுந்த Leg Piece சின்னதா இருந்தா (அதென்ன ரம்பா தொடையாடா பெருசா இருக்க??) கோவத்துல வெரண்டு பங்காளியோட சங்க கடிக்க போறதும்...

அப்புறம் சமாதானமா போயி, "டேய் நீ கொஞ்ச நேரத்துக்கு முந்தி சத்தம் போட்ட பயலாச்சேடா.. இங்க என்னடா சாதம் போட்டுகிட்ருக்க.." அப்டின்னு நாமளே மண்ட காஞ்சு போற அளவுக்கு மறுபடி பாசத்துல கட்டிபொரள்றதும்.. அவனுக்கு எல்லாத்துக்குமே சாப்பாடு தான் ஒரு காரணகர்த்தா...



சாப்பாட்டு ஐட்டத்த வச்சே ஒரு தமிழனோட கல்வித்தகுதிய என்னன்னு கண்டுபுடிச்சுடலாம்..

கத்திரிக்கா, வெண்டக்கா, சின்ன வெங்காயம் னு சொன்னா, அவன் பஞ்சாயத்து ஸ்கூல் ல படிச்சவன்னு அர்த்தம்..

அதையே Brinjal, Ladies finger, Onion னு சொன்னா அவன் இங்கிலீஷ் மீடியத்துல படிச்சவன்னு அர்த்தம்...

அதையே Aubergene, Oakra, Shallots னு சொன்ன அவன் ஆன்சைட்டுக்கு போயிட்டு வந்த IT Employee னு அர்த்தம்..

அவ்வளவு ஏன்.. ஒட்டுமொத்த திராவிட இனத்தின் வரலாறையே ஒரு கரண்டி அரிசி மாவுல சொல்லிறலாம்..


அத கொழாயில போட்டா அது கேரளா புட்டு,
கிண்ணத்துல ஊத்துனா அது தமிழ்நாட்டு இட்லி,
கல்லுல ஊத்துனா அது தோசை..
அதுலயே கொஞ்சம் கார சட்னிய தடவுனா அது ஆந்திரா கார தோச, உள்ளுக்குள்ள கொஞ்சம் உருளக்கிழங்க ஒளிச்சு வச்சுட்டா அது கர்நாடகா மசால் தோச...

இன்னும் புழிஞ்சா இடியாப்பம், புடிச்சா கொழுக்கட்டை, ஊத்துனா ஊத்தப்பம், ஒன் சைடுன்னா அது ஆப்பம்னு நம்மாளோட Creativity நாடு நகரமெல்லாம் கடந்து பீடுநடை போடும்..

நம்மாளோட Creativityக்கு தீனி போட்டதுல தமிழ் சினிமாவோட பங்கும் கனிசமானது..

ஹோட்டல்ல கூட்டம் அதிகமானா நம்ம அழகன் மம்மூட்டி சொல்ற "ரெவா" உப்புமா, வீட்டுக்கு திடீர் விருந்தாளி வந்தா "இட்லி உப்புமா", ரொமான்ஸ் பண்ண‌ பொண்டாட்டிக்கு டிஃபன் கேரியர்ல மல்லிகப்பூ, அஜால் குஜால் மேட்டருக்கு அல்வா..

இது போக இட்லில பீர் ஊத்தி அடிக்கிறது, அப்பளத்துல பாயசத்த ஊத்தி அடிக்கிறதுன்னு, ஏகப்பட்ட அரிய அரிய அரிய அரிய கண்டுபிடிப்புகள,சாப்பாட்டு ஐட்டங்கள வச்சே இந்த‌ தமிழ்கூறு நல்லுலகத்துக்கு கத்துக்குடுத்துருக்கு...
.
இதென்ன பெரிசு, இதவிடப் பெரிய மேட்டர் ஒண்ணு இருக்கு நம்மாளு Creativityக்கு அடையாளமா....

ஒரு தமிழ்ப் புலவர்கிட்ட அவரோட சமையல்காரன், மதிய சாப்பாட்டுக்கு என்னங்க செய்யட்டும்னு கேட்டப்போ..

அவரு "சற்றே துவையல் அரை.."ன்னாரு..
மறுபடி கூப்புட்டு, "தம்பி, ஒரு பச்சடி வை.."ன்னு சொன்னாரு..
மறுபடி கூப்புட்டு, "வற்றல் ஏதேனும் வறுத்து வை.."ன்னாரு..
அடுத்து, "குற்றமில்லை, காயமிட்டு கீரை கடை..." அப்டின்னாரு..
மறுபடி கூப்புட்டு, "கம்மெனவே, மிளகுக்காய் அரைத்து வைப்பாய் கறி.." அப்டின்னாரு..

அவன் போயிட்டான்.. ஆனா இதுல என்ன‌ Twist அப்டின்னா, இவரு இப்ப சொன்ன மொத்த மெனுவையும் சேத்தா...அது ஒரு வெண்பா...

மத்தியான சாப்பாட்டு மெனுவக்கூட வெண்பால சொல்லணும்னு நம்மாளுக்கு தோணிருக்குன்னா அவனோட‌ Creativityக்கு அத விட என்ன பெரிய உதாரணம் வேணும்..
அந்த நேரிசை வெண்பா இது தான்..

சற்றே துவையலரை, தம்பியொரு பச்சடிவை
வற்றல் ஏதேனும் வறுத்துவை- குற்றமிலை,
காயமிட்டு கீரைகடை, கம்மெனவே மிளகுக்
காயரைத்து வைப்பாய் கறி!"


Creativityயின் உச்சம் தொட்டதுக்கு ஒரு கடைசி உதாரணம்....

ரத்தக் கண்ணீர் படத்துல எம்.ஆர். ராதா "கறி சோறு இருந்தா போடு..ன்னு" பிச்சை எடுப்பாரு.. அவருக்கு எஸ்.எஸ்.ஆர் சீரியசா பதில் சொல்லுவாரு "நாங்க அசைவம் சாப்புடுறதில்ல.. நாங்க ஜீவ காருண்ய கட்சியில சேந்திருக்கோம்".. அப்டின்னு..

அதுக்கு ஒரு பஞ்ச் அடிப்பாரு ராதா..

"அடிச‌க்க‌.... க‌ட்சி.... க‌ட்சி... திங்கிற‌துக்கு கூட‌ க‌ட்சி வெச்சுகிட்டீங்க‌ளாடா.... அது ஒண்ணுக்கு தான் இதுவரைக்கும் இல்ல.. இனி இந்த‌ நாடு உருப்புட்டா மாதிரி தான்டா ய‌ப்பா...." அப்டின்னு..


எதுலயுமே வித்தியாசத்த காமிக்கிற ஆளுங்க நாம தான்.. அதுனால தான்.. "காவிரி விவசாயி எலிக்கறி திங்கிறான்னும் TVல பப்ளிகுட்டி பண்ணிக்கிறோம்.. இன்னொரு பக்கம் சன்டே ஈவினிங் டைம்ல, அந்த ஸ்க்விட்ட Yogurtல‌ Marinate பண்ணி,  Egg Wash குடுத்து, Bread Crumbs ல‌ roll பண்ணி, pan ல‌  stirr fry பண்ணி... Texture, Consistancy, Shape... (ஸ்ஸ்ஸ் இப்பொவே கண்ண கட்டுதே)... அப்டின்னு Kilometer  கணக்குல Peter உட்டும் பப்ளிகுட்டி பண்ணிக்கிறோம்..

இத‌ எழுதும்போதே ஒரு ப‌ழைய‌ பாட்டு நியாப‌க‌த்துக்கு வ‌ருது....

ச‌மைய‌லெல்லாம் க‌ல‌க்குது.. அது ச‌ம‌த்துவ‌த்த‌ வ‌ள‌க்குது....
சாதிம‌த‌பேத‌மெல்லாம்... சோத்த‌க்க‌ண்டா ப‌ற‌க்குது!!!!!!

ஆமா... பெருமையா ஒரு டயலாக் சொல்லி முடிப்போம்..

 "ரவீ... இந்த ஓட்டல்ல பேப்பர் ரோஸ்ட் சாப்டா லிவருக்கு ரொம்ப நல்லது...."