Tuesday, March 3, 2015

வித்தியாசமான இசை வழங்கும்...!!!

ஒரு ரெண்டு வாரத்துக்கு முந்தி சூப்பர் சிங்கர் ஜூனியர்ல ஒரு பொண்ணு "புத்தம் புது பாட்டெடுத்தா"னு ஒரு பாட்ட உணர்ச்சிகரமா பாட, செட்டுல இருந்த மொத்தப் பேரும் அழுது அமர்க்களமாகிடுச்சு.. 

அந்தப் பொண்ணோட அப்பா பேசும் போது "வித்தியாசமா இருக்கட்டுமேன்னு வித்யாசாகர் பாட்டு எடுத்தோம்" அப்டின்னு சொன்னாரு.. நம்ம ஜேம்ஸ் வசந்தன் சாரே "நான் எல்லாம் ரொம்ப "தில்"லான ஆளு.. நானே வித்யாசாகர் பாட்டக் கேட்டு அழுதுட்டேன்" அப்டின்னாப்ல.. 

சரி.. வித்தியாசம்.. வித்யாசாகர்.. இதக் கேட்ட உடனே mind ஒரு 15-20 years flash back ல போயிருச்சு.. "இலங்கை வானொலி கொழும்பு சர்வதேச வர்த்தக ஒலிபரப்பு.. அடுத்து ஒலிக்கவிருக்கும் பாடல்... வித்தியாசமான இசை வழங்கும் வித்தியாசாகர் இசையில்.." அப்டின்னு ஒரு அறிவிப்பு.. பாட்டக் கேட்டு "அட"ன்னு அசந்து போயிட்டேன்.. 

அப்போ விஜய் பாட்டுன்னாவே "சுக்கா ரொட்டி, முட்ட பரோட்டா, கோத்தகிரி கோழிக்கறி, ஒயிட்டு லக்கான் " இப்படி ஒரே முனியாண்டி விலாஸ் ஐட்டமாவே இருக்கும்.. அப்டி இருக்கும் போது, ஹரிஹரன் குரல்ல "ஒரு தேதி பார்த்தா தென்றல் வீசும்.."னு மென்மையான ஒரு பாட்டக் கேட்டு, "சரி தான், "உங்கள் அன்பு அறிவிப்பாளர்" உண்மையா தான் சொல்லிருக்காப்ல.. வித்யாசமா இருக்கே"னு நெனச்சுகிட்டேன்.. Flash back over... வித்தியாசமா வித்யாசகர் பாட்டுன்னு சொன்னதும் எனக்கு இதான் நெனப்பு வந்துச்சு...

இந்த வித்யாசாகர் அப்படி என்னத்த வித்தியாசமா பண்ணிட்டாருன்னு கேக்குற ஆளுங்களுக்கு ஒரு சின்ன Lead..  "Rich Orchestration" உட்பட பல விஷயத்துல இவரு இளையராஜாவோட Successor.. (கவனிக்க.. follower இல்ல..successor). ரெண்டு பேருமே தன்ராஜ் மாஸ்டரோட சிஷ்யர்கள்.. ராஜா கிடார் படிச்ச அதே Trinity college of music ல வித்யாசாகர் பியானோ ஸ்டூடன்ட்.. இசையமைப்பாளர் ஆகுறதுக்கு முந்தி ரெண்டு பேருமே  MSV கிட்ட் Combo Organ வாசிச்சவங்க.. ரெண்டு பேருமே மலையாளத்துல தட்சிணாமூர்த்தி சுவாமிகள்கிட்ட Instrument players.. சத்யன் அந்திக்காடு இயக்கும் படங்களில் இளையராஜாவின் இடத்தை இப்பொ புடிச்சிருக்கிறவர் வித்யாசாகர்.. இப்படி சொல்லிட்டே போகலாம்..



தெலுங்குல ஒரு 20-25 படத்துக்கு மேல ராஜமுந்திரில மாமன் பொண்ணு கூட டூயட் பாடுற ஹீரோக்களுக்கெல்லாம் டியூன் போட்டு பெரிய அளவுல ஹிட் ஆகாம இருந்தவரு, தமிழுக்கு வந்தப்போ அவரோட மொதல் அஞ்சாறு படங்கள் அவ்வளவு சுவாரசியம் இல்ல... காரணம் ராஜா/ ரஹ்மான் / தேவா மூணு பேரும் சரி சமமா படங்கள போட்டு தாக்கிட்டு இருந்த நேரத்துல தான் என்டர் ஆனாப்ல.. ஆடிக்காத்துல அம்மியும் பறக்கிற மாதிரி இவங்க அலைல முதல் சில படங்கள் எடுபடாம போயிடுச்சு..

ஆனா 1994ல வந்த படமான அர்ஜூனோட "ஜெய்ஹிந்த்" கைகொடுக்க, அடுத்து வந்த "கர்ணா" வித்யாசாகர பளிச்சுனு தமிழ் ரசிகனுக்கு அடையாளம் காட்டிச்சு.. புல்லாங்குழல் prelude ல "மலரே மௌனமா"னு எஸ்.பி.பி உருகுனத கேட்டு.. பாட்டு நல்லாருக்கே.. யாருப்பா இந்த பையன்னு திரும்பி பாக்க ஆரம்பிச்சாங்க.. அதுக்கு பிறகு அர்ஜுனோட ஆஸ்தான இசையமைப்பாளரே வித்யாசாகர் தான்.. 

சும்மா சொல்லக்கூடாது "ஜெய்ஹிந்த்", "கர்ணா", "தாயின் மணிக்கொடி", "செங்கோட்டை", "வேதம்"னு படத்துக்கு படம் "நூறாண்டுக்கு ஒரு முறை", "மலைக்காற்று வந்து", "உச்சி முதல் பாதம்"னு ஒவ்வொரு முறையும் நல்ல நல்ல பாடல்கள கொடுத்துட்டு போவாரு வித்யாசாகர்.. இவரோட ஆரம்ப கால பாடல்கள்ல "பாங்க்ரா" style interlude ஒண்ணு இருக்கும்... "டண்ட டண்ட.. டண்ட.. டண்ட.."னு..அந்த டியூன் இவரோட typical identity....

இந்த முதல் கட்டம் வித்யாசாகருக்கு அவ்வளவு பெரிய success இல்ல.. ஆனாலும் "உடையாத வெண்ணிலா - ப்ரியம்",  "சிந்தாமணி சிந்தாமணி - ஆஹா என்ன பொருத்தம்", "ஒரு தேதி பார்த்தா - கோயம்புத்தூர் மாப்பிள்ளை", "ஆனந்தம் ஆனந்தம் - முறை மாமன்", "வாசகி வாசகி - அரசியல்", " பூத்திருக்கும் மனமே - புதையல்"னு நல்ல நல்ல பாடல்களை அவ்வளவு tough competition லேயும் குடுத்திருப்பாப்ல..

திருப்பதி போயிட்டு வந்தா திருப்பம் னு சொல்லுவாங்களே.. அந்த மாதிரி இவருக்கு திருவனந்தபுரம் போயிட்டு வந்த பிறகு தான் மிகப் பெரிய திருப்பமே.. தமிழ் சினிமா மாதிரி மலையாளத்திலும் இவர் என்ட்ரி குடுத்த நேரம், ரொம்பவே tough time..  

"ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா..",  "பரதம்..", "ஆராம் தம்புரான்..", " நந்தனம்"னு வரிசையா National Award, State Award ன்னு கலக்கிட்டு இருந்த ரவீந்திரன் மாஸ்டர்.. ஔசேப்பச்சன், ஷரத், எஸ்.பி.வெங்கடேஷ், எம்.ஜெயசந்திரன், பாம்பே ரவின்னு ஒரு பெரிய இசையமைப்பாளர் பட்டாளமே அங்க இருந்திச்சு.. அது போக நம்மூர் இளையராஜாவும் தன் பங்குக்கு சத்யன் அந்திக்காடு படங்களுக்கு இசையமைச்சிட்டு இருந்தாரு..

ஆனா அடிப்படையிலேயே மெலடி பிரியர்களான மலையாளிகளுக்கு வித்யாசாகரோட தனித்துவமான கம்போசிங்கும் ,கிளாசிகல் டச்சும் பிடிச்சுப் போக மலையாளத்தில் இவர் இசையமைத்த முதல் படமே ("அழகிய ராவணன்") கேரள அரசின் விருதை வாங்கிக் கொடுத்துச்சு... அப்புறம் ஆரம்பிச்சது சுக்கிர திசை.. "பிரணய வர்ணங்கள், "வர்ணப் பகிட்டு", "தோஸ்த்", "கிருஷ்ணகுடியில் ஒரு பிரணய காலம்", “மீச மாதவன்”, "சம்மர் இன் பெத்லஹேம்", “கிளிச்சுண்டன் மாம்பழம்" னு வரிசையா ஹிட் மழை தான்...

அந்த நேரத்துல தான் வித்யாசாகரோட ரெண்டாவது இன்னிங்க்ஸ் தமிழ் சினிமாவுல ஆரம்பமாச்சு.. அதுவும் ஒண்ணொண்ணும் சொல்லி சொல்லி அடிச்ச ஹிட்.. "தில்", "தூள்", "கில்லி", "ரன்", "மஜா", தவசி", "அள்ளித் தந்த வானம்", "அன்பே சிவம்", "சந்திரமுகி"ன்னு இவர் இசையமத்த படத்திலெல்லாம் ஆறுக்கு ஆறு பாட்டு ஹிட்..

ஒரு கட்டத்துல "கில்லி", "மதுர", "திருமலை", "குருவி", "ஆதி"ன்னு விஜய் படங்களுக்கும்.. "பூவெல்லாம் உன் வாசம்", "ஜி", "வில்லன்"னு அஜித் படங்களுக்கும் வித்யாசாகர் தான் இசை..


  • "திருமண மலர்கள் தருவாயா", "காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்" - பூவெல்லாம் உன் வாசம்
  • நீ காற்று நான் மரம் - நிலாவே வா
  • உன் சமையலறையில் - தில்
  • காதல் வந்தால் சொல்லியனுப்பு - இயற்கை
  • கனா கண்டேனடி,  "ஆலங்குயில் கூவும் ரயில்" - பார்த்திபன் கனவு
  • சுடும் நிலவு - தம்பி
  • ஆசை ஆசை இப்பொழுது - தூள்
  • சொல்லித் தரவா - மஜா
  • அழகூரில் பூத்தவளே - திருமலை
  • அன்பே அன்பே - உயிரோடு உயிராக‌
  • கொஞ்ச நேரம் - சந்திரமுகி
  • பூ வாசம் புறப்படும்", "மௌனமே பார்வயாய் - அன்பே சிவம்
  • பனிக்காற்றே - ரன்
  • இது போக, கல்யாண வீடியோ கேசட்டுக்காகவே நேர்ந்து விட்ட "தவமின்றி கிடைத்த வரமே - அன்பு"

இப்படி வரிசையா ஹரிஹரன், மது பாலகிருஷ்ணன வச்சுகிட்டு லைட்டான ஒரு மலையாள சாயல்ல மெலடில பிச்சு ஒதறியிருப்பாரு...

மெலடில மட்டும் இல்ல‌

"கொக்கரக் கொக்கரக்கோ", "வாடி வாடி நாட்டுக் கட்ட", "அப்படி போடு போடு", "இந்தாடி கப்பக் கிழங்கே", "ஐ ஆர் எட்டு நாத்துக் கட்டு" இப்படி கமர்சியல் fast numbers லேயும் கலக்கி எடுத்து, தமிழ் ரசிகனோட சகல மியூசிக்கல் தேவைகளுக்கும் தன்னோட படங்கள்ல musical treat கொடுத்துருப்பாரு..

அதே நேரம் கே.வி.மகாதேவன் இசையில "சங்கராபரணம்", இளையராஜா இசையில "சலங்கை ஒலி" இப்படி தேசிய விருது பெற்ற இசைப் பொக்கிஷங்களை இயக்கிய கே.விஸ்வநாத், தன்னோடஅடுத்த musical subject "ஸ்வராபிஷேகம்" படத்துக்கு வித்யாசகரை book பண்ணுனாரு.. அடிப்படையிலேயே தனக்கிருந்த strong classical background ல ஒவ்வொரு பாட்டையும் அச்சு பிசகாம கம்போஸ் பண்ணி, இந்த வரிசையில் மூன்றாவது ஆளா தேசிய விருதையும் தட்டிகிட்டு வந்தாரு வித்யாசகர்..

ஏய்.. இரு.. இரு.. இரு...    ஆமா... வித்யாசாகர் என்னத்த வித்யாசமா பண்ணுனாரு????அத சொல்றேன்னு சொல்லிட்டு ஏதேதோ கத உட்டுகிட்டு இருக்கியே அப்டின்னு தான கேக்குறீங்க....??? சொல்றேன்... சொல்றேன்...

v  வித்யாசகரோட பெரிய வித்தியாசம் அவருடைய பாடல்கள இருக்கிற Unpredictable Progression... சரியா சொல்லணும்னா ஒரு பாட்டோட பல்லவியிலோ அல்லது சரணத்துலயோ, ஒரு அடிய கேட்கும்போது அடுத்து வரி இந்தப் பாடலோட டியூன் அல்லது அதோட போக்கு இப்படித் தான் இருக்கும்னு கணிக்கவே முடியாது.. அத்தனை வேரியேஷன் இருக்கும்..  Late 80's and Early 90's ல வந்த பெரும்பாலான இளையராஜா/தேவா பாடல்கள்ல இத ரொம்ப சுலபமா கணிக்க முடியும்... இது தான் வித்யாசாகர், ரஹ்மான் மாதிரியான இசையமைப்பாளர்களை பளிச்சுனு அடையாளம் காட்டிய முக்கிய காரணி.. (ரஹ்மானோட பாடல்கள்ல  Progression மட்டுமல்ல  Rhythm Pattern கூட ரொம்பவே  Unpredictable)

v  நல்லா மூணு மூணரை கட்டை சுதில அழகா பாடிகிட்டு இருந்த மனோவ, உச்ச ஸ்தாயில "ஏய்ய்ஷப்ப்பா ஏஷப்பா.."னு மொத மொதல்ல பாடவச்சவரு வித்யாசாகர் தான்.. அதுக்கு பிறகு இந்த ஸ்டைல் பாப்புலர் ஆகி "சிற்பி போன்ற இசையமைப்பாளர்கள் இதஃபாலோ பண்ண ஆரம்பிச்சாங்க..

v  பக்காவான நாட்டுப்புற இசைக் கலைஞரான புஷ்பவனம் குப்புசாமிய முதன் முதலா "தொட்டு தொட்டு பேசும் சுல்தான்னாங்ங்ங்..."னு பாப் ஸ்டைல்ல பாட வச்சது இவரு தான்.. அதுல ரொம்பவே இம்பிரெஸ் ஆகி "அடியாத்தி டான்ஸ் டான்ஸ்"னு ஒரு பாப் ஆல்பமே போட்டாரு புஷ்பவனம்.

v  அதே மாதிரி, சுத்தமான கர்நாடக சங்கீத வித்வான் சீர்காழி சிவ சிதம்பரத்த "முத்து முத்தா பேஞ்ச மழ தன்னே நன்னானே"னு செம்மையான குத்துப் பாட்டு பாட வச்சதும் வித்யாசாகர் தான்

v  உச்ச ஸ்தாயில பாடுற கைலஷ் கெர், ராஹத் பதே அலி கான் போன்ற வட இந்திய பாடகர்கள் பாணில‌ தமிழ்ல மாணிக்க விநாயகத்த "கண்ணுக்குள்ள கெளுத்தி"னு உச்ச ஸ்தாயில லவ் சாங் பாட வச்சது இவரே தான்.

v  Electric Guitar வச்சு குத்துப் பாட்டு போடுற ஸ்டைல பாப்புலர் ஆக்குனதும் வித்யாசாகர் தான்.. "இந்தாடி கப்பக்கிழங்கே"ல ஆரம்பிச்சது.. லேட்டஸ்டா "சிறுத்தை"ல "ராக்கம்மா ராக்கு" வரைக்கும் இன்னும் continue ஆகுது..

v  அதேமாதிரி proper carnatic-jazz fusion style songs பாப்புலர் ஆக்கி விட்டதும் வித்யாசாகர் தான்.. உதாரணத்துக்கு "புதையல்" படத்துல வர்ர "பூத்திருக்கும் மனமே மனமே", "அரசியல்" படத்துல வர்ர "வாசகி வாசகி"..

v  டெக்னிகலா சொல்லணும்னா, வித்யாசாகர் மாதிரி எக்ஸ்டென்ஸிவா (அதீதமா) flute பயன்படுத்துன இசையமைப்பாளர் யாருமில்ல.. "மலரே மௌனமா மாதிரி மெலடியா இருந்தாலும் சரி,  கொடுவா மீச அருவா பார்வ மாதிரி fast peppy number பாட்டா இருந்தாலும்,  கொக்கர கொக்கரக்கோ மாதிரி குத்துப்பாட்டா இருந்தாலும், அவ்வளவு ஏன் "சரக்கு சரக்கு தட்டு முட்டு சரக்கு"னு சில்க் ஸ்மிதா ஆடுற பக்கா ஐட்டம் நம்பரா இருந்தாலும் வித்யாசாகர் பாட்டுன்னா புல்லாங்குழலுக்கு தனி முக்கியத்துவம் உண்டு... அதுலயும் Wood Wind, Western Metal Flute, Tambourine, Hindustani Bansuri னு ஏகப்பட்ட வெரைட்டி... சும்மா இல்ல..  Flute ல‌ vibrato, Flute ல‌ counter, Flute ல‌ Slare, Flute ல‌ column answer னு கலக்கி எடுப்பாப்ல...

v  அவ்வளவு ஏன், நாசிகபூஷணி, வாகதீஸ்வரி மாதிரி யாரும் சினிமாவுல அதிகம் பயன்படுத்தாத ராகங்கள்ல பாடல் கமபோஸ் பண்றது.. விஜய் ஏசுதாஸ் உட்பட கிட்டத்தட்ட 21 புதிய பாடகர்களை அறிமுகப்படுத்தியது.. இப்படி வித்யாசாகர் பண்ணின‌ வித்தியாசங்கள சொல்லிட்டே போகலாம்...




2005-06க்கு பிறகு தமிழ், மலையாளம் ரெண்டுலயுமே சரியான ஹிட் படங்கள் அமையாம ஒரு சின்ன பின்னடைவை சந்திச்சவரு,  போன வருஷம் "புள்ளிப் புலிகளும் ஆட்டின் குட்டியும்", "நீலத்தாமர", "டயமண்ட் நெக்லஸ்", "ஆர்டினரி"னு மலையாளத்துல தன்னோட வெற்றிகரமான அடுத்த இன்னிங்க்ஸ ஆரம்பிச்சுட்டாரு...


  • ஒட்ட தும்பி - புள்ளிப் புலிகளும் ஆட்டின் குட்டியும்
  • அனுராக விலோசனனாய் - நீலத்தாமர
  • தொட்டு தொட்டு - டயமண்ட் நெக்லஸ்
  • சுன் சுன் சுந்தரி பெண்ணே - ஆர்டினரி

இந்த நான்கு பாடல்களே போதும்... "He is back with a bang" அப்டின்னு  prove பண்ண...


All the best Vidyasagar sir... We are looking for your golden hits season in Tamil once again... And by the way wishing you a very happy birthday (Mar 5th)!!!!

டாடீ... எனக்கு ஒரு டவுட்டு... 

வித்யாசாகர் பாட்டக் கேட்டு ஜேம்ஸ் அங்கிள் எதுக்கு அழுவணும்.. அற்றைத் திங்கள் ஒரிடம்'  பாட்ட தாளத்த மட்டும் மாத்தி "சண்டமாருதம்" படத்துல ஜேம்ஸ் அங்கிள் போட்டுருக்கிற பாட்டக் கேட்டு நியாயமா வித்யாசாகர்  தான அழுவணும்?????

சொல்லுங்க டாடி சொல்லுங்க... சொல்லுங்க டாடி சொல்லுங்க...!!!

1 comment: