Friday, December 25, 2015

தாரை தப்பட்டை - இசை ஞானியின் 1000 வது பட இசை வெளியீடு

எப்போ எப்போன்னு எதிர்பார்த்திட்டு இருந்த இசைஞானியின் 1000மாவது படமான தாரை தப்பட்டையின் பாடல்கள் இன்னிக்கு வெளியாகிருச்சு..

மொதல்ல 1000வது படைப்பை அளித்த சாதனை நாயகருக்கு கோடானு கோடி வாழ்த்துக்களும் நன்றிகளும் சொல்லிக்கிறேனுங்க!!!!

இசையே நீ வாழ்க!!! இசையாய் நீ வாழ்க!!!!!



சென்னை மழை வெள்ளத்துனால தத்தளிச்சு மீண்டு வந்திருக்கிறதுனால இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக இல்லாம எளிமையா பண்ணிட்டாங்க... அது கிடக்கட்டும் பாட்டு எப்படி இருக்கு???? அதப் பாக்கலாம்... நான் விமர்சனம்லாம் பண்ணுனதில்ல...  இது விமர்சனமும் இல்ல...

4 பாட்டு, 2 தீம் இசை உட்பட மொத்தம் ஆறு டிராக்குகள்... மொதல்ல  12 பாட்டு இருக்குன்னு பேசிகிட்டாங்ய.. ஆனா ஆறு தான் இருக்கு...



1) Hero Introduction Theme : ஆரம்பமே அதகளம் தான்.... தாரை தப்பட்டை டைட்டிலுக்கு உண்மையான வேல்யூ இந்த இசை தான்...  நாதஸ்வரம், தவில், உறுமி, தமுக்குன்னு நாட்டுப்புற இசை ஜிவ்வுனு தூக்குது... நாட்டுப்புற இசையை சினிமாவுல நங்கூரம் மாதிரி பாய்ச்சுன இளையராஜாவுக்கு கேக் வாக் மாதிரி... அடி பின்னியிருக்காரு..

2)  வதன வதன வடிவேலன் :  செம்ம  துள்ளலான ஒரு பாட்டு.. இசைஞானி - பாலா கூட்டணியின் முதல் படமான சேதுல வர்ர "கானக்கருங்குயிலே" " சேதுவுக்கு ஓட்டுப்போட்ட தம்பிமாரே" வகையறா பாட்டு...அனேகமா படத்துல "வரூ" இன்ட்ரோவா இருக்கலாம் இல்லன்னா கண்டிப்பா  அவுங்க கரகாட்டம் ஆடுற பாட்டா இருக்கும்னு  நெனக்கிறேன்... ரகள ரகள களகட்டுது...

3)  பாருருவாய:  மாணிக்கவாசகர் திருவாசகத்திலிருந்து ஒரு பாடலை எடுத்து இசையமைச்சிருக்காரு  இசைஞானி...  ராஜா சாரோட "மாயா மாளவ  கௌளை" Classics ல இன்னுமொரு நல்முத்து.. மெலிதான வீணை இசையுடன்  தொடங்கும்  இந்தப் பாடலை நம்ம சூப்பர்  சிங்கர் சத்யபிரகாஷ் உருகி உருகி  பாடியிருக்காரு. இணைந்து ஒலிக்கும் குரல் சுர்முகி.

4) இடரினும் : இசைஞானி எழுதி இசையமைத்திருக்கும் மற்றொரு உருக்கமான பாடல்... "சுப பந்துவராளி" ராகத்துல அமைந்த இந்தப் பாட்டு அப்படியே மனசப் போட்டு பிசையுது... (வைகரையில் வைகைக்கரையில், அழைக்கிறான் மாதவன் பாடல்களை லேசா நினைவுபடுத்துது). பாலா படங்களைப் பொறுத்த வரையில் "பிறையே பிறையே" /  "எங்கே செல்லும் இந்தப் பாதை" ஜானர் ல  இன்னொண்ணு..

5) ஆட்டக்காரி மாமன் பொண்ணு: இந்த ஆல்பத்துல என்னால யூகிக்கவே முடியாத ஒரு சூப்பர் மெலடி டூயட். பாலா படத்துல இந்த மாதிரி ஒரு பாட்டா???ன்னு தோணிகிட்டே இருக்கு...  அடுத்த சில மாதங்களுக்கு எஃப் எம் ரேடியோக்களை நிச்சயம் சந்தேகத்துக்கு இடமில்லாம ஒரு கலக்கு கலக்கும்.  கிரங்கடிக்கிற இசை. இந்தப்பாடலையும் எழுதியிருப்பவர் இசைஞானியே தான்.  பிரசன்னா,  மானசி ரெண்டுபேருமே  ரொம்ப நல்லா பாடியிருக்காங்க..

6) Theme Music : இந்த ஆல்பத்தோட உச்சக்கட்ட இசைப்பதிவு. உண்மையான பாலா - இசைஞானி கூட்டணியின் வெளிப்பாடு.. நாதஸ்வரம், தவில், டிரம்ஸ்,  பம்பை, பறை, எக்காளம், செண்டமேளம்னு அதிரடியான இசைக்கருவிகளோட குலவைச் சத்தமும் சேர்ந்து ஒரு இசைப் பிரளயமே நடத்தியிருக்காரு இசைஞானி. சுருக்கமா சொல்லணும்னா மண்ணின் இசைக்கு  இளையராஜாவின் மகுடம்...

You Tube ல வெளியாகியிருக்கிற இந்தப் பாடல்களைக் கேட்க கீழே உள்ள சுட்டியை சொடுக்குங்க‌ :

https://www.youtube.com/watch?v=eXfaWeFE3jM

மொத்ததில் இந்த 1000மாவது படத்தின் இசை சர்வநிச்சயமாக ராஜா ரசிகர்களைக் கூத்தாட வைக்கும்.. படத்துல எப்படி இதையெல்லாம் பாலா காட்சிப்படுத்தியிருக்காருன்னு  பொங்கல் அன்னிக்கு தெரிஞ்சிடும்!!!

ராஜா சாருக்கு மீண்டும் ஒருமுறை எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களும் நன்றிகளும்!!!

Friday, August 14, 2015

பூஞ்சிட்டு குருவிகளா!!! புதுமெட்டு தருவிகளா!!!

"இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு உங்கள் சோ அண்ட் சோ டிவியின் சிறப்பு நிகழ்ச்சிகள்"னு ஒவ்வொரு சேனலும் ஒரு வாரமா போட்டு பொளந்து எடுத்துகிட்டு இருக்காங்க..சரி விளம்பரமா இருக்கேன்னு டி.டிக்கு மாத்தும் போது அதுல எப்போவோ 20 வருஷத்துக்கு முந்தி எடுத்த வரலாற்று ஓரங்க நாடகம் ஒளிபரப்பாகிட்டு இருந்தது...

இத பாத்திட்டு இருக்கும்போதே Mind அப்ப‌டியே ஃப்ளாஷ் பேக்குல 20 வருஷம் பின்னாடி போயிருச்சு... தூர்தர்ஷனோட கொடைக்கானல் அலைவரிசை தொடங்குனதுக்காக ஒரு சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாச்சு... அப்போதைய பிரபலமான சந்திரபோசோட இசை நிகழ்ச்சி... அதுக்கப்புறம் எந்த விசேஷம்னாலும் சிறப்பு ஒளிபரப்பு அதே தான்... ஆனா சும்மா சொல்லக் கூடாது நல்ல நல்ல பாட்டா போட்ருபாப்ல சந்திரபோஸ்... சரி நம்ம பிளாக்லயும் இந்த சுதந்திர தின சிறப்பு பதிவு திரு.சந்திரபோஸ் அவர்களப் பத்தி தான்...



80களின் தமிழ் சினிமாவுல இளையராஜா கொடிகட்டிப் பறந்த காலத்துல அவருக்கு மாற்றாக பல பட்ஜெட் இயக்குநர்களால் அடையாளம் காணப்பட்டவர்களில் மிக முக்கியமான ஒரு இசையமைப்பாளர் சந்திரபோஸ்..  திரைப்படத் துறைக்கு வர்ரதுக்கு முந்தி, இசையப்பாளர் தேவாவோட சேர்ந்து "போசஸ்-தேவா"ன்னு ஒரு இசைக்குழு வச்சு மேடைக்கச்சேரிகள் எல்லாம் பண்ணிகிட்டு இருந்தவருக்கு முதல் வாய்ப்பு மெல்லிசை மன்னர் இசையில பாடுறதுக்கு "ஆறு புஷ்பங்கள்" படம் மூலம் வந்தது.. அந்தப் பாட்டு பலராலும் பாராட்டப்பெற்ற "ஏண்டி முத்தம்மா ஏது புன்னகை"...

சந்திரபோசுக்கு இசையமைப்பாளராக முதல் வாய்ப்பு  1977 ல, அந்தக் காலத்துல "ம" வரிசைப் படங்களா எடுத்துகிட்டு இருந்த வி.சி.குகநாதன் இயக்கிய "மதுர கீதம்" படத்துல கிடைச்சது.. அதுக்கு பிறகு வரிசையா "மச்சானை பாத்தீங்களா", "மாங்குடி மைனர்", "முயலுக்கு மூணு கால்"னு வரிசையா அவரோட "ம" வரிசைப் படங்களுக்கும் இவர் தான் இசை.. இந்த சமயத்துல "பார்வையின் மறுபக்கம்", "தரையில் வாழும் மீன்கள்", "ராஜாத்தி ரோஜாக்கிளி"னு ஒரு 50 படம் மியூசிக் பண்ணிருப்பாரு.. பெரிய ஹிட் ஏதுமில்லைன்னாலும் அபூர்வமான சில நல்ல பாடல்களையெல்லாம் குடுத்திருப்பாரு... உதாரணத்துக்கு மச்சானப் பாத்தீங்களாவில் "மாம்பூவே சிறு மைனாவே", பார்வையின் மறுபக்கம் படத்தில் "சந்தோஷ நேரங்கள்", "தேவதை புரியும் தவங்கள்" இப்படி அப்போதைய சிலோன் ரேடியோவின் ஹிட் பாடல்கள் இவற்றில் அடக்கம்... அவரோட‌ பெரிய பலமே காதுகளை உறுத்தாத மென்மையான இசை தான்...

சந்திரபோசுக்கு முதல் பெரிய break நடிகர் பாலாஜி தயாரிப்பில் வெளிவந்த "விடுதலை" படத்துல (இந்தி "குர்பானி"யோட ரீமேக்) தான் கெடைச்சது.... சிவாஜி, ரஜினி, கன்னட சூப்பர் ஸ்டார் விஷ்ணுவர்த்தன்னு மெகா நடிகர் பட்டாளத்தோட வெளிவந்த படம். அதுல ஸ்டைலான ரஜினிக்கும், அலட்டிக்காத விஷ்ணுவர்த்தனுக்கும் எஸ்.பி.பி. சந்திரபோஸ் குரல்கள்ல ஒலிக்கிற "நீலக்குயில்கள் ரெண்டு" பாட்டு  சந்திரபோஸ் பேரச் சொன்னதும் பலருக்கும் இன்றும் நினைவுக்கு வரும் பாடலாக அடையாளம் காட்டிச்சு... (இந்த ஒரு வாரத்துல மட்டும் இந்தப் பாட்ட கொறஞ்சது 300 வாட்டியாச்சும் முணுமுணுத்திருப்பேன்... எஸ்பிபி குரல்ல என்ன ஒரு ஸ்டைல்...) "தங்கமணி ரங்கமணி வாம்மா நீ", "நாட்டுக்குள்ள நம்மப் பத்திக் கேட்டுப் பாருங்க, அம்மம்மா இவர் தான் சூப்பர் ஸ்டாருங்க"னு படத்தோட அத்தனை பாடல்களும் சக்கபோடு போட, சந்திரபோசோட வெற்றிகரமான ரெண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பம் ஆச்சு..


அதே சுரேஷ் ஆர்ட்ஸ் நிறுவனத்தோட அடுத்த படத்துக்கும் இவர் தான் இசை. அந்தப் படம், சத்யராஜ், அம்பிகா நடிச்சு வெளியான "மக்கள் என் பக்கம் (மலையாளத்து "ராஜாவின்டே மகன்" படத்தோட ரீமேக்). "ஆண்டவன பாக்கணும் அவனுக்கும் ஊத்தணும்"னு சந்திரபோஸ் போட்ட பாட்டு ஹிட் அடிக்க அடுத்த பெரிய  ஹிட் சந்திரபோச இன்னும் உயரத்துக்கு கொண்டு போச்சு...


பிரபல மலையாள இயக்குநர் சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் "மோஹன்லால், மம்மூட்டி"னு ரெண்டு பெரிய ஸ்டார் நடிச்சு வெற்றிகரமாக ஓடிய "Gandhi Nagar 2nd Street" தமிழ்ல "அண்ணாநகர் முதல் தெரு"ன்னு ரீமேக் ஆச்சு.. இசை சந்திரபோஸ்... "மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு" என்ன ஒரு அருமையான மெலடி... ரொம்ப நாள் வரைக்கும் இது இளையராஜா பாட்டுன்னே நெனச்சுகிட்டு இருந்தேன்..  இது சந்திரபோஸ் பாட்டுன்னு தெரிஞ்சதும் வியந்துட்டேன்... அவரை பட்டிதொட்டியெல்லாம் கொண்டு சேர்த்த முதல் பாடல் இது தான்... இதே படத்தில் வரும் "என்ன கத சொல்லச் சொன்னா" ஒரு அருமையான மென் சோகப் பாடல்  ("அடடா யாவுமே முடிஞ்ச கத.. கனவாய்ப் போனதே காதல் கத"ன்னு எஸ்.பி.பி உருகும் போது நமக்குள்ள என்னவோ செய்யும்)
இந்தப் படம் தந்த வெற்றியால மிகப்பெரிய அதிர்ஷ்டம் அவரை அணைக்க தயாராச்சு....



"ஊக்குவிப்பார் ஊக்குவித்தால்.. ஊக்கு விற்பவனும் தேக்கு விற்பான்'னு கவிஞர் வாலி சொல்லுவாரே... அது போல சந்திரபோசோட தலையெழுத்தையே மாற்றியது ஒரு மூணெழுத்து... அந்த மூணெழுத்து....



1986 ல "பேர் சொல்லும் பிள்ளை" படத்துல இளையராஜா கிட்ட இருந்து பிரிந்து வந்த ஏவிஎம் நிறுவனுத்துக்கு கிடைச்ச சரியான ஆள் "சந்திரபோஸ்". (இவரை இளையராஜாவுக்கு எதிரா கொம்பு சீவிவிட்டார்கள்னும் சிலர் சொல்றாங்க)..
அதே நேரத்துல "கரிமேடு கருவாயன்" படத்தோட‌ இளையராஜாகிட்ட இருந்து பிரிஞ்சு வந்த வைரமுத்துவும் கூட்டு சேர "ஏவிஎம் - சந்திரபோஸ் - வைரமுத்து"ன்னு புதுக் கூட்டணி உண்டாச்சு... அடுத்த அஞ்சு வருஷத்துக்கு சந்திரபோஸ் காட்டுல இசை மழைதான்...



"சங்கர் குரு", "மனிதன்", "தாய் மேல் ஆணை", "பாட்டி சொல்லை தட்டாதே", "வசந்தி", "ராஜா சின்ன ரோஜா", "பெண்புத்தி முன் புத்தி", "சொந்தக்காரன்", "மாநகரக் காவல்"னு 1992 வரைக்கும் அனைத்து ஏவிஎம் படங்களுக்கும் சந்திரபோஸ் தான் இசை... இந்தக் காலகட்டத்தில் இவரது இசையில் வந்த சில சூப்பர் ஹிட் பாடல்கள் :

  • காக்கிச் சட்ட போட்ட மச்சான் (சங்கர் குரு)
  • சின்ன சின்னப் பூவே (சங்கர் குரு)
  • வானத்தப் பார்த்தேன் பூமியப் பாத்தேன் (மனிதன்)
  • மனிதன் மனிதன்... எவன் தான் மனிதன்(மனிதன்)
  • மல்லிகப்பூ பூத்திருக்கு அது மழையில் நனஞ்சிருக்கு (தாய் மேல் ஆணை)
  • கொலுசே கொலுசே.. எச பாடு கொலுசே (பெண்புத்தி முன் புத்தி)
  • பூஞ்சிட்டு குருவிகளா (ஒரு தொட்டில் சபதம்)
  • ராஜா சின்ன ரோஜாவோடு (ராஜா சின்ன ரோஜா)
  • சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா (ராஜா சின்ன ரோஜா)
  • டில்லிக்கு ராஜான்னாலும் (பாட்டி சொல்லைத் தட்டாதே)
  • வண்ணத்துப்பூச்சி வயசென்ன ஆச்சு (பாட்டி சொல்லை தட்டாதே)
  • ஏதேதோ கற்பனை வந்து (வாய்க்கொழுப்பு)
  • வண்டிக்காரன் சொந்த ஊரு மதுர (மாநகரக் காவல்)
இத எழுதும் போது இன்னொரு முக்கியமான விஷயத்தப் பத்தியும் சொல்லணும்... ஒவ்வொரு காலகட்டத்திலும் சந்திரபோஸ் தன்னுடைய இசையில் கே.ஜே.யேசுதாசுக்கு மிகச் சிறந்த பாடல்கள கொடுத்திருப்பாரு.. இது ஒரு அபூர்வமான இணைன்னே சொல்லலாம்..

  • மாம்பூவே சிறு மைனாவே (சந்திரபோசின் முதல் ஹிட்)
  • ஓடையின்னா நல்லோட... ஒளிஞ்சிருக்கப் பூஞ்சோல ( ராஜாத்தி ரோஜாக்கிளி படப் பாடல்)
  • பொய்யின்றி மெய்யோடு நெய் கொண்டுபோனால் ( இன்றும் அனைத்து ஐய்யப்ப பூஜைகளிலும் தவறாது இடம் பிடிக்கு சந்திரபோஸின் இசைச் சொத்து)
  • தோடி ராகம் பாடவா மெல்லப்பாடு (மாநகரக் காவல்)
  • ரவிவர்மன் எழுதாத கலையோ ( வசந்தி)
  • சந்தோஷம் காணாத வாழ்வுண்டா ( வசந்தி படப் பாடல்... இந்தப் பாடல் ல‌ "வாழ்ந்துவிட்டால்"ன்ற வார்த்தைய தாசேட்டன் பாடும்போது ஒரு Roller Coaster ல சுத்தி மெதுவா land ஆன உணர்வு இருக்கும்..)
  • சின்ன சின்னப் பூவே.. நீ கண்ணால் பாரு போதும் ( சங்கர் குரு)
  • ஏதோ நடக்கிறது... இதமாய் இருக்கிறது... ( மனிதன் - என்ன ஒரு ஃபீல்... றெக்கட்ட நமக்கு மொளக்கிற மாதிரியே இருக்கும்)
  • ஒரு பண்பாடு இல்லையென்றால் ( ராஜா சின்ன ரோஜா படத்தின் தத்துவப் பாடல்)
இந்த ரெண்டாவது இன்னிங்ஸ்ல பாண்டியராஜன் நடித்த ஒரு டஜன் படங்களும், ரகுவரன் நடிப்பில் "மைக்கேல் ராஜ்",  உட்பட ஒரு அரை டஜன் படங்களும், பார்த்திபனின் முதல் படமான புதியபாதையும் அடக்கம்.

1992 ல ரோஜாவுல "ஏ.ஆர். ரகுமான்" னு  வைரமுத்துவுக்கு ஒரு புதுக் கூட்டாளி கெடைக்க‌ ,  "எஜமான்' படம் மூலம் ஏவிஎம் மீண்டும் இளையராஜாவோட கைகோர்க்க அதுக்கு பிறகு இந்தக் கூட்ட்ணி தொடரவே இல்ல...

இவருக்கு மூன்றாவது இன்னிங்சை அளித்தவர் இயக்குநர் வி.சேகர். அவருடைய முதல் படமான 'நீங்களும் ஹீரோ தான்"ல ஆரம்பிச்சு, "வரவு எட்டணா செலவு பத்தணா", "நான் புடிச்ச மாப்பிள்ளை", "பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்", "பொறந்த வீடா புகுந்த வீடா", "நான் பெத்த மகனே"ன்னு வரிசையா எல்லாப் படத்துக்கும் சந்திரபோஸ் இசை தான்.. "காலம் மாறிப் போச்சு"ல தான் தேவா இந்த இடத்துக்கு வந்தார்...

அதற்கு பிறகு நடந்தது பத்தி விரிவா சொல்லத் தேவையில்ல.. 90 கள்ல இளையராவோட இடத்த ரகுமானும்... இவரோட இடத்த இவரது முன்னாள் கூட்டாளி தேவாவும் பிடிக்க அதற்கு பிறகு இவருக்கு பெரிதாய் படங்கள் அமையல... ரொம்ப நாள் கழிச்சு தன்னோட பூஞ்சிட்டு குருவிகளாவ ரீமிக்ஸ் பண்ணி வெளியிட்டாரு... அப்புறம் சீரியல்ல கொஞ்ச நாள் நடிகர் அவதாரம் எடுத்தாரு...

ஒரு பத்தாண்டு காலம் காதுகளை குடையாத மென்மையான நல்ல பாடல்களைத் தந்த இந்த இசையமைப்பாளர் செப்டம்பர் 2010 ல தனது இசையை மட்டும் நம்மளோட விட்டுட்டு பிரிந்தார்.....

முத்தாய்ப்பாய் இந்தச் சுதந்திரப் பொன்னாளில், திரு. சந்திரபோஸ் இசையில் , "இது போன்ற உயர்ந்த பாடல்களை நான் ஊதியம் பெறாமலே பாட ஆசைப்படுகிறேன்" என்று கானகந்தர்வன் கே.ஜே.யேசுதாஸ் சொன்ன அந்தப் பாடலில் இருந்து....

பாசங்கள் போதும் பார்வைகள் போதும்
பாலையில் நீரும் சுரந்து விடும்
புன்னகை போதும் பூமொழி போதும்
போர்களும் கூட முடிந்துவிடும்

பாதையை அன்பே திறந்துவிடும்
பாறையும் பழமாய் கனிந்துவிடும்
வாழ்க்கையின் ஆழம் விளங்கிவிடும்!!!!!!!!

Sunday, August 2, 2015

என்னம்மா..... இப்படி பண்றீங்களேம்மா!!!!!!!!

ஒரு ரெண்டு வருஷத்துக்கு முந்தி ஒரு "நோ தங்கமணி டே" ல கையில கேம‌ராவோட மைசூர் உயிரியல் பூங்கால மர்மோசெட் குரங்க படம் புடிச்சிட்டு இருந்தேன்... அப்போ அங்கே ஒரு குரூப் கேரளாவுல இருந்து வந்தாங்ய... அதுல ஒரு ஆளு "இதா.... நம்மட‌ மலை அண்ணான்..." அப்டின்னாரு  (இது தான் நம்ம ஊரு மலை அணில்னு அர்த்தம்)... நம்மளும் சும்மா இருக்க முடியாம.. இது அணில் இல்லங்க உலகின் மிகச்சிறிய குரங்கு அப்டின்னேன்... அதுல கடுப்பான அந்தாளும்... கொரங்கு எங்கயாச்சும் இத்துணூண்டு இருக்குமா? இது மலபார் அணில்னு சத்யாகிரகம் பண்ணுணாரு...



வேணும்னா கீழ போர்டு இருக்கு பாருங்க அப்டின்னேன்... "ம்ம்.. நீ பாரு... மருமோ....செட்டு...  அப்டின்னா மலையாளத்துல மலை அண்ணான்...." அப்டின்னுட்டு.. (அவர்கூட வந்தவர்கிட்ட "எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசுராம் பாரு...  அணில் எது குரங்கு எதுன்னுகூட  தெரியாம" அப்டின்னு பேசிகிட்டே நகர்ந்துட்டாரு)..

நம்ம மனசாட்சியும்... விவேக் வாய்சுல "அடப்பாவிங்களா...  மர்மோசெட்ட மலையாளம் வரைக்கும் கொண்டாந்துட்டீங்களாடா???.. நல்ல வேள‌.. இது தான் மம்மூட்டியோட  அடுத்த படத்துல  ஹீரோயின் அப்டின்னு சொல்லாம விட்டீங்களே அதுவே பெருசு தான்... அது சரி உங்க ஊருக்கு ஒரு ராம.நாராயணன் சார் இல்லாமலா போயிருப்பாரு...." அப்டின்னு பொலம்ப ஆரம்பிச்சிடுச்சு....

இந்த ஒரு ஆளு மட்டுமில்ல... பொதுவாவே Zoo க்கு வர்ர ஆளுக  அடிக்கிற கூத்து இருக்கே... சொல்லி மாளாது... வீட்டுல சீரீயல் பாக்கும் போதெல்லாம் மயில் கழுத்து பொடவை, புள்ளிமான் பார்டர்னு Discovery Channel effect ல‌ பாக்குற குடும்ப இஸ்திரிகள்...  இங்க வரும்போது தான்.. "ஆமாக்கா, நேத்து கரெக்டா எட்டு மணிக்கு கரண்ட கட் பண்ணிட்டானுங்க.. தெய்வ மகளே பாக்க முடியலன்னு ஃபீல் பண்ணுங்க... (அடி பிசாசு மகளே, இங்க வந்தும் உனக்கு தெய்வ மகள் நெனப்பு தானா..)

ஈமு கோழியப் பாத்து... நம்ம ஈரோட்டுல ஈமு வளக்கச் சொல்லி ஏமாத்திட்டு ஓடுனாங்யளே அந்தக் கோழி தான் இது... இது ஒரு குரூப்பு (ஈமுவ பத்தி  Intro குடுக்க எப்புடி ஒரு மேட்டர புடிச்சு வச்சிருக்காங்ய பாரு.. இதுல டெல்லி கணேஷ வேற திட்டுவாங்ய.. )

ஹான் ராஜூ பாய்... போலியே... I have submitted the timesheets for this week... சோனு பேட்டா... Cage கே பாஸ் மத் ஜாவோ... (இது ஒரு பக்கம் போனுக்கும், இன்னொரு பக்கம் சோனுக்கும் நடுவுல வாரக் கடைசிலையும் டீ ஆத்துர ஐ.டி குருப்பு... இங்க வந்துமாடா??? )

மாப்ள.. இதான்டா வான்கோழி.. போன தீவாளிக்கு மன்னார்குடி சாந்தில பிரியாணி அடிச்சமே அதே தான்...  இது ஒரு தின்னிப் பண்டார குருப்பு... (இதுல கொடும என்னன்னா அவிங்ய சொன்னது Ostrich பறவையப் பாத்து... அடேய். இது நெருப்புக் கோழிடா.. ஒயரமா இருக்குன்றதுக்காக இத வான்கோழிங்கிறாம் பாரு...)



இதுக்கு நடுவுல நியூஸ் ரிப்போர்டர் கிட்ட சீரியசா பேட்டி குடுக்குற குரூப்பு ஒண்ணு... "இங்க நாங்க நெரைய தரம் வந்துருக்கோம்... இங்க புலியெல்லாம் தூங்கிகிட்டே இருக்கு.. இந்த மத்திய அரசும், மாநில அரசும் எதாச்சும் நடவடிக்கை எடுத்தா நல்லாருக்கும்... (மத்திய மாநில அரசுக்கெல்லாம் வேர வேலை வெட்டியே இல்லையாம்மா??? இப்டி கெளம்புறீங்களே!!!)

இவங்ய இப்டின்னா ஸ்கூல்ல இருந்து பசங்கள கூட்டிட்டு வர்ர குரூப் வேர மாதிரி இருக்கும்... "மேத்ஸ் மிஸ் போட்டுட்டு வந்திருக்குர Chocker Set நல்லாருக்குல்ல... எங்க வாங்கினாங்கன்னு கேக்கணும்..." இது டீச்சர் குரூப்புன்னா.. பசங்க வேர லெவல்ல மெரட்டுவாங்ய... "இதான்டா நீர் யான... இதுக்கு மூணு கண்ணு இருக்கும்..." (என்னது மூணு கண்ணா?? நல்லவேளடா... இதான் மூணு கண்ணன்னு சொல்லாம போனியே... )

இவங்களாச்சும் பரவால்ல, Facebook ல ஒரு குரூப்பு இருக்கானுங்க பாருங்க... ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்ப்ப்பா.....

டெல்லி உயிரியல் பூங்கால புலி ஒருத்தர இழுத்துட்டு போனப்போ ஆளாளுக்கு ஆராய்ச்சில இரங்கி கதிகலங்க அடிச்சிட்டாங்ய... இதுல உச்சகட்டமா ஒரு ஆளு எழுதுறாரு பாருங்க "அது ஒரு பெண் புலி... தாய்மையின் அடையாளம்.. ஒரு தாய் தன் கண்முன் ஒரு குழந்தை அடிபடுவதை தாங்க முடியாமல் எப்படி காப்பாற்றுவாளோ அப்படித்தான் அந்த இளைஞனை காப்பாற்ற முயன்றது..." (நீங்கல்லாம் எங்கேந்துடா கெளம்புறீங்க... முடியல....) உண்மையில அது ஒரு ஆண் புலி.. பேரு விஜய்... (நம்ம யங் டளபதி இல்லப்பா) புலின்னு இல்ல, நம்ம வீட்டுல இருக்குற நாய், பூனை கூட தன் எல்லைக்குள் இருக்குற பொருளை யாராச்சும் எடுக்க வந்தா அல்லது கல்லால அடிச்சா, தூக்கிட்டு ஓடும்... காரணம்.. "நிம்மதியா இருக்க உடமாட்டீங்களாடா சனியன் புடிச்சவனுங்களான்னு" அர்த்தம்... எல்லாரும் கல்லால அடிச்சப்போ அந்த புலியும் அதையே தான் செஞ்சிச்சு.. ஒரே வித்தியாசம் புலி தன் குட்டிகளைக் கூட கழுத்தைப் பற்றி தான் தூக்கும்.. அப்படி அந்த இளைஞனைத் தூக்குனப்போ அதனுடைய 3 இன்ச் நீளமுள்ள பல் (Canine) கழுத்துல இரங்கி செத்துட்டான்...


இவங்யள சொல்லிக் குத்தமில்ல... நமக்கு நம்ம பக்கத்துல இருக்கிற விலங்குகளப் பத்தியே சரியாத் தெரியாது.. பாலம் கட்டும்போது ராமருக்கு அணில் எளநி ஊத்திக் குடுத்துச்சு.. ஓணான் ஒண்ணுக்கு ஊத்திகுடுத்துச்சுனு சொல்லி அத கல்லால அடிக்க்கிற பரம்பர தான நாம...

நமக்கு தமிழ் சினிமா சொல்லிக் குடுத்த விலங்கியல் கல்வியே நாய்னா "ராஜா", குரங்குன்னா "ராமு", பாம்புன்னா "நாகராஜா", யானைன்னா "வெள்ளிக்கெழம ராமசாமி"... அதுங்க என்னடா செய்யும்???னா... ஹீரோயினுக்கு வளையல் வாங்குறது, வில்லன் ஷூவுக்குள்ள தேள வைக்கிறது, கிளைமாக்ஸ் பைட்டுல நெருப்புக்குள்ள பாஞ்சு சண்ட போடுறது... இதெல்லாம் தான்...

பொதுவா நம்ம ஊருல ஒரு வீட்டுல‌, இந்த வாரம் Zooக்கு போகலாம்னு முடிவு செஞ்சாங்கன்னா, மொதல்ல செய்யிர வேலையே ஒரு தூக்கு வாளி நெரைய புளி சாதமோ இல்ல பிரியாணியோ கட்டுறது தான்... அப்புரம் ரெண்டு ஷட்டில்காக் மட்டையும் ஒரு ஜமுக்காள‌மும் எடுத்துக்கிறது... பத்து பத்தரைக்கா கெளம்பி, அப்டியே போயி ஜமுக்காளத்த விரிச்சு புளிசோத்த ஒரு கட்டு கட்டிட்டு.. மிச்ச சோத்த அங்கேயே கொட்டிட்டு... ரெண்டு ரவுண்டு ஷட்டில் ஆடிட்டு... மதியம் ஒரு ரெண்டு மணிக்காட்ட புலியையும் சிங்கத்தையும் தேடிப் போனா, உச்சி வெய்யில்ல அதது உள்ளார தூங்கிகிட்டு இருக்கும்...

அப்புற‌ம் மத்திய மாநில அரசுகள நடவடிக்கை எடுக்கச் சொல்லிட்டு வந்துருவோம்... குரங்கு இருக்குற எடத்துல நானும் உன் சொந்தக்காரப்பயதான்ற மாதிரி உர்ர்ருனு கத்துறது... அது திரும்பலைன்னா கல்லக் கொண்டு அடிக்கிறது... புதுசா கெளம்பியிருக்கிற ஃபோட்டோ மோகத்துல  அதப் புடிச்சி பப்ளிகுட்டி பண்ணிக்கிறதுண்ணு நமக்குன்னு ஒரு தனி அஜெண்டாவே உண்டு... இந்த போட்டோ கிருக்கு முத்தி சமீபத்துல ஒரு ஆளு பூங்காவுல இருந்த ஒரு ஊழியர கரெக்ட் பண்ணி ஜாகுவார் கூண்டுக்குப் போயி கையக் கால இழுத்து போட்டோ புடிச்சது மட்டுமில்லாம Facebook ல பப்ளிகுட்டி பண்ணப்போயி போலிசுல மாட்டி கம்பி எண்ணுற அளவுக்கு போயிருச்சு...


இது ஒரு பக்கம் இருக்கும்போது, பூங்காக்கள்ள இந்த விலங்குகளப் பராமரிக்கிற ஊழியர்கள் பண்ணுற அலப்பறை இன்னும் அதிகம்... காச வாங்கிகிட்டு கண்டவனையும் விலங்குகளின் தனியறைக்குள் விடுவது... பூங்காக்கள்ல இருக்குற சந்தன மரங்கள வெட்டிவித்து மாட்டிகிறது, சமீபத்துல.. ஒரு சிம்பன்சிய தப்பிக்க விட்டு அதுக்கப்புறம் அத வெளக்கமாத்தால அடிச்ச‌து (நெஜந்தாங்க)... இப்படி அடுக்கிகிட்டே போகலாம்...

இந்தியாவுல 164 உயிரியல் பூங்காக்கள் (Central Zoo Authority of India accredited)  இருந்தாலும் WAZA அப்டிங்கிற "World Assocciation of Zoos and Aquariums"அங்கீகாரம் பெற்ற பூங்காக்கள் வெறும் நாலே நாலு தான்... இவ்வளவு பெரிய துணைக்கண்டத்துல நாலு பூங்காக்களுக்கு உலக அங்கீகாரம் வாங்கவே முக்கவேண்டி இருப்பதற்கு காரணங்களே நாம மேல பார்த்த விழிப்புணர்வின்மை, சரியான பராமரிப்பின்மை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள்.. இது மூணும் தான்....

சரி Zooவுல அப்டி என்னத்த பண்ணணும்?? என்ன பண்ணலாம்??

Zooக்கள் அமைக்கப்படுவதன் நோக்கமே 3 காரணங்களுக்காக, Creating Awareness, Captive Breeding, Introduction of new blood lines. இதுல முதல் காரணமான விலங்குகள் மற்றும் அதன் சுற்றுச் சூழல் மேலான விழிப்புணர்வை வளர்ப்பது...

  • உதாரணத்திற்கு, நமது உயிரியல் பூங்காக்களில் பார்க்கிற‌ Leopard, Cheetah, Jaguar இந்த மூன்று புள்ளிப்புலிகளையும் நாம சொல்றது சிறுத்தைன்னு தான்..  பார்வைக்கு ஏறக்குறைய ஒரே மாதிரி இருந்தாலும் உடலமைப்பிலும், வேட்டையாடும் முறை, அவை வசிக்கும் சூழலும் முற்றிலும் வேறானவை... Leopard ஆசிய மலைக்காடுகளிலும், Cheetah ஆப்பிரிக்க சமவெளிகளிலும், Jaguar தென்னமெரிக்க மழைக்காடுகளிலும் வசிப்பவை. இந்த வேறுபாடுகளையும், அவற்றின் சூழலையும் பாக்க வர்ர பசங்களுக்கு சொல்லிக் கொடுக்கலாம்.
  • வெள்ளைப் புலியையும், கருஞ்சிறுத்தையயும் பார்த்து வெறுமனே ஆச்சர்யப் படாமல் அவைகளின் தோலின் நிறமி மாற்றத்தால் ஏற்படும் melanism மற்றும் albinism பத்தி பசங்களுக்கு சொல்லித் தரலாம்.
  • பார்வைக்கு மான்னு தெரிந்தாலும் உருவ அமைப்பில் வேறுபாடு கொண்ட Deer மற்றும் Antelope பற்றிய வேறுபாடுகளை சொல்லித்தரலாம்...
என்னய்யா எல்லாமே பள்ளிக்கூடத்து பசங்களுக்கா சொல்ற, பூங்காவுக்கு சின்னப்பய மட்டுமா போறான்ன்னு கேக்குற ஆட்களுக்கு நாம தெரிஞ்சுக்கவும் ஏராளம் இருக்கு...

  • மொதல்ல எந்த சமயத்துல Zooக்கு போகணும்னு தெரிஞ்சுக்கணும்... அதிகாலை 08:30 - 10:30 அல்லது மாலை 4 முதல் போகலாம்.. இந்த நேரத்தில் அவை சுறுசுறுப்பாக இயங்கும். மதிய நேரத்துல போனா அவைகள் ஓய்வு எடுக்கும். (அப்புறம் மத்திய மாநில அரசுகளத் தான் திட்டணும்).
  • ரொம்ப அடிப்படையா ஒரு விலங்கு எந்தப் பகுதியை சேர்ந்தது, அதன் உணவுப் பழக்கம் என்னன்னு தெரிஞ்சுக்கலாம். Zooக்களில் அவற்றின் அடிப்படையான உணவுப் பழக்கவழக்கதைப் பொருத்து தான் உணவு கொடுப்பாங்க.. குரங்கினங்களுக்கு பழங்கள் மற்றும் வெள்ளரி, மான், மிளா, காட்டெருமை போன்ற தாவர உண்ணிகளுக்கு தீவனப்புல்லும், தவிடும், நரி, செந்நாய், ஓநாய் போன்ற சிறிய ஊனுண்ணிகளுக்கு கோழி இறைச்சி, புலி, சிங்கம் போன்ற பெரிய ஊனுண்ணிகளுக்க்கு மாட்டிறைச்சி, கரடிகளுக்கு பூச்சிகள் மற்றும் தேன், சிறிய பாம்புகளுக்கு எலிகள், ராஜநாகத்திற்கு உணவாக சிறிய பாம்புகள், பறவைகளுக்கு தானியங்கள் இப்படி நிரைய இருக்கு.. 
  • இந்தியாவின் தேசிய விலங்கு புலி, தேசியப் பறவை மயில்னு எல்லாருக்கும் தெரியும். ஆனால் நம்மில் ரொம்ப பேருக்கு தெரியாத விஷயம், அதே போல ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு மாநில விலங்கும் பறவையும் கூட உண்டு அப்டிங்கிறது... உதாரணத்துக்கு தமிழகத்தின் மாநில விலங்கு வரையாடு, கேரளத்திற்கும், கர்நாடகாவுக்கும் இந்திய யானை, ஆந்திராவுக்கு கிருஷ்ண ஜிங்க்கா என்கிற மானினம், தெலுங்கானாவுக்கு புள்ளிமான்...

  • இந்தியாவில் ஒரே ஒரு உயிரியல் பூங்காவில் மட்டுமே உள்ள அறிய வகை வெளிநாட்டு உயிரினங்கள் உண்டு... உதாரணத்துக்கு "வண்டலூரில் மட்டுமே உள்ள "European Brown Bear" மற்றும் "Pygmy Hippo", மைசூரில் மட்டுமே உள்ள "Brazilian Tapir", "Madagascar Meerkat", மற்றும் "Savannah Bat Eared Fox", ஒரிசாவின் நந்தன் கானனில் மட்டுமே உள்ள "Orangutan", டார்ஜிலிங் உயிரியல் பூங்காவில் மட்டும் உள்ள பாகிஸ்தானின் தேசிய விலங்கு "Markhor", ஐதராபாத்தில் மட்டுமுள்ள "Galapagos tortoise" மெகா சைஸ் ஆமை.
  • உலகிலேயே ஒரு உயிரியல் பூங்காவின் பெயரில் ஒரு விரைவு ரயில் வண்டி இயங்குவது இந்தியாவில் தான்... அது ஒரிசா மாநிலத்தின் பூரி நகரிலிருந்து புதுதில்லி வரை செல்லும் 'நந்தன் கானன் விரைவு வண்டி".
இப்படி எழுதிகிட்டே போகலாம்... இதெல்லாம் எழுதும்போது ஒரு முக்கியமான விஷயத்தை மறந்துட்டேன்... Zoo ல உச்சக்கட்டமா ஒரு அக்கப்போர் பண்றாங்யப்பா... தப்பித் தவறிக்கூட எந்தப் புதர்கிட்டயும் போயிடாதீங்க... ஜோடி ஜோடியா உள்ளேந்து வர்ராங்ய... நம்ம வீட்டு வாசல்ல ரெண்டு நாயோ அல்லது கழுதையோ ஒண்ணா இருந்தா "ச்சீ சனியனுங்களா வீட்டு வாசல்ல வந்து மோந்துகிட்டு அலையிதுங்க பாரு.."னு கல்லத்தூக்கி அடிப்போம்... அதே வேலைய ஆறாம் அறிவு இருக்கிற நம்மாளுங்க அதுங்க வீட்டு வாசல்ல (Zoo ல) பண்றது தான் நான் சொன்ன உச்சக்கட்ட அசிங்கம்...


பேச்சு மொழி மட்டும் இருந்தா அந்த விலங்குகளும் இதையே சொல்லித்தான் நம்மை திட்டும்...

"என்னம்மா..... இப்படி பண்றீங்களேம்மா!!!!!!!!"

Saturday, July 18, 2015

விச்சு - தமிழ்த் திரையிசையின் அச்சு!!!!!

இன்றைக்கு சரியாக ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் திரையிசை முடியுடை மூவேந்தர்களின் ஆட்சியில் இருந்தது... தமிழ் ரசிகனின் மனங்களே அவர்களது எல்லை.. தன்மானமிக்க தமிழன் இவர்களின் ஆட்சியில் மட்டும் காலத்திற்கும் அடிமையாய் இருக்க சித்தமாக இருந்தான்...

ஒருவர் சோழநாட்டுத் திருவரங்கத்தில் பிறந்தவர்.. பெயர் வாலி... அடுத்தவர் சேரநாட்டு பாலக்காட்டில் எலப்புள்ளி கிராமத்தில் பிறந்தவர்... பெயர் விஸ்வநாதன்... மூன்றாமவர் பாண்டிநாட்டு சிறுகூடற்பட்டியில் பிறந்தவர்... பெயர் கண்ணதாசன்... முன்னவரும் பின்னவரும் தம் கவிதைத் தோரணங்களால் ஒரு புதிய கற்பனை உலகையே செதுக்கியவர்கள்.. இவர்கள் படைத்த கவிதை உலகிற்கு தமிழனை, தமிழ் ரசிகனை தம் இசைவாகனத்தில் ஏற்றிச் சென்றவர் மன்னவர்... மெல்லிசை மன்னவர்...

சமூகத் திரைப்படங்களின் வருகை தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றபோது, தமிழ் சினிமா இசையும் அடுத்த கட்டத்திற்கு தன்னை தயார்படுத்திக் கொள்ளவேண்டிய கட்டம் இருந்தது.. அதை செவ்வனே செய்துமுடித்த பெருமகன் மெல்லிசை மன்னர்...

இது தான் இவரது இசை வடிவம் என்று எந்தப் பாத்திரத்துக்குள்ளும் மூடிவிடக் கூடியது அல்ல அவரது இசை வடிவம்.. ஆனால் எந்தக் (கதா)பாத்திரத்துக்கும் பொருந்தக் கூடிய இசை அவரது இசை....

சங்கர்-ஜெய்கிஷன், கிஷோர்-ரஃபி, லதா மங்கேஷ்கர் என்ற அன்றைய இந்தி இசை உலகில் கொடிகட்டிப் பறந்த ஜோடியைப் போல "விஸ்வநாதன்-ராமமூர்த்தி, டி.எம்.எஸ்-பி.பி.எஸ், பி.சுசீலா என்ற புதிய கூட்டணியை அமைத்து கிட்டத்தட்ட ஒரு கால் நூற்றாண்டு காலம் தமிழ் ரசிகனை தம் இசையால் கட்டிப் போட்டவர் அவர்...

மக்கள் திலகம் - நடிகர் திலகம் என்னும் தமிழ் சினிமாவின் ஆதர்ஷ புருஷர்கள் இருவரும் 30 ஆண்டுகாலம் திரையில் பாடி நடித்தவை பெரும்பாலானவை இவரது பாடல்களே...

ஆம்.. நிஜம்... ஒரு விழாவில் கவிஞர்.வாலி அவர்கள் சொன்னது...
"விஸ்வநாத அண்ணனே...

உன்னைக் காணும் வரையில்
எனக்கு சோற்றுக்கே வக்கில்லை

உன்னைக் கண்ட பிறகு
எனக்கு சோறுதின்னக் கூட நேரமில்லை" என்று...

அவர் பயன்படுத்தாத இசைக் கருவிகள் இல்லை... ஷெனாய் என்றால் "என்னை யார் என்று எண்ணி", அக்கார்டியன் என்றால் "கண் போன போக்கிலே", பியானோ என்றால் "பாட்டொன்று கேட்டேன்", டிரம்பெட் என்றால் 'மை நேம் இஸ் பில்லா", கிடார் என்றால் கண்களை மூடிக்கொண்டு "நினைத்தாலே இனிக்கும்" படத்தின் எந்தப் பாடலும் என்று சொல்லும்படி இசைக் கருவிகளை அத்தனை நேர்த்தியாக பயன்படுத்தியவர்... வெறும் மூன்று இசைக்கருவிகளை வைத்து இசையமைத்த "தாழையாம்பூ முடித்து" பாடலாகட்டும் முன்னூற்றுக்கும் அதிகமாக இசைக்கருவிகளை வைத்து உருவான "எங்கே நிம்மதி" ஆகட்டும் ஒவ்வொரு இசைக் கருவிக்கும் அதன் வீரியத்தை சரியாய் அடையாளம் காட்டக் கூடியன அவரது பாடல்கள்...

காங்கோ-பாங்கோ பின்னணியில் தொடங்கும் பல்லவி, முதலாவது Interlude ல் ஒரு மேஜிக்கை நிகழ்த்திவிட்டு சரணத்தில் தபலாவுக்கும் டக்காவுக்கும் மாறுவதும், பின் மீண்டும் காங்கோ-பாங்கோவுக்கு திரும்புவதும் மெல்லிசை மன்னரின் Signature Composing... "பார்த்த ஞாபகம் இல்லையோ", "பேசுவது கிளியா", "பூமாலையில் ஓர் மல்லிகை" இப்படி அநேகம் பாடல்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்...

Rhythm Programming ல் ஒரு புதிய பாணியை கொண்டுவந்தவர் அவர்.. உதாரணத்திற்கு பாசமலர் படத்தில் வரும் "பாவையின் முகத்தைப் பார்த்தால்" பாடலை எடுத்துக் கொள்ளுங்கள்... அதன் சரணத்தில் முதல் இரண்டு வரிகளில் வரும் டக்காவின் டெம்போ மூன்றாவது நான்காவது அடிகளில் மாறி, பின் மீண்டும் ஒரு துள்ளலோடு தொடங்கி, சரணத்தின் முடிவில் ஒரு தீர்மானத்துடன் அழகாய் நிரைவடைகிறது... ஒவ்வொரு இரண்டு அடிக்கும் மாறும் தாளத்தைக் கொண்ட Rhythm Programming...

சஹானா என்றதும் நினைவுக்கு வருகிற "பார்த்தேன் சிரித்தேன்", கானடா என்றால் "ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல்", கரகரப்ரியா ராகமா "மாதவிப் பொன் மயிலாள்" ராகம் தானே என்று ராகங்களை திரைப்பாடல்கள் மூலம் இன்றும் பலரால் அடையாளம் காட்டப் படுபவை இவரது பாடல்கள்....

கர்நாடக ராகங்கள் மட்டுமல்ல, அற்றை நாளின் Contemporary World Music ஐ தமிழ் ரசிகனுக்கு அள்ளித் தந்தவை இவரது பாடல்களே... உதாரணத்திற்கு "காசே தான் கடவுளடா" படத்தில் வரும் 'ஜம்புலிங்கமே ஜடாதரா" பாடலை எடுத்துக் கொண்டால் Fusion Music ன் மிகச் சிறந்த உதாரணம்... ஏக்தாராவில் தொடங்கி, உருமுகின்ற டிரம்ஸ் கொண்ட பல்லவியிலும் Electric Guitar Interlude லும் அச்சுப் பிசகாத மேலை நாட்டு இசையில் வளர்ந்து, சரணம் தொடங்கும் போது தபலாவில் பக்காவான இந்திய பஜனைப் பாடலாக மாறிப் பின் மீண்டும் Westernக்கு மாறுவது ஒரு அழகான இசைக் கலவை... ஆங்கிலேய இசை மட்டுமன்றி Persian Music ஐ "பட்டத்து ராணி" பாடலிலும், Egyptian Music ஐ "நினைத்தேன் வந்தாய் நூறு வயது"பாடலிலும், Spanish இசையை "துள்ளுவதோ இளமை" பாடலிலும், Japanese Music ஐ "பன்சாயி காதல் பறவை"களிலும், Latin இசையை "யார் அந்த நிலவிலும்", Russian Music "கண் போன போக்கிலே கால் போகலாமா"விலும்,  பாடலிலும் எளிமைப் படுத்தி தமிழ் ரசிகனுக்கு விருந்து படைத்தவர்...

ராகங்களுக்கு மட்டுமல்ல, "டி.எம்.எஸ் என்றால் "யார் அந்த நிலவு", பி.பி.ஸ்ரீநிவாஸ் என்றால் "நிலவே என்னிடம் நெருங்காதே", "சீர்காழி கோவிந்தராஜன்" என்றால் "உள்ளத்தில் நல்ல உள்ளம்", "டி.ஆர்.மகாலிங்கம்" என்றால் "செந்தமிழ்த் தேன்மொழியாள்", "பி.சுசீலா என்றால் "பார்த்த ஞாபகம் இல்லையோ", ஏ.எல்.ராகவனுக்கு "எங்கிருந்தாலும் வாழ்க", எல். ஆர். ஈஸ்வரிக்கு "பட்டத்து ராணி" இப்படி அன்றைய பாடகர்களுக்கு கூட அவர்கள் பெயரைச் சொன்னாலே உடனே நினைவிலே தோன்றுகிற பாடல்கள் அவருடைய பாடல்களே...

இசையமைப்பில் மட்டுமல்ல.. பாடுவதிலும் தன்னுடைய முத்திரையை சரியாக பதித்தவர் அவர்....

இசை ஆராய்ச்சியாளர் வாமனன் சொல்வது போல அவரது குரலில் ஒரு "அந்தராத்மா" உள்ளிருந்து இயக்குகிற ஒரு ஆத்மா இருக்கும்.... வெறும் பாடலையும், சூழலையும் உந்தித் தள்ளி கேட்பவரின் இதயத்தை பிசைகிற குரல் அது...

ஜமீந்தார் சிவலிங்கம் (நடிகர் திலகம்), தன் மகள் தனது வீட்டை விட்டு வெளியேறிய பின் பாடுவதாய் வருகிற "பார் மகளே பார்" பாடல் அந்தக் காட்சியை காவியமாக்கி விடுகிறது... "இக்கரைக்கு அக்கரை பச்சை...", "உனக்கென்ன குறைச்சல் நீயொரு ராஜா....", என்று தத்துவமாக இருக்கட்டும்... "ஜகமே தந்திரம் சுகமே மந்திரம்" என்று சூஃபி தத்துவத்தை சொல்லும், சூப்பர் ஸ்டாருக்கு பாடிய ஜாலிப் பாடலாகட்டும்..  அவரது முதல் பாடலான "அன்பு மலர் ஆசை மலர்" என்னும் "பாசமலர்" பட டைட்டில் பாடலாகட்டும்... அந்தராத்மாவை அவரது குரல் அடையாளப் படுத்திக் கொண்டே இருக்கும்...

புகழ்பெற்ற இந்திப் படமான "ஆராதனா" தமிழில் "சிவகாமியின் செல்வன்" என்று எடுக்கப்பட்டபோது "எதற்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திரு மகளே" என்று எம்.எஸ்.வி பாடியிருப்பார்... தற்கொலை செய்துகொள்ள இருந்த ஒரு பெண் அந்தப் பாடலைக் கேட்டு தன் முடிவை மாற்றிக் கொண்டார்...அது தான் உள் மனதின் இசை...

முகமது பின் துக்ளக் படம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்ற பிரச்சாரம் இருந்த நிலையில், அந்தப் படத்தின் டைட்டில் பாடலை "அல்லா அல்லா" என்று தொடங்க விரும்பினார்கள்... சரி "ரஃபி சாப்"பை பாடவைக்கலாம் என்று எம்.எஸ்.வி, முகமது ரஃபியை கேட்டபோது தான் ஹஜ் பயணத்தில் இருப்பதாயும் வந்து பாடித்தருவதாகவும் சொன்னார்... படத்தை காக்கவைக்க இயலாத நிலையில் இயக்க்குநர் சோ எம்.எஸ்.வியையே பாடச் சொன்னார்... அவரோ "பித்துக்குளி முருகதாஸ், சீர்காழி, நாகூர் அனீபா" மூவரில் ஒருவரை பாடவைக்கலாம் என்றார்... எல்லாப் பெயர்களையும் எழுதி சீட்டுக் குலுக்கிப் போட்டு எடுத்தார்கள்... எம்.எஸ்.வி பெயர் வந்தது.... அவரும் பாடினார். பாடல் ஹிட் ஆனது.. பிறகு சோ உண்மையை வெளியிட்டார்... "அவரது குரலில் ஒரு தொழுகை உணர்வு இருக்கும்.. அதனால எல்லா சீட்டுலையும் எம்.எஸ்.வின்னு எழுதிப் போட்டுட்டேன்" என்று.... அந்த உணர்வு தான் அந்தராத்மா....

சங்கமம் படத்தை எடுத்துக் கொண்டால்.. அதில் உருப்படியான ஒரே விஷயம் ரகுமானின் இசை தான்...  ஆவுடைப்பிள்ளையாக வரும் மணிவண்ணனுக்கு "ஆலாலகண்டா ஆடலுக்கு தகப்பா" என்று முழங்குகின்ற  பறையின் பின்னணியோடு எம்.எஸ்.வி பாடும்போது ரசிகனை எழுந்து அமரவைத்து அந்தக் கதாபாத்திரத்தின் நீட்சியை அதிகமாக்கியது... இந்துஸ்தானி சங்கதிகளை சர்வ சாதாரணமாகப் போடும் ஹரிஹரனை தனது குரலில் உள்ள அந்தராத்மாவால் தூக்கி சாப்பிட்டுருப்பார் எம்.எஸ்.வி....

அவரது இறுதி திரைப் பாடலான "கன்னத்தில் முத்தமிட்டால்" பாடலைக் கேளுங்கள்...

"விடைகொடு எங்கள் நாடே.. கடல் வாசல் தெளிக்கும் வீடே...
பனமரக் காடே... பறவைகள் கூடே மறுமுறை ஒருமுறை பார்ப்போமா...."

முதல் இரண்டு வரிகளை அவர் பாடும்போது மனதை எதுவோ பிசைவது போல ஒரு அழுத்தம் உருவாகி...

சரேலென்று மேல் ஸ்தாயியில் "உதட்டில் புன்னகை புதைத்தோம்.. உயிரை உடம்புக்குள் புதைத்தோம்.." என்ற வரிகளில்... பொத்துக் கொண்டு அழுகை கரகரவென்று நம் கன்னம் நனைப்பது... சாட்சாத் அந்தராத்மாவே அன்றி வேறென்ன....

ஒருவரின் மரணத்தையே மாற்றியமைத்த அந்தராத்மா உடலால் நம்மைப் பிரிந்திருக்கிறது....

ஆனால் இசையால் அது இன்னும் நம்மை சுற்றிச் சுற்றியே வந்துகொண்டிருக்கிறது....

நெஞ்சம் மறப்பதில்லை.... அது நினைவை இழப்பதில்லை.....

திரையுலகம் அவரை செல்லமாக "விச்சு" என்று அழைக்கிறது... உண்மையில் விச்சு... சுழலும் தமிழ்த் திரையிசையின் அச்சு!!!!!

Friday, June 26, 2015

அஜீரண Motto!!! கிண்டுங்க எஜமான்... கிண்டுங்க!!!

அப்பப்பொ சென்சேஷன் தேடுற நம்மாளுகளுக்கு லேட்டஸ்ட் தீனி "மேகி" மேட்டர் தான்... .. டீக்கடை பெஞ்சுல இருந்து டிவி நியூஸ் வரைக்கும்... ஐயகோ...உலகமயமாக்கலின் விளைவு, பொருளாதாரம்,அஜினொமோட்டோ அது இதுன்னு உலக லெவெல்ல கிண்டு கிண்டுனு கிண்டி எறிஞ்சிட்டாங்ய...  இதுல உச்சக்கட்ட காமெடியே, இதுல பாதிப்பேருக்கு மேல இந்த 2 மினிட்ஸ் வஸ்துவ  கூட சரியா கிண்டத் தெரியாத ஆளுக அப்படிங்கிறது ...

இவங்ய இந்தக் கிண்டு கிண்டு கிண்டும்போது நம்ம பங்குக்கு எதயாச்சும் கிண்டலாமேன்னு நமக்கு தெரிஞ்ச ஒரு ஓட்டல்காரர் வாயக்கிண்டுனேன்...அதோட விளைவதான் இந்த போஸ்ட் ரூபத்துல என்னோட சேந்து நீங்களும் அனுபவிக்கப் போறீங்க...

வெளிநாட்டு மேகில அதக் கலந்தான், இதக் கலந்தான்னு சலம்பல் பண்ணுற நமக்கு,  நம்மூர் ஓட்டல்ல நடக்குற அக்கப்போற பத்திப் பெருசா அக்கரையேயில்ல...  குடும்பத்தோட சேந்து எங்காச்சும் போகலாம்னா நாம தேர்ந்தெடுக்குற முதல் சாய்சே ஓட்டல் தான்... அங்க நாம விரும்பி திங்கிற ஐட்டங்கள்ல என்னென்ன கலக்குறாங்கனு ஒரு கிண்டு கிண்டிப் பாப்போம்...

ஓட்டல்ல போனதும் மொதல்ல நாம ஆர்டர் பண்ணுறது சூப்பு தான்... இந்த சூப்ப தயாரிக்க Main Ingredient அதாவது முக்கிய பொருளே Stock (அ) broth னு சொல்லக்கூடிய சாறு தான்... அசைவமா இருந்தா இறைச்சியையோ, சைவமா இருந்தா காய்கறிகளையோ வேகவச்சு அதுல இருந்து இறங்குற ரசத்த தான் Stock னு சொல்லி சூப்ப தயாரிக்க பயன்படுத்துவாங்க.. ஆனா இன்னிக்கு தேதிக்கு அப்டியெல்லாம் யாரும் செய்யிறது இல்ல... மத்த உணவுகளுக்காக வெட்டி முடிச்சதுக்கப்புறம் நாம பயன்படுத்தாத ஒட்டுக்குடல், நாக்கு, சிதறுன துக்கடா மாதிரி ஐட்டங்கள எல்லாம் அண்டாவுல போட்டு தண்ணியகொட்டி அவிச்சு வடிகட்டி தான் Stock செய்யுறாங்க.. சைவமா இருந்தா குடமிளகாயோட மையப் பகுதி, சீவி எறிஞ்ச கேரட் தோல், காலிபிளவரோட கீழ்ப் பகுதின்னு நறுக்கி வீசுன ஐட்டங்கள அவிச்சு எடுத்துறுவாங்க.. மேல 2 ஸ்பூன் எம்.எஸ்.ஜிய போட்டு, உப்பு, மிளகு தூவுனா சூப்பு ரெடி.. நம்ம வீட்டுல நாய்க்கும் மாட்டுக்கும் போடுற மிஞ்சுன ஐட்டத்த தான் காசக் குடுத்து திங்கிறோம்னு தெரியாம நாமளும்.. சூப்பு சூப்பர்னு கன்னி ராசில பிரபு சொல்ற மாதிரி சொல்லி சர்ர்ர்ருனு உறிஞ்சுவோம்...

அடுத்தது Starters... கபாப்... டக்கிலோ... சிக்காங்கொக்கா... எஸ்ட்ரா.. எஸ்ட்ரா...எஸ்ட்ரா.... அதாவது எண்ணெயில பொறிச்ச ஐயிட்டங்கள்...
மூணு கிலோ கடல‌ பருப்பு (கிலோ 45-50 ரூ) ஆட்டுனா தான் , ஒரு லிட்டர் கடலெண்ணெய் கிடைக்கும் . ஆனால் ஒரு லிட்டர் எண்ணெயே  95 ரூவாய்க்கு சந்தைல கெடைக்குது. பிறகு எப்படி குடுக்க முடியுது.. இதுல எந்த எண்ணெயுமே ஒரிஜினல் கடலை எண்ணெய் இல்ல.. பெட்ரோலிய கச்சா எண்ணெயில் , கடைசியா மிஞ்சுற தாரில் இருந்து பிரிச்சு எடுக்குற நிறமற்ற, மணமற்ற ஒரு எண்ணெயில தாவரக் கொழுப்பையும், எசென்சையும் ஊத்திக் கலக்குன மலிவு விலை எண்ணெய் தான்.. இதுல செய்யிற ஐட்டங்களத்தான், Starters னு சொல்லி வாங்கி அடிக்கிறோம்..

ஓட்டல்ல ரொம்ப பிரபலமான, நாம விரும்பி சாப்புடுற ஒரு உணவு "பன்னீர் பட்டர் மசாலா".. ஒரு bowl சராசரியா 120 ரூவாய்க்கு விக்கிற இந்த உணவைத் தயாரிக்க முக்கியப் பொருளே முந்திரி விழுது தான்... 100 கிராம் முந்திரி பருப்பே 94 ரூவா இருக்கும் போது 120 ரூவாய்க்கு எப்படி பன்னீர் பட்டர் மசாலா செய்ய முடியும்.. அதான் சூட்சமமே...

முழு முந்திரிய பாத்தீங்கன்னா அதோட முனைல மூக்கு மாதிரி ஒண்ணு இருக்கும்.. விற்பனைக்காக தரம் பிரிக்கும் போது இந்த மூக்குப் பகுதிய நீக்கிட்டு தான் விப்பாங்க.. அத எல்லாத்தையும் எடுத்து கிலோ 35-40 ரூவாய்க்கு ஓட்டலுக்கு சப்ளை பண்ணிருவாங்க..  அதத்தான் அரைச்சு ஊத்தி மசாலாவாக்கி நமக்கு விக்கிறாங்ய.. இந்த மூக்கு ஐட்டம் நம்ம வீட்டுல சுத்தம் பண்ணி கோழிக்கு போடுற வஸ்துன்னு கிராமத்து ஆளுகள கேட்டா சொல்லி சிரிப்பாங்ய... இந்தக் கருமத்த நான் கண்ணால நேர்லயே பாத்து தொலைச்சேன்..

அடுத்தது பஞ்சாபி சோலே மசாலா... கருப்பு கொண்டைக் கடலைல செய்யிற ஒரு வட இந்திய உணவு.. இதுல விருவிருப்புக்காக பஞ்சாபிகள் சேக்குற ஒரு ரகசிய பொருள் டீ டிக்காஷன்.. ஓட்டல்ல இதுக்காக உக்காந்து டீயெல்லாம் போட்டுட்டு இருக்க மாட்டங்க.. காலைலேந்து டீ போட்டு வடிகட்டுன சக்கைய மொத்தமா கொட்டி அவிச்சு வடிகட்டி ஊத்திருவாங்க.. நம்ம வீடுகள்ல ரோஜா செடிக்கு போடுவோமே அதே டீத்துள் சக்கை தான்.

புஸ்ஸுனு வருதுன்னு ஓட்டல்ல இந்த மசாலாக்களோட சேத்து நாம அடிக்கிற இன்னொரு ஐட்டம் புல்கா ரொட்டி... அந்த நண்பர் சொன்னத அப்படியே சொல்ரேன்.. "கம்மி வெலைக்கு ஒரு சுமார் டால்டா கெடைக்குங்க.. அதுக்கு அகர்வால் டால்டானு நாங்க ஒரு அடையாளப் பேரு வச்சுக்குவோம்...  அதையும் சோடா உப்பையும் மொத்த மாவுல கால் வாசி கலக்குனோம்னா புசுபுசுன்னு புல்கா வரும்..." அப்புறம் என்ன... அத வாங்கித் தின்னுபுட்டு வயித்த ஜிலேபிப்பை மாதிரி புடிச்சுகிட்டு வடக்கையும் தெக்கையும் அலைய வேண்டியது தான்...

பாஸ்ட் புட் கடையில இருந்து படு பார்ஷான ஓட்டல் வரைக்கும் பிரபலமான ஒரு உணவு "Fried Rice"... சோத்த எண்ணெயில வறுத்து விக்கிறது.. அவ்வளவு தான்.. இதுல பல அநியாயம் நடக்குது.. மொதல்ல இதுக்கு சாதத்த எப்ப வடிக்கிறாங்கனு பாக்கணும்..

மாலை 7 மணிக்கு  Fried Rice செய்யணும்னா காலைலயே சாதம் ரெடி ஆகிடும்.. அதுவும் வர்ரவங்ய நெரைய தின்னுடக் கூடாதுனு முக்காப் பதத்துல எறக்கிடுவாங்க... காலைல வச்ச சாதம் போரடிக்குதுன்னு அத நாய்க்கு போட்டுட்டு ஓட்டல்ல போயி அதையே காசக் குடுத்து வாங்கித் திங்கிறோம் நாம...

இதுல சேக்கப் படுற‌ முக்கியமான ஒரு பொருள் எம்.எஸ்.ஜி.. Mono Sodium Glutamate... அதாவது. "உமாமி" என்கிற  ஏழாவது சுவைக்காக சீனாவுல பயன்படுத்துற ஒரு வகையான உப்பு.. இருந்தாலும் உப்ப உப்புன்னு சொல்லாம கிரிஸ்டல்னு சொல்ற மாதிரி, உமாமிக்கு நம்மாளு வச்ச பேரு தான் அஜினோமோட்டோ... கொஞ்ச நாள் முந்தி வரைக்கும் சாம்பார், ரசத்துல எல்லாம் கலக்குங்கனு விளம்பரம் போட்டவங்ய, இது கேன்சர் செல்களை உடம்புல தூண்டுதுன்னு உண்மை லீக்கானதும் கப்சிப்புனு ஆயிட்டானுங்க.. அந்த சீன சைத்தானத் தான் முக்கிய பொருளா தூவி Fried Rice தயாரிக்கிறாங்க.. நாமளும் இந்த உண்மையத் தெரியாம காசக் குடுத்து கேன்சர இன்ஸ்டால்மென்டுல  வாங்கிக்கிறோம்.. இதக் கலந்துபுட்டாங்யன்னு தான் மேகி மேட்டர மேய் மேய்னு உலகமே மேயுது...

இதெல்லாம் பெரிய ஓட்டலுக்கு போற ஆளுங்களுக்கு தான அப்டினு கேக்குறவங்க ரெடி ஆயிக்கோங்க அடுத்த மேட்டர் உங்களுக்கு தான்.. ரோட்டோர புரோட்டா கடைகள்ள கொவளையில குருமாவ மொண்டு ஊத்துவாங்களே பாத்துருக்கீங்களா.. "வெங்காயம், தக்காளி, இஞ்சிப்பூண்டு விழுது, காரப்பொடி, தனியா, மஞ்சள்தூள்" இந்த ஆறு முக்கியப் பொருள்களோடகறியோ அல்லது காய்கறியோ சேத்து தண்ணிய ஊத்தி கொதிக்க வைப்பாங்க.. அத கெட்டியாக்குறதுக்கு நம்ம வீடுகள்ல,,"தேங்காயும் சோம்பும் (அ) முந்திரி" அரைச்சு ஊத்துவோம்.. ஒரு தேங்கா 18 ரூவாய்க்கு விக்கும் போது திக்கான குருமா ஒரு அண்டா நிரைய செய்ய எவ்வளவு தேங்கா வேணும் யோசிங்க... பிறகு எப்புடி மொண்டு மொண்டு ஊத்துறது??..

குடும்பப் பொண்ணுக்கு பொம்மிஸ் நைட்டி மாதிரி குருமாவுக்கு குதிரைச் சாணிப் பொடி... (நீங்க படிச்சது கரெக்டு தான்..) காயவச்ச குதிரச் சாணியப் பொடியாக்கி அதையோ (அ) மரத்தூளையோ கலந்து மேற்கொண்டு எம்.எஸ்.ஜி கருமத்தையும் அப்டியே மழைச்சாரல் மாதிரி பரபரபரன்னு அப்டியே பெய்ய விட்டு.. கிண்டு கிண்டுனு கிண்டுனா.. குருமா ரெடி... நம்மாளுகளும் குருமாங்கிற பேர்ல குதிரைச் சாணியத் திங்கிறோம்னு தெரியாம... "பொரட்டாவ பிச்சு அதுல குருமாவ ஊத்திப் பொரட்டி அடிப்போம்ல...."னு மார் தட்டிக்குவாங்ய...

இப்படியெல்லாம் சொல்லி எங்களை வாந்தி எடுக்கவைக்க முடியாது.. நாங்களெல்லாம் சாக்கடைக்குள்ளேயே ஒரு மாமாங்கம் கூடுகட்டி வாழ்ந்த வித்தைக் காரர்கள்னு சொல்ற புலிகேசியா நீங்க.. இந்தா புடிச்சுக்கங்க... திருப்பதி தேவஸ்தானத்தில் பெரிய வருமானத்தில் ஒன்று நாம காணிக்கையா குடுக்குற முடி.. ஒரு வருஷத்துக்கு 132 கோடி ரூவாய்க்கு சீனாவுக்கும், சுவிட்சர்லாந்துக்கும் ஏலம் விடப்படுது... "மனுச மசுரக் கொண்டுபோய் என்னய்யா செய்வாங்ய?"னு கேக்குறீங்க தானே.. வெள்ளாவில வெளுத்து, ஆல்கஹால்ல அலசி அதுல இருந்து "கெரட்டின்"ங்கிற புரதத்த பிரிச்சு எடுப்பாங்க.. அது தான் சாக்லேட் தயாரிப்புல உமாமி சுவைக்காக சேர்க்கப் படுற முக்கியப் பொருளே.. சாப்பாட்டுல ஒரு முடி விழுந்தாலே சண்டைபோடுற நாம சாக்லேட்டே அதுலேந்து தான் தயாரிக்கிறான்னு தெரியாம சப்புக்கொட்டி நக்குறோம்..

"இவங்ய இப்புடித் தான்யா.. டாக்டரே சொல்லிட்டாரு.. ஓட்டலுக்கு போனா இட்லி மட்டும் சாப்புடுன்னு" அப்டிங்கிற ஆட்களுக்கு... இட்லி எப்டி தயாராகுதுன்னு தெரிஞ்சுக்கோங்க... மார்க்கெட்டுல கெடைக்குற மட்டமான மலிவு விலை அரிசி, முந்தின நாள் வச்சு மீந்து போன சோறு, மிச்சமுள்ள இட்லி, ஊறவச்ச ஜவ்வரிசி இதெல்லாத்தையும் ஒண்ணாப் போட்டு அரைச்சு, அதுல ஆப்ப சோடாவ போட்டு கிண்டி வச்சுருவாங்க.. அத ஊத்துறது இன்னும் ஹைலைட்டு..  தட்டுல தண்ணியத் தெளிச்சு, கைய உள்ளவுட்டு வழிச்சு, ஒவ்வொரு குழியிலயும் சொத் சொத்துனு ஒவ்வொரு அடி.. என்ன ஒண்ணு.. நடுநடுவுல அரிச்சாக்க பட்டாபட்டி மேல லைட்டா ஒரு சொறி சொறிஞ்சுக்குவாப்ல அவ்வளவு தான்..



இதெல்லாத்தையும் வாங்கி அடிச்சிட்டு கல்லீரல் கருங்கல்லாப் போயி, மண்ணீரல் மண்ணோட மண்ணாப் போயி, நுரையீரல் நொரதள்ளிப்போயி, மொத்ததுல பயபுள்ளைக்கு பல்ஸே பைப்பாசுல போற அளவுக்கு ஆயிடுது..

சரி குடும்பத்தோட சாப்புடணும்னா என்னத்த தான் திங்கிறதுன்னு கேக்குற ஆட்களுக்கு ஒரு ஓசி டிப்ஸ்.. செலவில்லாத ஆனால் ஆரோக்கியமான ஒரு வழி.. உங்கள் பிள்ளைகளில் எத்தனை பேருக்கு இது பரிச்சயம்...????

வீட்டில் சமைத்த குழைந்த சாதத்தை அம்மாவின் சுத்தமான கையினால் பிசைந்து உருட்டிக் கொடுக்க‌, கதைபேசியபடி குடும்பத்தோடு உக்கார்ந்து சாப்பிட்ட நிலாச்சோறு....  Try பண்ணித்தான் பாருங்களேன்....

Tuesday, March 3, 2015

வித்தியாசமான இசை வழங்கும்...!!!

ஒரு ரெண்டு வாரத்துக்கு முந்தி சூப்பர் சிங்கர் ஜூனியர்ல ஒரு பொண்ணு "புத்தம் புது பாட்டெடுத்தா"னு ஒரு பாட்ட உணர்ச்சிகரமா பாட, செட்டுல இருந்த மொத்தப் பேரும் அழுது அமர்க்களமாகிடுச்சு.. 

அந்தப் பொண்ணோட அப்பா பேசும் போது "வித்தியாசமா இருக்கட்டுமேன்னு வித்யாசாகர் பாட்டு எடுத்தோம்" அப்டின்னு சொன்னாரு.. நம்ம ஜேம்ஸ் வசந்தன் சாரே "நான் எல்லாம் ரொம்ப "தில்"லான ஆளு.. நானே வித்யாசாகர் பாட்டக் கேட்டு அழுதுட்டேன்" அப்டின்னாப்ல.. 

சரி.. வித்தியாசம்.. வித்யாசாகர்.. இதக் கேட்ட உடனே mind ஒரு 15-20 years flash back ல போயிருச்சு.. "இலங்கை வானொலி கொழும்பு சர்வதேச வர்த்தக ஒலிபரப்பு.. அடுத்து ஒலிக்கவிருக்கும் பாடல்... வித்தியாசமான இசை வழங்கும் வித்தியாசாகர் இசையில்.." அப்டின்னு ஒரு அறிவிப்பு.. பாட்டக் கேட்டு "அட"ன்னு அசந்து போயிட்டேன்.. 

அப்போ விஜய் பாட்டுன்னாவே "சுக்கா ரொட்டி, முட்ட பரோட்டா, கோத்தகிரி கோழிக்கறி, ஒயிட்டு லக்கான் " இப்படி ஒரே முனியாண்டி விலாஸ் ஐட்டமாவே இருக்கும்.. அப்டி இருக்கும் போது, ஹரிஹரன் குரல்ல "ஒரு தேதி பார்த்தா தென்றல் வீசும்.."னு மென்மையான ஒரு பாட்டக் கேட்டு, "சரி தான், "உங்கள் அன்பு அறிவிப்பாளர்" உண்மையா தான் சொல்லிருக்காப்ல.. வித்யாசமா இருக்கே"னு நெனச்சுகிட்டேன்.. Flash back over... வித்தியாசமா வித்யாசகர் பாட்டுன்னு சொன்னதும் எனக்கு இதான் நெனப்பு வந்துச்சு...

இந்த வித்யாசாகர் அப்படி என்னத்த வித்தியாசமா பண்ணிட்டாருன்னு கேக்குற ஆளுங்களுக்கு ஒரு சின்ன Lead..  "Rich Orchestration" உட்பட பல விஷயத்துல இவரு இளையராஜாவோட Successor.. (கவனிக்க.. follower இல்ல..successor). ரெண்டு பேருமே தன்ராஜ் மாஸ்டரோட சிஷ்யர்கள்.. ராஜா கிடார் படிச்ச அதே Trinity college of music ல வித்யாசாகர் பியானோ ஸ்டூடன்ட்.. இசையமைப்பாளர் ஆகுறதுக்கு முந்தி ரெண்டு பேருமே  MSV கிட்ட் Combo Organ வாசிச்சவங்க.. ரெண்டு பேருமே மலையாளத்துல தட்சிணாமூர்த்தி சுவாமிகள்கிட்ட Instrument players.. சத்யன் அந்திக்காடு இயக்கும் படங்களில் இளையராஜாவின் இடத்தை இப்பொ புடிச்சிருக்கிறவர் வித்யாசாகர்.. இப்படி சொல்லிட்டே போகலாம்..



தெலுங்குல ஒரு 20-25 படத்துக்கு மேல ராஜமுந்திரில மாமன் பொண்ணு கூட டூயட் பாடுற ஹீரோக்களுக்கெல்லாம் டியூன் போட்டு பெரிய அளவுல ஹிட் ஆகாம இருந்தவரு, தமிழுக்கு வந்தப்போ அவரோட மொதல் அஞ்சாறு படங்கள் அவ்வளவு சுவாரசியம் இல்ல... காரணம் ராஜா/ ரஹ்மான் / தேவா மூணு பேரும் சரி சமமா படங்கள போட்டு தாக்கிட்டு இருந்த நேரத்துல தான் என்டர் ஆனாப்ல.. ஆடிக்காத்துல அம்மியும் பறக்கிற மாதிரி இவங்க அலைல முதல் சில படங்கள் எடுபடாம போயிடுச்சு..

ஆனா 1994ல வந்த படமான அர்ஜூனோட "ஜெய்ஹிந்த்" கைகொடுக்க, அடுத்து வந்த "கர்ணா" வித்யாசாகர பளிச்சுனு தமிழ் ரசிகனுக்கு அடையாளம் காட்டிச்சு.. புல்லாங்குழல் prelude ல "மலரே மௌனமா"னு எஸ்.பி.பி உருகுனத கேட்டு.. பாட்டு நல்லாருக்கே.. யாருப்பா இந்த பையன்னு திரும்பி பாக்க ஆரம்பிச்சாங்க.. அதுக்கு பிறகு அர்ஜுனோட ஆஸ்தான இசையமைப்பாளரே வித்யாசாகர் தான்.. 

சும்மா சொல்லக்கூடாது "ஜெய்ஹிந்த்", "கர்ணா", "தாயின் மணிக்கொடி", "செங்கோட்டை", "வேதம்"னு படத்துக்கு படம் "நூறாண்டுக்கு ஒரு முறை", "மலைக்காற்று வந்து", "உச்சி முதல் பாதம்"னு ஒவ்வொரு முறையும் நல்ல நல்ல பாடல்கள கொடுத்துட்டு போவாரு வித்யாசாகர்.. இவரோட ஆரம்ப கால பாடல்கள்ல "பாங்க்ரா" style interlude ஒண்ணு இருக்கும்... "டண்ட டண்ட.. டண்ட.. டண்ட.."னு..அந்த டியூன் இவரோட typical identity....

இந்த முதல் கட்டம் வித்யாசாகருக்கு அவ்வளவு பெரிய success இல்ல.. ஆனாலும் "உடையாத வெண்ணிலா - ப்ரியம்",  "சிந்தாமணி சிந்தாமணி - ஆஹா என்ன பொருத்தம்", "ஒரு தேதி பார்த்தா - கோயம்புத்தூர் மாப்பிள்ளை", "ஆனந்தம் ஆனந்தம் - முறை மாமன்", "வாசகி வாசகி - அரசியல்", " பூத்திருக்கும் மனமே - புதையல்"னு நல்ல நல்ல பாடல்களை அவ்வளவு tough competition லேயும் குடுத்திருப்பாப்ல..

திருப்பதி போயிட்டு வந்தா திருப்பம் னு சொல்லுவாங்களே.. அந்த மாதிரி இவருக்கு திருவனந்தபுரம் போயிட்டு வந்த பிறகு தான் மிகப் பெரிய திருப்பமே.. தமிழ் சினிமா மாதிரி மலையாளத்திலும் இவர் என்ட்ரி குடுத்த நேரம், ரொம்பவே tough time..  

"ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா..",  "பரதம்..", "ஆராம் தம்புரான்..", " நந்தனம்"னு வரிசையா National Award, State Award ன்னு கலக்கிட்டு இருந்த ரவீந்திரன் மாஸ்டர்.. ஔசேப்பச்சன், ஷரத், எஸ்.பி.வெங்கடேஷ், எம்.ஜெயசந்திரன், பாம்பே ரவின்னு ஒரு பெரிய இசையமைப்பாளர் பட்டாளமே அங்க இருந்திச்சு.. அது போக நம்மூர் இளையராஜாவும் தன் பங்குக்கு சத்யன் அந்திக்காடு படங்களுக்கு இசையமைச்சிட்டு இருந்தாரு..

ஆனா அடிப்படையிலேயே மெலடி பிரியர்களான மலையாளிகளுக்கு வித்யாசாகரோட தனித்துவமான கம்போசிங்கும் ,கிளாசிகல் டச்சும் பிடிச்சுப் போக மலையாளத்தில் இவர் இசையமைத்த முதல் படமே ("அழகிய ராவணன்") கேரள அரசின் விருதை வாங்கிக் கொடுத்துச்சு... அப்புறம் ஆரம்பிச்சது சுக்கிர திசை.. "பிரணய வர்ணங்கள், "வர்ணப் பகிட்டு", "தோஸ்த்", "கிருஷ்ணகுடியில் ஒரு பிரணய காலம்", “மீச மாதவன்”, "சம்மர் இன் பெத்லஹேம்", “கிளிச்சுண்டன் மாம்பழம்" னு வரிசையா ஹிட் மழை தான்...

அந்த நேரத்துல தான் வித்யாசாகரோட ரெண்டாவது இன்னிங்க்ஸ் தமிழ் சினிமாவுல ஆரம்பமாச்சு.. அதுவும் ஒண்ணொண்ணும் சொல்லி சொல்லி அடிச்ச ஹிட்.. "தில்", "தூள்", "கில்லி", "ரன்", "மஜா", தவசி", "அள்ளித் தந்த வானம்", "அன்பே சிவம்", "சந்திரமுகி"ன்னு இவர் இசையமத்த படத்திலெல்லாம் ஆறுக்கு ஆறு பாட்டு ஹிட்..

ஒரு கட்டத்துல "கில்லி", "மதுர", "திருமலை", "குருவி", "ஆதி"ன்னு விஜய் படங்களுக்கும்.. "பூவெல்லாம் உன் வாசம்", "ஜி", "வில்லன்"னு அஜித் படங்களுக்கும் வித்யாசாகர் தான் இசை..


  • "திருமண மலர்கள் தருவாயா", "காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்" - பூவெல்லாம் உன் வாசம்
  • நீ காற்று நான் மரம் - நிலாவே வா
  • உன் சமையலறையில் - தில்
  • காதல் வந்தால் சொல்லியனுப்பு - இயற்கை
  • கனா கண்டேனடி,  "ஆலங்குயில் கூவும் ரயில்" - பார்த்திபன் கனவு
  • சுடும் நிலவு - தம்பி
  • ஆசை ஆசை இப்பொழுது - தூள்
  • சொல்லித் தரவா - மஜா
  • அழகூரில் பூத்தவளே - திருமலை
  • அன்பே அன்பே - உயிரோடு உயிராக‌
  • கொஞ்ச நேரம் - சந்திரமுகி
  • பூ வாசம் புறப்படும்", "மௌனமே பார்வயாய் - அன்பே சிவம்
  • பனிக்காற்றே - ரன்
  • இது போக, கல்யாண வீடியோ கேசட்டுக்காகவே நேர்ந்து விட்ட "தவமின்றி கிடைத்த வரமே - அன்பு"

இப்படி வரிசையா ஹரிஹரன், மது பாலகிருஷ்ணன வச்சுகிட்டு லைட்டான ஒரு மலையாள சாயல்ல மெலடில பிச்சு ஒதறியிருப்பாரு...

மெலடில மட்டும் இல்ல‌

"கொக்கரக் கொக்கரக்கோ", "வாடி வாடி நாட்டுக் கட்ட", "அப்படி போடு போடு", "இந்தாடி கப்பக் கிழங்கே", "ஐ ஆர் எட்டு நாத்துக் கட்டு" இப்படி கமர்சியல் fast numbers லேயும் கலக்கி எடுத்து, தமிழ் ரசிகனோட சகல மியூசிக்கல் தேவைகளுக்கும் தன்னோட படங்கள்ல musical treat கொடுத்துருப்பாரு..

அதே நேரம் கே.வி.மகாதேவன் இசையில "சங்கராபரணம்", இளையராஜா இசையில "சலங்கை ஒலி" இப்படி தேசிய விருது பெற்ற இசைப் பொக்கிஷங்களை இயக்கிய கே.விஸ்வநாத், தன்னோடஅடுத்த musical subject "ஸ்வராபிஷேகம்" படத்துக்கு வித்யாசகரை book பண்ணுனாரு.. அடிப்படையிலேயே தனக்கிருந்த strong classical background ல ஒவ்வொரு பாட்டையும் அச்சு பிசகாம கம்போஸ் பண்ணி, இந்த வரிசையில் மூன்றாவது ஆளா தேசிய விருதையும் தட்டிகிட்டு வந்தாரு வித்யாசகர்..

ஏய்.. இரு.. இரு.. இரு...    ஆமா... வித்யாசாகர் என்னத்த வித்யாசமா பண்ணுனாரு????அத சொல்றேன்னு சொல்லிட்டு ஏதேதோ கத உட்டுகிட்டு இருக்கியே அப்டின்னு தான கேக்குறீங்க....??? சொல்றேன்... சொல்றேன்...

v  வித்யாசகரோட பெரிய வித்தியாசம் அவருடைய பாடல்கள இருக்கிற Unpredictable Progression... சரியா சொல்லணும்னா ஒரு பாட்டோட பல்லவியிலோ அல்லது சரணத்துலயோ, ஒரு அடிய கேட்கும்போது அடுத்து வரி இந்தப் பாடலோட டியூன் அல்லது அதோட போக்கு இப்படித் தான் இருக்கும்னு கணிக்கவே முடியாது.. அத்தனை வேரியேஷன் இருக்கும்..  Late 80's and Early 90's ல வந்த பெரும்பாலான இளையராஜா/தேவா பாடல்கள்ல இத ரொம்ப சுலபமா கணிக்க முடியும்... இது தான் வித்யாசாகர், ரஹ்மான் மாதிரியான இசையமைப்பாளர்களை பளிச்சுனு அடையாளம் காட்டிய முக்கிய காரணி.. (ரஹ்மானோட பாடல்கள்ல  Progression மட்டுமல்ல  Rhythm Pattern கூட ரொம்பவே  Unpredictable)

v  நல்லா மூணு மூணரை கட்டை சுதில அழகா பாடிகிட்டு இருந்த மனோவ, உச்ச ஸ்தாயில "ஏய்ய்ஷப்ப்பா ஏஷப்பா.."னு மொத மொதல்ல பாடவச்சவரு வித்யாசாகர் தான்.. அதுக்கு பிறகு இந்த ஸ்டைல் பாப்புலர் ஆகி "சிற்பி போன்ற இசையமைப்பாளர்கள் இதஃபாலோ பண்ண ஆரம்பிச்சாங்க..

v  பக்காவான நாட்டுப்புற இசைக் கலைஞரான புஷ்பவனம் குப்புசாமிய முதன் முதலா "தொட்டு தொட்டு பேசும் சுல்தான்னாங்ங்ங்..."னு பாப் ஸ்டைல்ல பாட வச்சது இவரு தான்.. அதுல ரொம்பவே இம்பிரெஸ் ஆகி "அடியாத்தி டான்ஸ் டான்ஸ்"னு ஒரு பாப் ஆல்பமே போட்டாரு புஷ்பவனம்.

v  அதே மாதிரி, சுத்தமான கர்நாடக சங்கீத வித்வான் சீர்காழி சிவ சிதம்பரத்த "முத்து முத்தா பேஞ்ச மழ தன்னே நன்னானே"னு செம்மையான குத்துப் பாட்டு பாட வச்சதும் வித்யாசாகர் தான்

v  உச்ச ஸ்தாயில பாடுற கைலஷ் கெர், ராஹத் பதே அலி கான் போன்ற வட இந்திய பாடகர்கள் பாணில‌ தமிழ்ல மாணிக்க விநாயகத்த "கண்ணுக்குள்ள கெளுத்தி"னு உச்ச ஸ்தாயில லவ் சாங் பாட வச்சது இவரே தான்.

v  Electric Guitar வச்சு குத்துப் பாட்டு போடுற ஸ்டைல பாப்புலர் ஆக்குனதும் வித்யாசாகர் தான்.. "இந்தாடி கப்பக்கிழங்கே"ல ஆரம்பிச்சது.. லேட்டஸ்டா "சிறுத்தை"ல "ராக்கம்மா ராக்கு" வரைக்கும் இன்னும் continue ஆகுது..

v  அதேமாதிரி proper carnatic-jazz fusion style songs பாப்புலர் ஆக்கி விட்டதும் வித்யாசாகர் தான்.. உதாரணத்துக்கு "புதையல்" படத்துல வர்ர "பூத்திருக்கும் மனமே மனமே", "அரசியல்" படத்துல வர்ர "வாசகி வாசகி"..

v  டெக்னிகலா சொல்லணும்னா, வித்யாசாகர் மாதிரி எக்ஸ்டென்ஸிவா (அதீதமா) flute பயன்படுத்துன இசையமைப்பாளர் யாருமில்ல.. "மலரே மௌனமா மாதிரி மெலடியா இருந்தாலும் சரி,  கொடுவா மீச அருவா பார்வ மாதிரி fast peppy number பாட்டா இருந்தாலும்,  கொக்கர கொக்கரக்கோ மாதிரி குத்துப்பாட்டா இருந்தாலும், அவ்வளவு ஏன் "சரக்கு சரக்கு தட்டு முட்டு சரக்கு"னு சில்க் ஸ்மிதா ஆடுற பக்கா ஐட்டம் நம்பரா இருந்தாலும் வித்யாசாகர் பாட்டுன்னா புல்லாங்குழலுக்கு தனி முக்கியத்துவம் உண்டு... அதுலயும் Wood Wind, Western Metal Flute, Tambourine, Hindustani Bansuri னு ஏகப்பட்ட வெரைட்டி... சும்மா இல்ல..  Flute ல‌ vibrato, Flute ல‌ counter, Flute ல‌ Slare, Flute ல‌ column answer னு கலக்கி எடுப்பாப்ல...

v  அவ்வளவு ஏன், நாசிகபூஷணி, வாகதீஸ்வரி மாதிரி யாரும் சினிமாவுல அதிகம் பயன்படுத்தாத ராகங்கள்ல பாடல் கமபோஸ் பண்றது.. விஜய் ஏசுதாஸ் உட்பட கிட்டத்தட்ட 21 புதிய பாடகர்களை அறிமுகப்படுத்தியது.. இப்படி வித்யாசாகர் பண்ணின‌ வித்தியாசங்கள சொல்லிட்டே போகலாம்...




2005-06க்கு பிறகு தமிழ், மலையாளம் ரெண்டுலயுமே சரியான ஹிட் படங்கள் அமையாம ஒரு சின்ன பின்னடைவை சந்திச்சவரு,  போன வருஷம் "புள்ளிப் புலிகளும் ஆட்டின் குட்டியும்", "நீலத்தாமர", "டயமண்ட் நெக்லஸ்", "ஆர்டினரி"னு மலையாளத்துல தன்னோட வெற்றிகரமான அடுத்த இன்னிங்க்ஸ ஆரம்பிச்சுட்டாரு...


  • ஒட்ட தும்பி - புள்ளிப் புலிகளும் ஆட்டின் குட்டியும்
  • அனுராக விலோசனனாய் - நீலத்தாமர
  • தொட்டு தொட்டு - டயமண்ட் நெக்லஸ்
  • சுன் சுன் சுந்தரி பெண்ணே - ஆர்டினரி

இந்த நான்கு பாடல்களே போதும்... "He is back with a bang" அப்டின்னு  prove பண்ண...


All the best Vidyasagar sir... We are looking for your golden hits season in Tamil once again... And by the way wishing you a very happy birthday (Mar 5th)!!!!

டாடீ... எனக்கு ஒரு டவுட்டு... 

வித்யாசாகர் பாட்டக் கேட்டு ஜேம்ஸ் அங்கிள் எதுக்கு அழுவணும்.. அற்றைத் திங்கள் ஒரிடம்'  பாட்ட தாளத்த மட்டும் மாத்தி "சண்டமாருதம்" படத்துல ஜேம்ஸ் அங்கிள் போட்டுருக்கிற பாட்டக் கேட்டு நியாயமா வித்யாசாகர்  தான அழுவணும்?????

சொல்லுங்க டாடி சொல்லுங்க... சொல்லுங்க டாடி சொல்லுங்க...!!!

Friday, January 9, 2015

அதுக்கு நீ சரிப்பட்டு வரமாட்ட!!!!!

இந்த வாரத்தோட உச்சக்கட்ட பரபரப்பே வேர்ல்ட் கப்புக்கு இந்தியாவோட 15 பேர் அணி அறிவிப்புல தான்.....பாபா ராம்தேவ் குஸ்தில பின்னி எடுத்தார் அப்டிங்கிற பரபரப்பு அடங்குரதுக்குள்ள..."பின்னி" எடுத்ததுக்காக போடுற குஸ்தி ஊருக்குள்ள பப்பரப்பா பரபரப்பு ஆயிடுச்சு...

இதோ.. இதோன்னு எதிர்பார்த்த நம்மளோட 15 பேர் world cup டீமையும் அறிவிச்சாச்சு...

'யுவி' எடுக்கல..பின்னிய எடுத்துப்புட்டாங்ய.. ஆய்.. ஊய்னு பயங்கர கேள்விகள்.. அதுக்கு selection கமிட்டியும் கொஞ்சமும் கவலப்படாம 'நீயா நானா' கோபிநாத் மாதிரி..."வேற...வேற...அடுத்து..ஆங் அவருகிட்ட குடுங்க"னு கூலா பதில் சொல்லி சொல்லிப் பார்த்து.. கடைசில அவர மாதிரியே டேப்பரா படிக்கட்டுல உக்கார்ர அளவுக்கு போயிருச்சு...

தோனி சேனையும்.. "எடுறா வண்டிய.. அமுத்துடா ஆரன..."னு "ஜெய் சுக்கு, முன்னி, இளஞ்சி" சகிதம் கெளம்பிருச்சு....



Selection யுவராஜ், பின்னி, முரளி விஜய் இதப்பத்தி கேள்விய கேக்குற ஆளுங்களும், "இவன் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டான்" ரேஞ்சுல பிளேயர்ச எடுத்த கமிட்டியும் வசதியா சில பல விஷயங்கள மறந்துட்டாங்க.. (அதாவது உட்டடிச்சுட்டாங்ய...)

1) இன்னைக்கு வரைக்கும் World cup அப்டின்னாலே, கிட்டத்தட்ட ஒரு 25 வருஷமா எல்லாராலும் உடனே நினைக்கப் படுற "டெண்டுல்கர்" அப்டிங்கிற மிகப் பெரிய ஆளுமை இல்லாம இந்திய அணி World cup சந்திக்கப் போகுது... அவரு டீம்ல இருந்ததே நமக்கு ஒரு யானை பலம்... "அவரோட எடத்த நிரப்பபோற ஆளு யாருன்னு கண்டுபுடிச்சிட்டீங்களாய்யா???" அப்டின்னு ஒரு பயலும் வாயே தெறக்கல...

2) ஒவ்வொரு World cup வெற்றிக்கும் அந்தந்த அணியில இருக்குற "ஆல்ரவுண்டர்" (one or more)" தான் முக்கிய காரணமா இருப்பாங்க.. 1983 கபில்தேவ், மதன்லால், அமர்நாத்... 1987 பார்டர், ஓடோனெல்,ஸ்டீவ் வாஹ்....1992 இம்ரான் கான், வாசிம் அக்ரம்... 1996 ரணதுங்கா, குருசிங்கா, டிசில்வா...இப்படி ஒவ்வொரு World cup லேயும்... சமீபத்திய 2011 யுவராஜ் வரைக்கும்..

ஒரே வித்தியாசம் அது Subcontinent பிட்சாக இருந்தா spin bowling ஆல்ரவுண்டரும், Overseas பிட்சா இருந்தா fast bowling ஆல்ரவுண்டரும் இருப்பாங்க...World cup 2015 சிட்னி, மெல்போர்ன் மாதிரி "bouncy pitches" நடக்கப் போகுதுன்னு 4 வருஷத்துக்கு முந்தியே தெரிஞ்சும் ஒட்டுமொத்த இந்தியாவுல ஒரே ஒரு உருப்படியான fast bowling ஆல்ரவுண்டர கூடவா கண்டுபுடிக்க முடியல???? இதப்பத்தி ஒரு பயலும் வாயே தெறக்கல...

கபில்தேவ் & மனோஜ் பிரபாகர் ஜோடிக்கு பிறகு 1996 இருந்தே 19 வருஷமா இந்தியா டீம்ல ஒரு உருப்படியான fast bowling ஆல்ரவுண்டர் கூட கெடையாது..."ஷேன் வாட்சன், கோரி ஆண்டர்சன், கைரன் போல்லார்டு"னு ஒவ்வொரு டீமும் மெரட்டிகிட்டு இருக்கும்போது நம்மால கொறஞ்சபட்சம் ஒரு மனோஜ் பிரபாகர கூட உருவாக்க முடியல..

இத படிச்சிட்டு உங்க புள்ளி விபரம் தப்புன்னு யாராச்சும் பொங்கிட போறாங்க..பிரபாகருக்கு பிறகு "fast bowling ஆல்ரவுண்டர்" அப்டிங்கிற பேர்ல நெரைய பேர் வந்தாங்க... "சஞ்சய் பாங்கர், ரீத்திந்தர் சிங் சோதி, லக்ஷ்மி ரத்தன் சுக்லா, ராபின் சிங், கட்டக் கடைசியா இர்பான் பதான்..." இதுல இர்பான தவிர மத்த எல்லாருமே  அதிபயங்கரமா 90-95 km வேகத்துல பந்துவீசக்கூடிய ஆட்கள்...கடைசியா இர்பான் பதான நம்மாளுக என்ன கொழப்பு கொழப்பி விட்டாங்க...

முந்தாநேத்து ஒரு டிவி இன்டர்வியூல "கிரிஸ் ஸ்ரீகாந்த்" சொல்றாரு "செலக்டர்ஸ் என்ன சார் பண்றது... match is going to happen in Australian pitches and the only fast bowling all rounder on the papers is "Binny"!!!!... (என்ன கொடும சார் இது "On the paper la" 30 பேர் வர்ர வரைக்கும் இந்த world cup "ராயபுரத்துலயோ அல்லது திருவான்மியூர்லயோ பீச் மண்ணுல" நடக்கப் போகுதுன்னா நெனச்சீங்க... ஆனாலும் உங்களுக்கு அநியாயத்துக்கு sense of humor சார்!!!)

3) சரி fast bowling ஆல்ரவுண்டர் தான் சரியில்ல.. Spin bowling ஆல்ரவுண்டர் ஒழுங்கா இருக்காரா அப்டின்னா.. த….த…ப…அது… ஜடேஜா எப்படியும் டாக்டர் சர்டிபிகேட் வாங்கி குடுத்துடுவாரு...( ஏட்டையா பாடி கண்டிசன் நல்லாருக்கு... அவரு கூடிய சீக்கிரமே ஏட்டையா பதவிய சீரும் செறப்பும செம்மையா ஆத்துவாருன்னு சொல்லிட்டாரு!!!!!)

4) 2011 world cup சச்சின், சேவாக், கம்பீர்னு 3 "In-Form" players இருந்த போதே, home groundலயே போட்டி நடந்தப்பவே 25-30 ஓவர்ல "Quarter Final 160/4.... Semi-Final 140/4.... பைனல்ல 120/3 (பிறகு 170/4)னு விக்கெட் போயி.... அதுக்கு பிறகும் 270+ ரன் எடுத்து இந்தியா ஜெயிக்க ஒரே காரணம் "தோனி, யுவராஜ், யூசுப் பதான், ரெய்னா, ஹர்பஜன், ஜாகீர் கான்"னு 6,7,8,9வது இடங்கள்ல மிக வலுவான lower order இருந்தது தான்...

In form top order  இருந்து home groundலயே போட்டி நடந்தப்பவே இந்த நெலமைனா, "வர்ர்ர்ரூம்ம்... ஆனா வராது" ஃபார்ம்ல இருக்குற ஷிகர் தவானையும்... ரெண்டு கேட்ச் மட்டும் விட்டுடுங்கடா.. அதுக்கப்புறம் double century அடிச்சு காட்டுறேன் அப்டிங்கிற ரோஹித் ஷர்மாவையும் வச்சுகிட்டு... அதுவும் ஆஸ்திரேலிய பிட்ச்சுல.... (இப்பவே கண்ணக் கட்டுதே....)..  இதப் பத்தி எவனாச்சும் கேக்குறானா???

சரி யாருங்க உங்க lower order பேட்ஸ்மேன் காட்டுங்க பாப்போம்... "அதே தோனி 6வது எடத்துல... 7,8,9 ???????? ஆறு மேட்ச் பின்னி, 10 மேட்ச் அக்ஸ்ர், அது போக பந்த throw பண்ணவே இப்பத்தான் பயிற்சி எடுக்குற ஜடேஜா.. அப்புறம் ரவி அஸ்வின் (யாராவது அவர Spin bowling ஆல்ரவுண்டர்னு சொல்லிவச்சு மார்லன் சாமுவேல்ஸ், ஸ்டீவ் ஸ்மித்துக்கெல்லாம் பேதி ஆயிடப் போகுது பாத்துக்கோங்க‌...)



5) பேட்டிங்க விட்டுத்தள்ளு... Fast bowling department எப்படி இருக்கு?? Mohammed Shami is the leading wicket taker in team (!!! சூப்பர்ல!!!) இருங்க.. அவசரப்படாதீங்க.. ஆனா அவரு மேட்ச்சுக்கு 60 ரன் விட்டுகுடுத்துருவாரு (அய்யய்யோ!!)... Bhuvaneswar Kumar is great in swinging the ball.. (இது போதுமே).. பொறுங்க சார்... ஆனா அவருக்கு ஸ்பீட் அவ்வளவா வராது.. வெறும் swing தான் (தொலையிது... போன சீசன்ல முனாப் படேல் இதே தான் செஞ்சாப்புடி...)...உமேஷ் யாதவ் நெனச்சமாதிரி ஸ்பீட டெலிவரி பண்ணுவாரு (இவன் தான்யா fast bowler)...அட உங்களுக்கு பொறுமையே கெடையாதுங்க...நெனச்ச மாதிரிஃபாஸ்ட் போடுவாருன்னு தான் சொன்னோம்.. அத line and length போடுவாருன்னு சொன்னோமா??? (அடக் கருமமே.. அதுக்கு நீ போடாமலே இருக்கலாமே).. கட்டக் கடைசியா நம்ம இஷாந்த் ஷர்மா... அவருக்கு முட்டில கொஞ்சம் பிரச்சனை.. எப்புடியாச்சும்.. முயற்சி பண்ணி... (போங்கடா நீங்களும் உங்க....)

6) 2011 ஒரு Specialist  Leg Spinner (பியுஷ் சாவ்லா), ஒரு specialist off spinner (ஹர்பஜன்), ஒரு left arm spinner (யுவராஜ்) இதத் தவிர ஒரு additional spinner (அஷ்வின்) இப்படி variety இருந்தது.. இன்னிக்கு specialist ஸ்பின்னரே ஆஸ்திரேலியா டீம் கொத்து புரோட்டா போடுற அஷ்வின் மட்டும் தான்.. மத்தது எல்லாம் ??? (அத ஏன்யா கேக்குற??...).. வேணும்னா இந்தியாலேந்து ஒரு நரிய அனுப்பி வைக்கலாம்... நரி மொகத்துல முழிச்சிட்டு போனா அஷ்வின் விக்கெட்ட அள்ளிடுவாப்ல.. (.. ...நரி ஊள உட்ருச்சி... வடக்குபட்டி ராமசாமி விக்கெட்ட எடுத்து வைடா!!!!)

7) Modern cricket ஒவ்வொரு டீம்லயும் நிரைய  utility players இருப்பாங்க .. திடீர்னு தேவைக்கு ஏத்த மாதிரி பவுலிங்ல பயன்படுத்திக்க... போன சீசன்ல நம்ம டீம்லயே சச்சின், சேவாக், யூசுப், ரெய்னான்னு ஒரு பட்டாளமே இருந்தது... இந்த சீசன்ல ரெய்னாவ தவிர அந்த எடம் காலி (கோஹ்லி சில சமயம் பந்து வீசுவாப்புல...)

8) 2011 World cup தோனி அடிக்கடி சொல்ற விஷயம் "India has lot of slow fielders.." சச்சின், சேவாக், ஜாகிர், முனாப் இவங்கள்ளாம் பந்த புடிக்க டைவ் அடிக்க மாட்டேங்கிறாங்க.. மாமன் பொண்ணு மேல மஞ்ச தண்ணி ஊத்தப் போற மாதிரி பவுண்டரி வரைக்கும் பின்னாடியே வெரட்டிகிட்டு ஓடுறாங்க" அப்டின்னு... இன்னிக்கு டீம்ல உருப்படியா பண்ற ஒரே விஷயம் பொத்து பொத்துன்னு விழறது தான் (பந்த புடிப்போமான்னு கேக்காதீங்க...)... உங்களுக்கெல்லாம் கூறே இல்ல... அதுக்கு எதுக்கு இவ்ளோ செலவு பண்ணி ஆஸ்திரேலியா வரைக்கும் போகணும்... பேசாம எங்க ஊரு பாலிடிக்ஸ்ல சேந்துருங்க.. நமக்கு இருக்குற விழும் தெறமைக்கு சீக்கிறம் பெரிய லெவல்ல கல்லா கட்டிறலாம்...

9) சரி உங்க ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன் பத்தி சொல்லுங்க பாப்போம்.. அவருன்னா தலைவருக்கு உயிருங்க... அவரு ஆடுராரோ இல்லையோ அதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல.. அவரு மட்டும் இல்லன்னா தலைக்கு யாரு பிரியாணி வாங்கியாந்து குடுப்பாங்க.??? (அடப்பாவிகளா... மாநாட்டுக்கு ஆள் சேக்க தான் எங்கூர்ல பிரியாணி பொட்டலம் வாங்கி குடுத்து கரெக்ட் பண்ணுவோம்.. இங்கயுமா ???)

இத எல்லாத்தையும் வச்சு பாக்கும்போது, 1992 World cup க்கு போன டீம் தான் எனக்கு நியாபகம் வருது.. சில ஒத்துமைகள பாப்போம்...


  • 1987 ‌ home ground ஆடி semi final வரைக்கும் போயிட்டு அப்புறம் 1992 World cup வெளையாட இதே ஆஸ்திரேலியா / நியூஸிலாந்து போனோம்...
  • அப்போதும், அதுக்கு முந்தின World cup வரைக்கும் "சுனில் கவாஸ்கர்" காலம் நடந்தது... 1992 அதுக்கு மாற்று ஆள் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது.
  • இன்னிக்கு டீம்ல 15 பேர்ல 11 பேர் புதுசு.. அன்னிக்கு 14 பேர்ல (சச்சின், ஜடேஜா, ஆம்ரே, காம்ப்ளி, மஞ்சுரேக்கர், பேனர்ஜி, ஸ்ரீநாத், வெங்கடபதி ராஜூ அப்டின்னு) ஒரு 8-9 பேர் புதுசு
  • இன்னிக்கு சம்பந்தமே இல்லாம 6 மேட்ச் பின்னிய ஆல்ரவுண்டர்னு சொல்லி அனுப்பி வச்சது மாதிரி, அன்னிக்கு (மொத்தமாகவே 6 மேட்ச் ஆடியிருக்கிற) பேனர்ஜிய ஆல்ரவுண்டர்னு சொல்லி அனுப்பி வச்சது
  • இதே மாதிரி அப்போவும் ஓப்பனிங் படு சொத்தை.. கேரியரோட கடைசில விளையாடின ஸ்ரீகாந்தும்.. மானாவாரியா 100 பால் தின்னுபுட்டு 25 ரன் அடிக்கிற ரவிசாஸ்திரியும்.
  • Form இருக்குற ஓப்பனர் முரளி விஜய் டீம்ல இல்லங்கிற மாதிரி.. முந்தின சீசன்ல "சிக்சர் சித்து"ன்னு பேர் வாங்கின நவ்ஜோத் சித்து டீம்ல இல்லாதது...
  • இன்னைக்கு தோனி மாதிரி, மொத்தப் பொறுப்பையும் சின்னப் பசங்கள வச்சுகிட்டு அசாருதீன் தோள்ல தூக்கி சுமந்தது...
  • சாஸ்திரி, ராஜூன்னு ரெண்டே ரெண்டு Left arm ஸ்பின்னர மட்டும் வச்சுகிட்டு அன்னைக்கும் ஒப்பேத்துனோம்.. இன்னிக்கு அதே ரெண்டு பேர் ஜடேஜா, அக்ஸர் (அஷ்வின் கோவிச்சுக்க போறாப்ல)..

இவங்கள்ளாம் இவ்ளோ கேள்வி கேக்குறாங்யளே நானும் ஒரே ஒரு கேள்வி கேக்குறேன்....



(போதும்.. அடுத்து நீ என்ன கேக்கப் போறன்னு எனக்கு தெரியும்.. கேட்ட.... படுவா அசிங்க அசிங்கமா பேசிப்புடுவேன்... அன்னிக்கு ஜிம்பாப்வே, பாகிஸ்தான் ரெண்டு டீம மட்டும் ஜெயிச்சிட்டு மத்த எல்லார்கிட்டயும் மரண ஒத வாங்குனோமே.. இந்த தடவையும் அதே மாதிரி தான் வாங்குவோமான்னு தான கேக்கப்போற??????)


இல்லண்ணே.... World Cup முடிஞ்சதும் தோனி கேப்டன விட்டு போயிடுவாரு....கேப்டன விட்டு போயிடுவாரு....ன்னு எல்லாரும் சொல்றாங்களே.. அவரு தான் கேப்டன் கட்சிலயே இல்லயே அப்புறம் எப்படி விட்டுட்டு போவாரு????