Tuesday, August 26, 2014

Dr. ஆல் இன் ஆல் அழகுராஜா MBBS

வியாதில பல வகை உண்டு... சிலது நாட்டு வைத்தியத்துல குணமாகும்.. சிலது இங்கிலிஷ் வைத்தியத்துல குணமாகும்... சில வியாதிக்கு மருந்தே கெடையாது.... அதுல ஒண்ணு தான் இப்போ நாம பாக்கப் போறது...

"Ohh... okok, URTI.. Phenyl proponolamine Hydrobromide Tablets ரெண்டு நாள் எடுத்துக்கிட்டு Nasivion Nasal drops டெய்லி 3 times போட்டுகோங்க... தேவைப்பட்டா Nebulizer கூட போட்டுக்கலாம்.. Your child will be all right in 2-3 days..."

மேல இருக்குற டயலாக்க படிச்சதும் இது யாரோ Child Specialist டாக்டர் சொன்னதுனு நீங்க நெனைக்கலாம்... ஆனா அதான் இல்ல.. அவ்வளவு ஏன் இத சொன்னது ஒரு டாக்டரே இல்ல... நம்மள மாதிரி ஒரு சாதாரண ஆள் தான்...

தற்செயலா என்னோட கையில இருந்த மருந்து சீட்ட பாத்துட்டு அந்த நபர் சொன்ன டயலாக் தான் நீங்க மேல படிச்சது...

நான் சொன்ன வியாதி இதான்.. "வியாதிக்கு வாலண்டியரா வந்து மருந்து அல்லது அட்வைஸ் குடுக்குற வியாதி...."

அட அவரு உன் நல்லதுக்கு தானப்பா சொல்றாரு.. இதுல என்னத்த குத்தம் கண்ட நீ...  அதுபோக, அவரு கரெக்டான மருந்த சொல்லி இருக்கலாம்ல.... அப்டின்னு கேக்கலாம்.. இதுல ரெண்டு விஷயம் நாம தெரிஞ்சுக்கணும்..

(1) இதுக்கு அடிப்படை என்ன ?
(2) இது சரியா தப்பா?

மொதல்ல URTI அப்டின்னா என்னன்னு சொல்லிடுறேன்... Upper Respiratory Tract Infection... அதாவது, தொண்டைக்கு மேல இருக்குற சுவாச உறுப்புகள்ள ஏற்படுற நோய்தொற்று (அ) Infection.. ஒரே வார்த்தைல சொல்லணும்னா "ஜலதோஷம்.."

இது எங்கிருந்து ஆரம்பிக்குது..... பழைய காலத்துல கைவைத்தியம்னு வீட்டுல இருக்கிற துளசி, ஓமம், சுக்கு, மஞ்சள், வேப்பிலைனு அருகாமைல கெடைக்கிற ஒரு பத்து பதினஞ்சு பொருள வச்சுகிட்டே பெரும்பாலான வியாதிக்கு First Aid மாதிரி ஒரு Solution சொல்லிடுவாங்க... அது மனுஷன் சுத்தமான காத்த சுவாசிச்சு, சுகாதாரமான வீட்டு சாப்பாட்ட மட்டும் சாப்ட்டு, ஒரு நாளுக்கு 9 மணி நேரம் தூங்குன காலம்... அதுலயே முரட்டுத்தனமா அரைகுறை ஐடியா எல்லாம் குடுத்த ஆட்கள் உண்டு...

எங்க ஊர்ல ஒரு அம்மாவுக்கு காதுவலி வந்துருச்சு.. அது பக்கத்து வீட்டு அம்மா கிட்ட ஐடியா கேட்ருக்கு..அந்தம்மா.. காதுவலின்னா காதுல மண்ணெண்ணெய் ஊத்துனா சரியாயிடும்னு ஐடியா குடுத்து, அதக்கேட்டு ஊத்துன அம்மாவுக்கு ஒரு சைடு ஸ்பீக்கரே அவுட்டு... (அதென்ன காதா இல்ல பம்படிக்கிற ஸ்டவ்வா??)

இதே URTI க்கு நம்மூர் பக்கம் ஒரு வைத்தியம் உண்டு... மஞ்சள் கிழங்குல பஞ்சு சுத்தி, அதை வேப்பெண்ணெய்ல நனைச்சு வெளக்குல கொளுத்தி, நல்லா எரியும்போது கப்புனு அணைச்சு அந்தப் புகைய உறிஞ்ச சொல்லுவாங்க...

மஞ்சள், வேப்பெண்ணெய் இது ரெண்டுமே Antibiotic னு சொல்லுவாங்க‌... சந்தேகமே இல்ல...  ஆனா பஞ்சுல கொளுத்தி நெருப்பு எரியும்போது, Carbon di Oxide, Nitrous Oxide ன்னு ரெண்டு மோசமான வாயுவ வெளிப்படுத்தும்.. இது வந்த நோய்தொற்ற குணப்படுத்துறதவிட Induce பண்ணுறது தான் அதிகம்... ஆனா நம்ம ஊரு ஆளுங்களுக்கு இதமாதிரி ஐடியா குடுத்துட்டா "Dr. ஆல் இன் ஆல் அழகுராஜா MBBS"ன்னு ஒரு நெனப்பு தானா வந்துரும்... காலமாற்றமும் Technology வளர்ச்சியும் மருந்ததான் மாத்தி இருக்கே தவிர நம்மாளுங்க மனோபாவத்த மாத்தவே இல்ல..

30 வருஷத்துக்கு முந்தி மஞ்சள நெருப்புல கொளுத்தி ஊதுன‌ ஆளுங்க பத்து பதினஞ்சு வருஷத்துக்கு முந்தி தலவலிக்குதா அனால்ஜின்னோ நேவால்ஜின்னோ போடு... ஜலதோஷமா Vicks Action 500 அல்லது  D'Cold போடு சரியாபோயிடும்னு ஐடியால அடுத்த கட்டத்துக்கு போக ஆரம்பிச்சாங்க..

ஆனா இவங்க யாருக்குமே தெரியாது "Analgin, Novalgin, Vicks Action 500, D'Cold" இதெல்லாமே இந்திய மருத்துவ கழகத்தால தடை செய்யப்பட்ட மருந்து அப்டின்னு... இது வியாதியோட ரெண்டாவது நிலை...

சமீபத்துல ஊருக்கு போயிருந்த போது ஒரு பெரியவரு "Blood Sugar Meter" (ரத்தத்துல சக்கரையோட அளவ சொல்ற மெஷின்) கையில குடுத்து Assemble பண்ணிக்குடுன்னாரு... நமக்கு ஒண்ணும் தெரியாம திருதிருன்னு முழிக்க.. "நீயெல்லாம் என்னத்த படிச்ச... சுகர் கூட செக் பண்ணத் தெரியல... உங்கப்பால்லாம் உன்னைய கஷ்டப்பட்டு படிக்கவச்சாரு"னு கழுவி ஊத்திட்டாரு... நாம படிச்ச படிப்புக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்னே புரியல.. ஆனா அவர பொருத்த வரைக்கும் நான் "Dr. ஆல் இன் ஆல் அழகுராஜா MBBS"ன்னு ஒரு நெனப்பு... (ரைட்டு.. விடு...)

இதோட மூணாவது நிலை அல்ல‌து Technically Advanced நிலை தான் இந்த பதிவோட முதல் Para ல நீங்க படிச்ச நம்ம நண்பரோட ஐடியா...

ஆகமொத்தத்துல கோளாறு மருந்துலயோ அல்லது மருத்துவத்துலயோ இல்ல.. அத சகட்டுமேனிக்கு அடிச்சுவிடுற நம்ம மனோபாவத்துல தான் இருக்கு... ஏன்னா நாமதான் "Dr. ஆல் இன் ஆல் அழகுராஜா MBBS" ஆச்சே....

அடிப்படை என்னங்கிற மொதல் கேள்விக்கு பதில் தெரிஞ்சிடுச்சு.. அடுத்து இது "சரியா / தப்பா" அப்டிங்கிற ரெண்டாவது கேள்விக்கு... ஒரு சின்ன Flashback...

TIFFA  - (Targeted imaging for fetal anomalies).. கர்ப்பிணியோட வயித்துல இருக்குற 5 மாத குழந்தையோட வளர்ச்சிய (அ) குறைபாட்ட ஆராயறதுக்காக எடுக்குற Scan.. இன்னிக்கு பிரபலமா எல்லா டாக்டரும் 5வது மாதத்தில் எழுதிக் குடுக்குற ஒண்ணு...

ஒரு IT Professional தன்னுடைய மனைவியோட TIFFA ரிப்போர்ட்ட வாங்கி பரபரப்புல நேரா அதுல இருக்குற comma semicolon ஒண்ணு விடாம நெட்டுல போட்டு தேட ஆரம்பிச்சாரு... முதல் குழந்தையாச்சே.. எந்த தகப்பனுக்கும் உள்ள ஒரு excitement... ஆனா அவருக்கு நெட்டுல இருந்தத படிக்க படிக்க பயத்துல முகமெல்லாம் வெளிறிப் போச்சு.. அடுத்த பத்தாவது நிமிஷம் வீடு.... இருபதாவது நிமிஷம் டாக்டர் அப்பாயின்மெண்ட்.. அரைமணி நேரத்துல டாக்டர் முன்னாடி வந்து உக்காந்தாச்சு...

ரிப்போட்ட வாங்கிப் படிச்ச டாக்டர்.. "OK Good.. It's a normal TIFFA.. She is alright.." அப்டின்னாரு...

நம்மாளு.. "இல்ல டாக்டர்.. அதுல மூணாவது வரில.... " அப்டின்னு இழுக்க..

மொத்த ரிப்போட்டையும் மறுபடி ஒரு தடவ படிச்சிட்டு... "I have read it again completely.. It is pretty normal..." அப்டின்னாரு...

பொறுக்கமுடியாம... "இல்ல டாக்டர்.. I am an IT Professional.. I checked this report line by line in internet... இதுல எதெதோ anomalies இருக்குறதா வருது... நீ...ங்...க...." அவரால முடிக்க முடியல...

ஒரு புன்னகையோட அந்த டாக்டர் சொன்னாங்க... "This can be correctly interpreted only by a Gynecologist...not by an IT Professional..." அது மட்டுமில்ல நீங்க எல்லா விஷயத்துக்கும் நெட்டுல தேடுறது உங்கள தேவையில்லாத குழப்பத்துல தள்ளுமே தவிர எந்த தீர்வும் தராது...

உங்களுக்கு புரியற மாதிரி சொல்லணும்னா... நம்ம ஊர்ல சாதாரணமா நடந்து போயிட்டு இருந்தவரு.. திடீர்னு வயித்தபுடிச்சுகிட்டு விழுந்தாரு.. செத்துபோயிட்டாருன்னு சொல்லுவாங்க.. எத்தன பேருக்கு தெரியும் அவருக்கு வந்தது appendicitis அப்டின்னு... கிராமத்துல ரத்தரத்தமா வாந்தி எடுத்து செத்த ஆளுங்கள காட்டேறி அடிச்சதா தான் சொல்லுவாங்க.. எத்தன பேருக்கு தெரியும் அவருக்கு Cancer அப்டின்னு.. இத சாதாரண ஆளுங்களால சொல்லமுடியாது... ஒரு டாக்டரால மட்டும் தான் சொல்ல முடியும்...  Don't worry.. She is alright and the scan is very normal.."

உணர்ச்சிவசப்பட்டு கண்ணெல்லாம் கலங்கிடுச்சு நம்மாளுக்கு...  ஆக இது "சரியா / தப்பா???" அப்டிங்கிற ரெண்டாவது கேள்விக்கும் பதில் தெரிஞ்சாச்சு...

ஒவ்வொரு வியாதிக்கும் மருந்து அப்டிங்கிறது நோயோட காரணி, அதோட தீவிரத்தன்மை, நோயாளியோட வயசு, உடல்நிலை அப்டின்னு ஏகப்பட்ட காரணங்கள பொருத்து மாறுபடும்... அதான் வள்ளுவரே சொல்லிருக்காரே :

"நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்" அப்டின்னு....

Thursday, August 21, 2014

ஐ யாம் பிட்டீன் லாக் ஓனர்!!!

நாளை உலகம் இல்லை என்றானால்னு லவ் பேர்ட்ஸ் படத்துல ஒரு பாட்டு வருமே, அது மாதிரி போன வாரம் திடீர்னு ஒரு கனவு... "நாளை IT இல்லை என்றானால்" அப்டின்னு...

இல்லைன்னா என்னாகும்?? ஷாப்பிங் மாலுக்கெல்லாம் வேலை இல்ல... Mayajal, Cine planet க்கு வேலை இல்ல... Weekend பர்ச்சேஸுக்கு வேலை இல்ல, KFC, Subway, Domino's வகையறாக்களுக்கு வேலை இல்ல... Snow Bowling, Gokarting கிளப்புக்கெல்லாம் வேலை இல்ல...  "I like the way you are carrying yourself"னு புதுசா வந்த அப்பரசண்டிகிட்ட கடலைய போட டீம் அவுட்டிங்குக்கு வேலை இல்ல....

இவ்வளவுக்கும் வேலை இல்லன்னு சொன்ன நமக்கே வேலை இல்லையேன்னு எந்திரிச்சு உக்காந்ததுக்கு அப்புறம் தான் மூளைக்கு உறைக்குது...

இதெல்லாம் இல்லாம போனாலும் home loan, personal loan, mobile bill, cable connection, internet bill னு மூச்சு தெணற தெணற அடிக்கிற கடனெல்லாம் அப்டி அப்டியே இருக்குமே.. கிரிகாலா எப்படிடா சமாளிக்க போறன்னு ஒரே திங்கிங்...

கனவு கண்டு எந்திரிச்ச உடனே தான் மனுசப்பய மூளை "வாங்கஜி, வாங்கஜி"ன்னு ஃப்ரெஷ்ஷா இருக்கும்... சரி அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிக்க ஆரம்பிச்சு.. ஓகே... பீசா கார்னர் ஆரம்பிக்கலாம்னு ஒரு ஐடியா...(பிச்சை எடுக்குற நெலமை வந்தாலும் பீசாவையும் நம்மளையும் பிரிக்க முடியாதே..) அப்புறம் தான் தோணிச்சு பைசாவே இல்லைன்னா எவன்டா பீசாவ திங்க வருவான் அப்டின்னு...

சரி அதவிடு, வேற என்ன செய்யலாம்னு ஆரம்பிச்சு பார்பர் ஷாப்புலேர்ந்து பானிபூரி வண்டி வரைக்கும் யோசிச்சு ஒண்ணுமே செட்டாகாதுன்னு போயிட்டு இருக்கும்போது தான் டி.வில "மரியாதை ராமண்ணா" தெலுங்கு படம் ஓடிகிட்டு இருந்துச்சு... அத பாத்த உடனே பளிச்சுனு மைண்டுல ஒரு யோசனை... நாம ஏன் ஒரு மாட்டு பண்ணை ஆரம்பிச்சு பால் பிசினஸ் பண்ணக் கூடாது அப்டின்னு... சின்ன வயசுல எக்ஸாம்ல வாங்குன மார்க்க பாத்துட்டு அப்பா வேற "நீயெல்லாம் மாடு மேய்க்கத்தான் லாயக்கு"ன்னு சொல்லிருக்காறேன்னு ஸ்ட்ரைக் ஆச்சு...

நமக்கு பேரு வச்சப்பவே இதெல்லாம் யோசிச்சு தான் வச்சிருப்பாங்யளோன்னு ஒரு டவுட்டு எனக்கு எப்பவுமே உண்டு.. இருந்தாலும், சரி பால் பிசினஸ் ஆரம்பிச்சு அண்ணாமலை ரஜினி மாதிரி ஆயிடலாம்னு தீர்மானம் போட்டாச்சு...

அப்புறம் என்ன? முழிச்சுகிட்டே ட்ரீம்ஸ் தான்..... பத்து வருஷமா ப்ராஜக்டுல டார்ச்சர் குடுத்த எல்லாரையும் மனசுக்குள்ள சரத்பாபுவா நெனச்சுகிட்டு... "இந்த நாள்.. உன் டைரில குறிச்சு வச்சுக்கோ"னு தொடைய தட்டி சபதம் எல்லாம் போட்டு கொண்டாடியாச்சு...


அடுத்து என்ன... planning தான்... ஒரு மாடு 20 ஆயிரம்... பத்து மாடு வாங்குனா 2 லட்சம்...

தீவனம் இதெல்லாம் ஒரு மாசத்துக்கு 25 ஆயிரம்னாலும் வருஷத்துக்கு 3 லட்சம்...

அதுபோக இந்த மாட்டையெல்லாம் பாத்துக்கிற ஆளுங்க ரெண்டு பேருக்கு சம்பளம் ஒரு வருஷத்துக்கு ஒண்ணேகால் லட்சம்...

ஆகமொத்தம் ஒரு வருஷத்துக்கு ஆறேகால் லட்சம் முதலீடு...

 ஒரு லிட்டர் பால் 42 ரூவா.. ஒரு நாளுக்கு பத்து மாடும் சேர்ந்து 100 லிட்டர் கரந்தாலும் 4200 ரூவா... மாசத்துக்கு ஒண்ணேகால் லட்சம்... அப்ப வருஷத்துக்கு கிட்டத்தட்ட 15 லட்சம்....

இது போக மாடு குட்டி போட்டா அது தனி லாபம்....

15 லட்சமா... ஐய்யோ... ஐ யாம் பிட்டீன் லாக் ஓனர்.... இந்த தெரு என்ன வெலைன்னு கேளுடா... கொறஞ்ச பட்சம் இந்த ரோடாவது என்ன வெலைன்னு கேளுடான்னு மனசு அரியானா லாட்டரி அடிச்ச கவுண்டமணி மாதிரி ஒரே அலப்பரை..


சரி நம்ம திட்டத்த யாருகிட்டயாச்சும் சொல்லி ஆலோசனை கேக்கலாமேன்னு நெனச்சப்பதான் ஊர்ல இருந்து அப்பாவும் அம்மாவும் வந்தாங்க... இதுக்கு நடுவுல ட்ரீம்ஸ்ல அண்ணாமலை ரஜினி பணக்காரர் ஆகி குடும்பத்தோட உக்காந்து குலாப் ஜாமூன் அடுக்கிட்டு இருக்காரு...

விக்ரமன் சார் படத்துல வர்ர மாதிரி ஃபேமிலி சாங் வேற... ஆனா எனக்கு அப்போ தெரியாது அது கிளைமாக்சுக்கு முன்னாடி வர்ர சாங் அப்டின்னு...

சரி, ஈன்ற பொழுதின் பெரிதுவக்க போற தாய் ஆச்சேன்னு நம்ம திட்டத்த explain பண்ணுனா....

 "அட கூறு கெட்டவனே.. எந்த மடப்பயடா உனக்கு இந்த ஐடியாவ சொல்லிக்குடுத்தவன்"னு சொல்லி சிரிக்க ஆரம்பிச்சுட்டாங்க...

"சரி சிரிச்சது போதும்... என்ன குற்றம் கண்டாய்... சொற்குற்றமா அல்லது பொருட்குற்றமா"ன்னு வெவரத்த கேட்டதுக்கு... என்கிட்ட சொன்னத ஊர்ல எவன் கிட்டயாச்சும் சொல்லியிருந்தா "தம்பி என்ன ஜெயில்ல இருந்துட்டு வறீங்களா??? "ன்னு தான் கேட்பான்"னு மேலும் சிரிக்க ஆரம்பிச்சுட்டாங்க...

But whyyyyyyyyy?

அதுக்கு காரணத்தையும் அவங்களே சொல்ல ஆரம்பிச்சாங்க... "பின்ன என்னடா... நீ ஊரவிட்டு சிட்டிக்கு வந்து பத்து வருஷத்துக்கு மேல ஆச்சு... இன்னிக்கு நெலவரம் என்னன்னு தெரியாம கதைய உட்டுகிட்டு இருக்க...

1) 10 மாடு வாங்க திட்டம் போட்டியே... மாட்ட வாங்கி எங்க கட்டுவ????? அதுக்கு எடம் வேணாமா??? அதுக்கு  lease advance எவ்ளோ தெரியுமா???

2) இன்னிக்கு தேதிக்கு கிராமத்துல பெரிய டிமாண்டே வெக்கலுக்கு தான்... யாரும் கையால அறுவடை செய்யிறதில்ல... எல்லாமே மிஷின் அறுவடை தான்... மிஷின்ல அறுவடை செஞ்சா வெக்கல் எல்லாம் செதைஞ்சு போயி கூளம் ஆயிடும்.. கூளத்த மாடு திங்காது...

3) Cattle Feed எல்லாம் யாரும் காசு குடுத்து வாங்குறது இல்ல... ஏன்னா வாங்குற வெலையில எதுவும் இல்ல...

4) எள்ளு புண்ணாக்கு, கடலை புண்ணாக்கு எல்லாம் இப்போ ரொம்ப டிமாண்ட்... ஏன்னா நல்லெண்ணெய், கடலை எண்ணெய் எல்லாம் கொழுப்புன்னு சொல்லிட்டு,  எல்லா பயலும் சூரியகாந்தி எண்ணெய், தவுடு எண்ணெய்னு சாப்புட ஆரம்பிச்சுட்டாங்க.. எள், கடலை ஆட்டுறதும் அதனால ரொம்ப கொறைஞ்சு போச்சு..

5) முந்தி எல்லாம் மாட்ட காலைலயே மேய்ச்சலுக்கு அனுப்புவாங்க.. அதுக்குன்னு மந்தை வெளின்னோ அல்லது மேய்ச்சல் புறம்போக்கு அப்டின்னோ ஊருக்கு ஒரு எடம் இருக்கும்... இப்பொ குளம், வயல் எல்லாமே ரியல் எஸ்டேட்டாவும், பெட்ரோல் பங்காவும், கல்யாண மண்டபமாவும் மாறும்போது மேய்ச்சல் வெளியாவது ஒண்ணாவது...

6) தீவனப் புல்லுனு அதை வயல்லயே வெளைய வச்சு போட்டாத்தான் உண்டு.. அதுக்கு பதில் நெல்லோ, உளுந்தோ, கரும்போ போட்டா அதுக்கு மார்க்கெட்டுல வெலை அதிகம்னு புல்லை எல்லாம் யாரும் consider பண்ணவே மாட்டாங்க...

7) மாட்ட குளிப்பாட்டி, சாணி அள்ளி சுத்தம் பண்ணி, அதுக்கு தவுடு புண்ணாக்கு வச்சு பாத்துக்கிறதுக்கு ஆளு இல்ல...   உள்ளத சொல்லணும்னா, ஊருக்குள்ள வெவசாயம் பண்ணவே ஆளு கெடைக்கல... படிச்சவனெல்லாம் ஐ.டி கம்பெனிக்கு ஓடி போயிட்டான்.. சும்மா இருந்தவனெல்லாம் திருப்பூருக்கு பனியன் கம்பெனிக்கு ஓடி போயிட்டான்..

8) இதுபோக "கோமாரி"னு ஒரு வியாதி வந்து ஒரே வருஷத்துல ஆயிரக்கணக்குல மாடுங்க செத்துபோச்சு.. நீ பண்ணையெல்லாம் வைக்கணும்னா அதுக்கு தனியா ஒரு வெட்னரி டாக்டர வச்சுக்கணும்...

9) அதுபோக மாட்டுக்கெல்லாம் இன்சூர் பண்ணி, தோடு குத்தி அதுக்கு இன்சூரன்ஸ் பணம் வேற கட்டணும்...

10) அவ்வளவு ஏன்? கவர்மெண்டு சும்மாவே மாடு குடுக்குது.. அதையே வாங்கி வச்சு மெயின்டெயின் பண்ணமுடியாம, கேரளாவுக்கு ஏத்திவுட்டு காச வாங்கி சரக்கடிச்சிடுறான் நம்மாளுக... இவ்வளவு பிரச்சனை இருக்கு பண்ணை வக்கிறாரம் பண்ணை... ஏன்டா ஊர்லயே இருக்குற எங்களுக்கு இது எல்லாம் தோணாமலே போயிருக்கும்னு நெனச்சியா??னு ஒரு பெரிய lecture குடுத்து முடிச்சாங்க...

"அப்போ என்ன பத்தி அப்பா கண்ட கனவ எப்படி நான் நெறைவேத்துறது????" (ஆமா.. பெரிய IAS ஆயிடுவன்னா கனவு கண்டாரு??)

அதுக்கும் அவங்க ரொம்ப சீரியசா ஒரு பதில சொன்னாங்க...."நல்ல்ல்லா யோசிச்சு பாரு.. நீ மாட்டு பண்ணை வைக்க லாயக்குன்னா சொன்னாரு?? நீயெல்லாம் மாடு மேய்க்கத்தான் லாயக்குன்னு தான் சொன்னாரு..."

அது வரைக்கும் மைண்டுல ஓடிகிட்டு இருந்த super star படம், மெதுமெதுவா fade out ஆகி... நம்ம பெயிண்டர் ராஜேந்திரன் "வேல்பாண்டி" கெட்டப்புல வந்து ஒரு பஞ்ச் அடிச்சாரு பாருங்க........


Saturday, July 26, 2014

இங்கு மொத்தமாகவும் சில்லறையாகவும் கடலை வறுக்கப்படும்!!!!!!

ஏழெட்டு வருஷத்துக்கு முந்தி ஐ.டில ஆட்டுமந்தை மாதிரி ஆளெடுத்தபோது வேலைக்கு சேர்ந்துட்டு, இன்னிக்கு "நீ புடுங்குறது எல்லாமே தேவையில்லாத ஆணி தான்"னு அப்பரசண்டிகள வெரட்டுற ஆட்கள்ள பெரும்பாலான பேர, அவங்களோட ஆரம்ப காலத்துல ரொம்ப 'பிசி"யா வச்சிருந்த ஒரு பேரு "ஆர்குட்".

உலக Social Network வரலாற்றில் முதன் முறையாகன்னு ஆரம்பிச்சு சில வருஷங்களுக்கு முந்தி வரைக்கும் ஓஹோன்னு பட்டைய கெளப்பிகிட்டு இருந்த "Orkut" தளத்த செப்டம்பர் மாதத்தோட மூடப்போறதா கூகுள் நிறுவனம் அறிவிச்சதுல இருந்து நம்மாளுங்களும் பழைய போட்டோவையெல்லாம் Download பண்றதுல தீவிரமா எறங்கிட்டாங்க... அதோட சேர்ந்து பழைய நினைவுகள்ளையும் எறங்கி பலரும் நெட்டுல பிரியாவிடை குடுத்துட்டு இருக்காங்க... நாமளும் கொஞ்சம் ஜாலியா அத திரும்பி பாக்கலாம்...

சமகாலத்துல ஆரம்பிக்கப்பட்டதா இருந்தாலும் ஃபேஸ்புக்கோட அனாடமி புரியறதுக்குள்ள ஆர்குட்ல இமயம் முதல் குமரி வரை தன்னோட கொடிய நாட்டிகிட்டுருந்தாங்க நம்மாளுங்க.. அதுக்கு சில சுவாரசியமான காரணங்கள் உண்டு...

விலையில்லா மின்கலக்கி, மின் அரைவை இயந்திரம் மாதிரி, விலையில்லா கடலை வறுக்கும் வசதி.... ஒரு கூகிள்  அக்கவுண்ட் இருந்தா போதும், மொத்தமாகவும் சில்லறையாகவும் கடலைய வறுக்கலாம்...

அஞ்சலைன்னு பேரு இருந்தாலும் "ஏஞ்சல்"னு Profile  பேரு வச்சுகிட்டா எவனும் கேக்க போறது கெடையாது...

ஆர்குட்டோட முக்கியமான அம்சமே "Scrap" தான்...

அதுவரைக்கும் தெரிஞ்ச புள்ளைங்ககிட்ட மட்டும் எஸ் எம் எஸ்ல  நூல் வுட்ட‌ ஆளுங்க எல்லாம், ஆர்குட் புண்ணியத்துல தெரிஞ்ச புள்ள, தெரியாத புள்ளைன்னு  வகைதொகையில்லாம் ஏரியா பூரா யூரியா அடிக்கிற மாதிரி Scrap வாரி எறைக்க ஆரம்பிச்சாங்க... சில பேரு எழுதுவானுங்க பாரு...

" I am trying to find the teaspoon sugar which adds the real taste of life..." (ராஜா.. உன் Analysis என்னமோ நல்லா தான் இருக்கு... ஆனா இதையே எல்லா பொண்ணுங்க பேஜ்லையும் எழுதிவச்சியின்னா Dialysis ல தான் முடியும்...)

" I saw you visited my page.. would like to have my company." ( ஆமா.. இவரு அம்பானி தம்பி, கம்பெனில பாதிய குடுக்குறாரு...)

                                           
இன்னும் சில பேரு அடிக்கிற கூத்து பெருங்கூத்து... ஒரு வருஷத்துல லட்சம் Scrap அடிக்கணும்னு கணக்கு வச்சுகிட்டு தினமும் 1008 Scrap அடிச்ச ஆளெல்லாம் உண்டு... (ராசா.. டெய்லி 1008 தடவை எழுதுறதுக்கு அது என்ன ஸ்ரீராமஜெயமாடா???? ).. இன்னும் சில பேரு Good Morning அப்டிங்கிறதையே ஒவ்வொரு எழுத்தா பிரிச்சு 11 Scrap போட்டு லொள்ளு பண்ணுவாங்ய..

சின்ன வயசுல இருந்தே Rough  நோட்டு,  பஸ், School Toilet செவுருன்னு ஒரு எடம் விடாம கிறுக்குறது நம்மாளுங்களுக்கு ரொம்ப புடிச்ச விஷயமாச்சே.. அப்படி இருந்தவன இன்டெர்நெட்டுல கிறுக்கு ராசான்னு சொன்னா சும்மா இருப்பாங்யளா... சரோஜா தேவி சோப்பு டப்பா கெடச்ச மாதிரி  மொத்தமா பாஞ்சு ஆளாளுக்கு  "சமூக"  சேவைய ஆத்து ஆத்துன்னு ஆத்துனாங்க...

அதுக்கு முன்னாடி யாருக்காச்சும் நம்மளோட ஃபோட்டோவ காட்டணும்னா ஒண்னு ஈ மெயில் அனுப்பணும் இல்ல "Picasa" மாதிரி எதுலயாச்சும் அப்லோட் பண்ணி லிங்க் அனுப்பணும்... ஆர்குட் வந்தாலும் வந்துச்சு,   நம்மள தேடிவந்து ஃபோட்டோவ பாக்கவைக்க ஒரு சான்ஸ் கெடச்சதும், எல்லா பயலும் வளைச்சு வளைச்சு போட்டோவ போட்டு அளப்பரைய குடுக்க ஆரம்பிச்சாணுங்க.. 

அதோட நிக்காம, ஊர்ல ஒரு Profile விடாம போயி போட்டோவுக்கு கமெண்ட் வேற... அதுலயும் பொண்ணுங்க Profile னா இவனுங்க தொல்ல தாங்கமுடியாது.. கல்யாணம் ஆகிப்போனாலும் வெரட்டி வெரட்டி "இந்த பொண்ணையும் அந்த பையனையும் பாக்கும்போது தில்லானா மோகனாம்பாள்ல வர சிவாஜியும் பத்மினியும் மாதிரி இருக்கு"னு எதையாவது சொல்லலைன்னா தூக்கமே வராது...

ஆர்குட்டோட அடுத்த சிறப்பம்சம் என்னன்னு பாத்தா, "Testimonial"... அதாவது இவரு நல்லவரு, வல்லவரு நாலும் தெரிஞ்சவருன்னு சொல்றது... இன்னும் கரெக்டா சொல்லணும்னா ஸ்கூல்ல தமிழ் பாடத்துல ஆசிரியர் குறிப்புன்னு ஒண்ணு வருமே அதே மாதிரி தான்... பாட்ட எழுதுன ஆளு "எக்ஸ்ட்ரா முட்டை" போடுறாங்கனு சொல்லியும்  Elementary School வரைக்கும் கூட போகலைன்னாலும் "ஓதாது உணர்ந்த ஞானச் செல்வர்"னு எழுதுவோமே அதே தான்...

அஞ்சு வருசமா புராஜக்ட்ல டம்மியா மிச்சர் திங்கறத தவிர ஒண்ணும் பண்ணலைன்னாலும்... a wonderful person to have in the team.. i like her company..னு எழுதி வைக்கிறது தான் "டெஸ்டி" தர்மம் (நீயெல்லாம் இங்கிலீஷ் பேசலைன்னு யாரு கேட்டாங்க... அதென்ன கம்பெனி... கெக்ரான் மெக்ரான் கம்பெனி)..இதுல வாங்குன காசுக்கு மேல "வருங்கால அமெரிக்க ஜனாதிபதி முருகேசன் வாழ்க"னு கூவுற ஆளெல்லாம் உண்டு..

இந்த Testi பித்து தலைக்கேறி  "அப்பறம்.... இந்த வாரம் நம்ம பேஜ்ல Testi ஒண்ணு போட்ருங்களேன்"னு பப்ளிகுட்டி பண்ணிக்கிற அப்பாடக்கரெல்லாம் உண்டு... (தம்பி... அவன் என்ன LIC பாலிசியா போடப்போறான்.. நீ வாங்குற பத்து அஞ்சு பிச்சைக்கு இதெல்லாம் தேவதானா????)


ஆர்குட்டோட மற்றுமொரு சிறப்பம்சம் "Community".. அதாவது தனித்தனியா "சமூக சேவை" பண்ணிட்டு இருந்த ஆளுங்க எல்லாம் மொத்தாமா சேந்து "அதே" வேலைய பண்றது... (இல்லைன்னா மட்டும் என்ன சுத்த சமய சமரச சன்மார்க்க ஆராய்ச்சியா பண்ணப்போறானுங்க...)

ஆரம்பத்துல இந்த Community எல்லாம் தனிப்பட்ட வி.ஐ.பிக்களுக்கு வாழ்க / ஒழிக போடுறதுக்கு தான் ஆரம்பிச்சானுங்க.. அக்பர் ரோடு சோனியாவுல இருந்து ஐதராபாத் சானியா வரைக்கும் எல்லாருக்கும் ஆரம்பிச்சும் வெறி அடங்காம‌ அடுத்து என்ன என்னன்னு யோசிக்க ஆரம்பிச்சதன் விளைவு... Cosmetics ல இருந்து கட்டன் சாயா வரைக்கும், பல்சர் பைக்குல இருந்து பருப்பு வடை வரைக்கும் கண்ட கருமத்துக்கும் Community ஆரம்பிச்சு தள்ளிட்டாங்ய...

இதுல இன்னும் சில சுவாரசியமான விஷயங்கள் உண்டு.. ஓயாம நெட்ட நோண்டி,  எதாச்சும் ஒரு புள்ளையோட Community லிஸ்ட்டுல இருக்குற ஐட்டத்த எல்லாம் பாத்துட்டு, மறுநாள் அந்த புள்ளைகிட்ட போயி..

" I know you like south indian coffee.. கரெக்டா???... எப்படி கண்டுபுடிச்சேன் பாருங்க..."ன்னு சீன் போட்ட ஆளுங்க ரொம்ப பேரு... (ஆமா இவரு எடிசன்.. கரண்ட கண்டுபுடிச்சுட்டாரு...)...

இதை எழுதும்போது இன்னொரு விஷயம் நினைவுக்கு வருது.. இதே மாதிரி நம்ம நண்பர் ஒருத்தர், அவரு ஓயாம வெரட்டிகிட்டு இருந்த ஒரு பொண்ணோட Community லிஸ்ட்டுல Roller skating னு இருக்குறத பாத்துட்டு அந்த பொண்ணுக்கு Roller skating ரொம்ப புடிக்கும் போலருக்குன்னு நெனச்சுகிட்டு, அத இம்பிரெஸ் பண்றதுக்காக நம்ம ஊரு முட்டுசந்துல Roller skating பண்ணி குப்புற விழுந்து மூக்கு வாயெல்லாம் மண்ணு உட்டுகிட்டாப்ல...

பின்னால தான் தெரிஞ்சது "அந்தப் புள்ளைக்கும் Roller skating கும் சம்பந்தமே இல்ல.. அதோட தம்பி தான் சும்மனாச்சுக்கும் அத Add பண்ணி வச்சிருந்தான்" அப்டின்னு....

இதெல்லாம் பண்ணி முடிச்சு போரடிச்ச ஆளுங்க ஆரம்பிச்சது தான் "I Hate" Community... மூணு நாளுக்கு முந்தி வச்ச பருப்பு கொழம்புல இருந்து முப்பது ரூவா கடன் கேட்டு குடுக்காத ரூம்மேட் வரைக்கும் புடிக்காத எல்லாத்தையும் கழுவி கழுவி ஊத்துற‌து தான் இந்த Community யோட வேலையே...
                                   
இதுல ரொம்ப பிரபலம் "I hate peter girls" Community..........    பீட்டர் உடுற பொண்ணுங்கள, ஆங்கிலத்தாலோ அல்லது அது வராமல் போனதாலோ பாதிக்கப்பட்ட ஆடவர்குல சிங்கங்கள் கேவலமா திட்டுறதுக்கு இந்த Community ஒரு தளம்... இதுக்கு பதிலடி குடுக்குறதுக்குன்னே ஆரம்பிக்கப்பட்டது "I hate flirting guys.." சதா சர்வ காலமும் எதாவதொரு பொண்ணுகிட்ட ஜொள்ளுவதையே பிறவிப்பயனா நெனச்ச பசங்கள மகளிர்குல மாணிக்கங்கள் ரொம்ப ரொம்ப கேவலமா திட்டுறதுக்கு இந்த Community ஒரு தளம்...  மொத்ததுல இத ரெண்டுபேருமே ஒரு ஜாலியாவே எடுத்துக்கிறது...

இதெல்லாம் தனக்கு சம்பந்தமான விஷயம்னு ஓரளவுக்கு மன்னிச்சு விட்ரலாம்.. சம்பந்தமே இல்லாம எதாச்சும் ஒரு வீடியோவ Youtube ல இருந்து லிங்க் குடுத்து அதப்பத்தி ஒரு பத்துபேரு சேட்டிலைட் TV ல வர்ர‌ Talk Show லெவல்ல மாறி மாறி பொளந்தெடுப்பாங்ய பாரு.. அது உச்சக்கட்ட கொடுமை...

இப்படி ஒவ்வொருத்தருக்கும் எத்தனையோ நினைவுகள் ஆனா ஒவ்வொண்ணும் ரொம்ப ரொம்ப சுவாரசியமான நினைவுகள்... அதான் ஆர்குட்டோட பலமே...

இன்னைக்கு ஃபேஸ்புக்குல இருந்து ஓயாம Candy Crush, Farm heros, Criminal Case னு ஒரு பய விடாம debit card விக்கிறவன் மாதிரி request குடுத்து டார்ச்சர் பண்றது, Viber ல ஓசி கால் பேசுறது, Whatsapp ல ரேகைய அழிக்கிறதுன்னு எல்லாத்துக்கும் முன்னோடி "ஆர்குட்."

ஆர்குட்னு சொன்ன உடனே நினைவுக்கு வர்ரது அதோட சிம்பல்ல இருக்குற "O" தான்... கல்லூரி முடிஞ்சு பிரிஞ்சு போற ஒரு ஜாலியான நண்பன மாதிரி நாமளும் ஆர்குட்டுக்கு விடை கொடுக்கலாம்...

எப்பூடி..... ஆர்குட்டுக்கு ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய "O" போடலாம்....

Friday, July 18, 2014

நில்லுவே!!!! நில்லுவே!!!!!

சில வருஷங்களுக்கு முந்தி மெட்ராஸ் பஸ்ல ஒரு பாட்டு ஓடிகிட்டு இருந்திச்சு.. பாட்டக் கேட்டு ஒரு திருநெல்வேலி அண்ணாச்சி.."யாரவே.. இவன் நில்லுவே நில்லுவேங்கான்..."னு கேக்க.. பக்கத்துல இருந்தவரு "அண்ணாச்சி, அவன் நில்லுவேன்னு சொல்லல... "நிலவே நிலவே"ங்கிறத தான் அப்படி பாடிகிட்டு இருக்கான்னு வெளக்கம் சொல்லிகிட்டுருந்தாரு...

ஒரு ரியாலிட்டி ஷோவுல எஸ்.பி.பி சொன்ன சம்பவம்... அதுவும் ஒரு நிலா பாட்டு தான்... "நான் சினிமால பாட வாய்ப்பு தேடி அலைஞ்ச போது எம்.எஸ்.வி சார் கிட்ட ஒரு பாட்டு பாடி காமிச்சேன்... உனக்கு சங்கதி எல்லாம் நல்லா வருது.. ஆனா தமிழ் தான் கொலபண்ற மாதிரி இருக்கு.. மொதல்ல போயி தமிழ நல்லா கத்துக்கிட்டு வந்து அப்புறம் பாடுறதுக்கு வாய்ப்பு தேடுன்னு சொன்னார்.." அப்டினு சொன்னார்.. அந்த பாட்டு "ராமு படத்துல பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடின நிலவே என்னிடம் நெருங்காதே..."

SPB க்கு மட்டுமல்ல, இந்த பாட்ட ஒரிஜினலா பாடின‌ PBSக்கு கூட தாய்மொழி தமிழல்ல... அவ்வளவு ஏன் ஆதிகாலம் தொட்டு தமிழ் சினிமா பாடகர்கள் பெரும்பாலான ஆட்களுக்கு தாய்மொழி தமிழ் கிடையாது...

TMSக்கு தாய்மொழி சௌராஷ்டிரம்..PBSக்கு தாய்மொழி கன்னடம்...கண்டசாலா, .எம்.ராஜா, பி.சுசீலா, எஸ்.ஜானகி, SPB, மனோ, ஷைலஜா இவர்கள் அத்தனை பேருக்கும் தாய்மொழி தெலுங்கு... யேசுதாஸ், மலேசியா வாசுதேவன், ஜெயச்சந்திரன்,கிருஷ்ணசந்தர்,சித்ரா, உன்னிமேனன், சுஜாதா, சுனந்தா, ஜென்சி இவர்களின் தாய்மொழி மலையாளம்...

ஆனால் TMS போல தமிழை உச்சரித்த பாடகர்கள் யாருமே இல்லைன்னு சொல்லலாம்... அவ்வளவு சுத்தமா தமிழ் உச்சரிப்பு இருக்கும்... அம்பிகாபதி படத்துல வர்ர "தமிழ் மாலை தனைச் சூடுவாள்.." ஒண்ணு போதும் இதுக்கு உதாரணம்...

TMS மட்டுமல்ல அதே போல தான் பாடும் நிலா பாலுவும்..

"ஆடும் இலைகளில் வழிகிற நிலவொளி
இருவிழி மழையில் நனைந்து மகிழும் வானம்பாடி..."

வைரமுத்துவோடஇந்த வரிகளைக் கேட்கிற யாரும் நம்பமாட்டங்க SPBக்கு தாய்மொழி தமிழ் இல்லைன்னு.. "", "", "" வேறுபாட்ட அவ்வளவு சுத்தமா பிரயோகம் பண்ணிருப்பாரு...

யேசுதாஸ் கிட்டதான் வைரமுத்து கொஞ்சம் திண்டாடிட்டாரு...என்ன ஒத்துமை பாருங்க அதுவும் ஒரு நிலா பாட்டு தான்..

அவரு ஏற்கனவே "திருக்கோயிலே ஓடிவா" அப்டிங்கிறதயே "தெருக்கோயிலே ஓடிவா"னு பாடுனவரு... "பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா" பாட்டுல‌.."பில்லை நிலா"னு யேசுதாஸ் பாட.. மீண்டும் மீண்டும் வைரமுத்து திருத்த, ஒரு கட்டத்துல யேசுதாஸ் செம கடுப்பாகி "நான் சாகுற வரைக்கும் திருத்திகிட்டே இருப்பீங்களா"னு கேக்க.. அதுக்கு வைரமுத்து "இல்லை.. தமிழ் சாகாத வரைக்கும்.." அப்டினு சொன்னதா அவருடைய ஒரு புத்தகத்துல எழுதியிருப்பாரு..

அப்படிப்பட்ட வைரமுத்துவே மண்ட காஞ்சு போற அளவுக்கு ஒரு ஆளு ஒரு வேலைய செஞ்சுபுட்டாரு..

ஒரு ரெக்கார்டிங்குக்கு கொஞ்சம் காலதாமதமா வர்ராரு வைரமுத்து.. பாட்ட பாடி முடிச்சுட்டு ஏர்போர்ட்டுக்கு கெளம்பி போயிட்டாரு பாடகர்.. சரி ரெக்கார்டிங் முஞ்சா என்ன.. பாட்ட போட்டு காமிங்க கேப்போம்னு பாட்டக் கேட்க ஆரம்பிக்கிறாரு.. ரெண்டாவது சரணத்த கேட்டவருக்கு பொறி கலங்கிருச்சு.. "பிரியமான பெண்ணை ரசிக்கலாம்.. தப்பில்லே"னு இவர் எழுதியிருந்தத... "பெரியம்மா பொண்ணை ரசிக்கலாம்.. தப்பில்லே"னு பாடி வச்சுட்டு போயிருந்தார் அந்த பாடகர்.. அப்புறம் என்ன... அவர வெரட்டி புடிச்சு கூட்டிகியாந்து மறுபடி ஒழுங்கா பாடவச்சு அனுப்பியிருக்காங்க‌... அந்த பாட்டு "கண்ணெதிரே தோன்றினாள்" படத்துல வர்ர "ஈஸ்வரா.." பாட்டு தான்...

அவரு தான் இந்த பதிவோட தொடக்கத்துல நான் சொன்ன "நில்லுவே" பாட்டயும் பாடின "உதித் நாராயணன்..அந்த நில்லுவே "ரோமியோ ஆட்டம் போட்டால்" பாட்டுல வர்ர ஒரு வரி...

இவரோட தாய்மொழி போஜ்புரி.. தமிழச் சொல்றீங்களே.. இவரு இந்தியையே இந்த லட்சணத்துல தான் பாடுவாருன்னு அழுவுற சில அக்மார்க் டெல்லிவாலாக்கள் உண்டு..

இவர மொதல்மொதல்ல தமிழுக்கு தொண்டுசெய்ய கூட்டிகிட்டு வந்தது என்னவோ . ஆர். ரகுமான் தான்.. ஆனா பெரிய அளவுல படத்துக்கு படம் பாட்டு குடுத்து வளத்துவுட்ட புண்ணியத்தை கட்டிக்கொண்டவர்கள் இசையமைப்பாளர்கள் தேவாவும், வித்யாசாகரும்...

ஆரம்ப காலத்துல இவரு பாடுன "கோயம்புத்தூர் மாப்பிள்ளைக்கு பொண்ணு கடிச்சா" பாட்டுலயே பாதி புரியாது (அதுபோகட்டும்.. அண்ணே அது கடிச்சா இல்ல.. கெடச்சா)

.எம். ராஜா பாடும் போது லேசான ஒரு Nasal tone இருக்கும் ஆனா வார்த்தைகள் தெளிவா இருக்கும். ஆனா நம்மாளு முழுசுமே மூக்கால தான் பாடுவாப்ல.. என்ன ஒரு வித்தியாசம் பாதி பாட்டு என்னன்னே புரியாது... 

"சில்லோன்னு சிங்ள பொண்ணே சிணுங்காதே.. ஜில்லோன்னு ரொடியிருந்தா ஒதுங்காதே.." (என்ன சொல்ல வர்ராருன்னு கண்டுபுடிக்கிறவங்களுக்கு நலாஸ் ஆப்பக்கடை கூப்பன் பரிசு..)

"காஸ்ஸூ மேல்லே காஸ்ஸூ வந்த கொட்டுஹிர நேரமித்து... வாசக்கதுவ்வே ராஸ்ஸலச்சுமி தட்டுஹிர நேரமிது.. (சார்.. பெண் பாவம் பொல்லாதது... அதுவும் தமிழ், ராசலட்சுமினு ரெண்டு பேரு பாவம்...)

ஏரோப்பிளேன் பறக்குது பரு மேலே.. (யார்ரா அவன் பரு மேல ஏரோப்ளேன் உட்டவன்..)

புது வெஸ்ஸம் கட்டப் பொர்ரோம் .... புது வால்வை தேடி பொர்ரோம்.. (தெய்வமே.. அது வால்வு இல்ல வாழ்வு..)

ஹைலைட்டா ஒண்ணு உண்டு.. "நீ வாது தக்க ரொம்ப கெட்டிக்காரன்"... (சத்திய சோதனை...)

இதாச்சும் பரவால்ல ஹீரோ ஜாலியா பாடுற பாட்டுனு மன்னிச்சு விட்டுடலாம்.. "யெங்கேய்யோ பார்த்த மைக்கம்"னு இவரு பாடுற மாடுலேஷனுக்கும்.. படத்துல வர்ர எமோஷனுக்கும் துக்கிளியூண்டு சம்பந்தமும் இருக்காது..

இவரு னி ஆளு இல்ல‌.. ஆமா இவ மாதிரியே ஒரு பெரியகூட்டமே இருக்கு...

சுக்விந்தர் சிங்குனு ஒருத்தரு.. "நெதியே அடி நைல் நெதியே"னு பாடிருப்பாரே அவரே தான்.. அதே மாதிரி சுரேஷ் பீட்டர்ஸ்னு ஒருத்தர்... இவரு வாய்ஸ் ரொம்ப பிரம்...Constipation... Come to the motion.." தான் தாரந்திரமே...

மீபத்துலகூட சிவாஜி த்துலஒரு பாட்டு... இப்போ.. எத்தக் கூடாதஎடத்துலம்மழுதை ஓங்கி ஒரு எத்து எத்திருச்சுன்னு ச்சுக்கங்க‌.. அப்டியே வாயமூடி...கண்ணு பிதுங்கி ம்ம்ம்ம்ம்ம்க்க்க்க்க்ம்ம்ம்ம்ம். னு ஒரு முக்கு முக்குவோமே அப்டியே அதே வாய்சுலஅதே பிட்சுலபாடுங்க‌.. "ஒரு கூடை ன்லைட்.. ஒரு கூடை மூண்லைட்.." சூப்பரப்பு.. இந்த பாட்ட பாடுனவருக்கும் இது மாதிரி எதோ ஒரு சம்பவம் நடந்திருக்கணும்..

ஆண் பாடகர்களுக்கு கொஞ்சமும் சளைச்ச ஆளுங்க இல்ல பாடகிகள்...


அந்த காலத்துலயே "பேஷும் வார்த்தை... உண்மை தானா"ன்னு பானுமதியம்மா பாடும்போது நமக்கு லைட்டா "ஷங்கட்டமா" தான் இருக்கும்...

"ஷென்பாஹாமே.. ஷென்பாஹாமே"னு தமிழுக்கு வந்த ஆஷா போன்ஸ்லே, மீரா படத்துல "யேன் விரித்தாய் ஸெருஹை.."னு பிச்சு ஒதறி இருப்பாங்க.. சமீபத்தில கூட
மதுஸ்ரீ"மருதாணி விழியில் ஏன்" பாட்ட பாடிகாட்டு முனீஸ்வரனுக்கு காவு குடுத்திருப்பாங்க..

அவ்வளவு ஏங்க...12பி படத்துல ஒரு பாட்டு வரும் "சரியா தவறா"னு..  

பாட்டை எழுதுன மகானுபாவர் "நாங்க பச்சை பச்சையா கேள்விகள் கேட்டா சரியா தவறா"னு எழுதி இருக்காரு.. அத அந்த புள்ள "நாங்க பாச்சை பாச்சையா கேள்விகள் கேட்டால் சரியா தவறா"னு பாடியிருக்கும்..  

அடுத்த வரிதான் இன்னும் ஹைலைட்... "ஆண்கள் பார்த்தால் பரவசம் வருதே.." அப்டிங்கிறத "அங்க பாத்தா பரவசம் வருதே.."னு பாடும் பாருங்க‌.. (கேக்குற நமக்கே தல கிர்ருனு சுத்தும்...)

போன வாரம் ஒரு பேட்டில "தமிழை சாகாமல் காப்பாத்துற பொறுப்பு நம்மகிட்ட தான் இருக்கு"ன்னு வைரமுத்து அவர்கள் பேசி இருக்காரு..

எம்.ஜி.ஆர், சிவாஜி, எஸ்.எஸ்.ஆர் இவர்கள் எல்லாருக்குமே தமிழை சுத்தமாக பேசக் கூடிய நாயகர்கள்னு ஒரு இமேஜ் உண்டு. அதனால இவர்களுக்கு பாடும்போது அதீத எச்சரிக்கையோடு, தமிழை தப்பா உச்சரிக்க ஒத்துக்கவே மாட்டாங்க.. ஆனா இன்னிக்கு ஹீரோவுக்கு தமிழ் தெரியாது.. இசையமைப்பாளருக்கு அதப் பத்தி கவலையே கெடையாது..இதுபோக பாடலாசிரியருக்கும் உக்காந்து திருத்துற அளவுக்கு சுதந்திரமோ அல்லது ஸ்கோப்போ கெடையாது... அப்டியே சொன்னாலும், விடுங்க சார் டிரெண்டியா இருக்குன்னு சொல்லிருவாங்க..

இதப் படிக்கிற ஒருசிலருக்கு தோணலாம்.. என்னவோ வெளி ஆளுங்கள சொல்றியே, தாய்மொழி தமிழா இருக்கிற சில ஆளுங்களே ஒழுங்கா உச்சரிக்கிறதில்லைன்னு...

100% நிஜம் தான்.. ரொம்ப Strict வாத்தியார் இளையராஜாவ பக்கத்துல வச்சுகிட்டே.. "சின்ன கன்னன் அளைக்கிறான்"னு "", "", "", "" எல்லாத்தையும் கலந்துகட்டி 2006 concert யுவன் சங்கர் ராஜா பாடின பாவத்துக்கு பரிகாரம் பண்ண, அடுத்த concert பாலமுரளி கிருஷ்ணாவையே அழைச்சிட்டு வந்து பாடவைக்க வேண்டியதா ஆயிடுச்சு...

ஒரு நண்பர்கிட்ட பேசிகிட்டு இருந்தப்போ "சினேகிதனே சினேகிதனே" பாட்டுக்கு முன்னால "தொகையறா" ஒண்ணு வருமே தெரியுமான்னு கேட்டேன்.. அவரு சட்டுனு " தெரியுமே.. நேட்ரு உன்னி ராவில் உன்னி திலப்பு மடியே..."ன்னு பாட ஆரம்பிச்சாரு.. உன் தமிழறிவுல தீய வைக்க...அது ராவுல உன்னியும் இல்ல பகல்ல உன்னியும் இல்ல.. இது வைரமுத்துவோட "பெய்யெனப் பெய்யும் மழை" வந்த ஒரு கவிதைன்னு சொல்லிட்டு அவருக்கு அந்தக் கவிதைய சொன்னேன்..

நேற்று முன்னிரவில்
உன் நித்திலப் பூமடியில் (நித்திலம்னா முத்துன்னு அர்த்தம்)
காற்று நுழைவதுபோல்
மனம் கலந்து களித்திருந்தேன்...

இன்று பின்னிரவில்
அந்த ஈர நினைவுகளில்
கன்று தவிப்பதுபோல்
மனம் கலங்கிப் புலம்புகிறேன்..

கூந்தல் நெளிவுகளில் - எழில்
கோலச் சரிவுகளில்
காந்த அசைவுகளில்
என் கர்வம் அழிந்ததடி...

இந்தப் பாட்ட பாடுனவரும் ஒரு பச்சைத் தமிழர் தான்..இப்படி பாடுனா கர்வம் மட்டுமில்ல ஏன் தமிழும் சேந்து அழியாது..

அதுசரி.. நமக்கென்ன.. படம் ஓடுனா சரி தான்..   
ஏத்தோ சவ்க்கியம் பருவா இல்லை!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!