Wednesday, March 6, 2013

Toronto Concert ம்... ஓணாண்டிப் புலவரும்!!!

விஜய் டி.வி ல இளையராஜாவின் எங்கேயும்.. எப்போதும் ராஜா... வரும் ஞாயிறு காலை 11:30க்குன்னு விளம்பரத்த பாத்த உடனே, இது எப்போ நடந்துச்சு, எங்க நடந்துச்சுன்னு, நெட்ட துழாவ ஆரம்பிச்சேன்.. Toronto மாநகரில் கடந்த மாதம் நடந்த நிகழ்ச்சி என்று தெரியவந்தது...
 
அதில் திரு.இளையராஜா அவர்கள் குறித்த சில / பல விமர்சனங்களும் (அல்லது குற்றச்சாட்டுன்னும் சொல்லலாம்...) நெட்டுல‌ பாக்க முடிஞ்சது...
 
என்னோட மொதல் போஸ்ட் Music க பத்தி தான் போடணும்னு நெனச்சிட்டு இருந்த எனக்கு, அதப் பாத்த உடனேயே முடிவு பண்ணிட்டேன்.. இது தான் நம்ம மொதல் போஸ்ட் அப்படின்னு...
 
ரொம்ப சீரியஸா, "அவர் ஒரு இசைக்கடவுள்.." அப்படிங்கிற எல்லைக்கு அவரையும் தள்ளாம.. "அவரை எப்படி விமர்சிக்கலாம்"ங்கிற எல்லைக்கு நாமும் செல்லாம.. வந்த விமர்சனங்களை பத்தி மட்டும் அலசலாம்...
 
#1) 2:30 மணி நேரம் லேட்டாக வந்தார்... ஆனால் Sorry கூட கேக்கல!!!
 
இந்த நிகழ்ச்சிய ஏற்பாடு செஞ்சது.. ஒரு தனியார் நிறுவனம்... பாட வர்ர ஆட்களை ஓட்டல் ரூம்ல இருந்து நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு கொண்டு செல்லும் வழியில் ரோஜர் சாலையில் ஏற்பட்ட Traffic Jam la திரு. இளையராஜாவும் மற்ற பாடகர்களும் மாட்டிகிட்டாங்க.. இதில் திரு.இளையராஜாவோட தப்பு அல்லது பங்கு என்னன்னே எனக்கு புரியல..
 
பொதுவாகவே அதிகாலை 5 மணிக்கெல்லாம் பிரசாத் ரெக்கார்டிங் தியேட்டர்ல டாண்ணு ஆஜர் ஆகக்கூடிய மனிதர் வேண்டுமென்றே 2:30 மணி நேரம் லேட்டா வருவாரான்னு நாம் கொஞ்சம் நிதானமா யோசிக்கணும்...
 
இந்த எடத்துல ஒரு சின்ன சம்பவத்த சொல்றது ரொம்ப பொருத்தமா இருக்கும்... ஒரு நாள் ரெக்கார்டிங்குக்கு கார்ல போகும்போது, வழியில கார் நின்னு போச்சுன்னு, விடுவிடுன்னு கார விட்டு இறங்கி பொடிநடையா ரெக்கார்டிங் தியேட்டருக்கு போன சம்பவத்த, அவரே சில வாரங்களுக்கு முன் விகடன் பதில்கள்ள சொல்லி இருந்தாரு..

அப்ப‌டிப்ப‌ட்ட‌ ஒரு மனிதர் ச‌ம்ப‌ந்த‌மே இல்லாம‌ ஏன் லேட்டா வ‌ர‌ணும்..
 
ஆக இந்த லேட்டா வந்தாரு அப்டிங்கிற குற்றச்சாட்டு, வாசக்கடக்காரன் சரியா டீ போடல, வண்ணாந்தொறைல சரியா துணி வெளுக்கலன்ற காரணுத்துக்கெல்லாம் அவரு தான் பொறுப்புன்னு சொல்றது மாதிரி இருக்கு..
 
ஆனா திரு.இளைய‌ராஜா அவ‌ர்க‌ள் உண்மையிலேயே ஒரு விஷ‌ய‌த்துக்கு வ‌ருத்த‌ம் தெரிவிச்சாரு.. 3 மாத‌ கால‌மாக‌ ப‌யிற்சி செஞ்சு இங்கே உங்க‌ முன்னாடி வாசிக்கிறோம்..இதுல‌ சில‌ர் சில‌ நோட்ஸ வாசிக்கும் போது த‌வ‌று செஞ்சிருக்க‌லாம்..அதுக்கு வ‌ருத்த‌ம் தெரிவிச்சுக்கறேன் அப்டின்னு...
 
நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிறுவனம் பதில் சொல்ல வேண்டிய விஷயத்துக்கெல்லாம், இளையராஜா சாரி கேக்கல, மேட்சிங் பிளவுஸ் கேக்கலன்னு சொன்னா ஞாயமா??
 
#2)100$, 400$ கொடுத்து வ‌ந்தோம், இளைய‌ராஜாவுக்கு ப‌ண‌த்தாசையா???...
 
Again இந்த‌ நிக‌ழ்ச்சியை ந‌ட‌த்திய‌ த‌னியார் நிறுவ‌ன‌ம் ப‌தில் சொல்ல‌ வேண்டிய‌ விஷ‌ய‌ம்.. எத்த‌னை ரூபாய்க்கு டிக்கெட்டுக‌ள் விற்க‌ப்ப‌ட்டாலும் அதில் இளைய‌ராஜாவின் த‌லையீடு என்று எதுவும் இல்லை.. அதே போல‌ தியேட்ட்ர் வாச‌லில் வ‌ந்து, 20 - 60, 20 - 60 என்று அவ‌ர் விற்க‌வும் இல்லை.. இதுவும் கொஞ்சங்கூட பொருத்தமில்லாத‌ குற்ற‌ச்சாட்டு..
 
தூரல் நின்னு போச்சு ப‌ட‌ விழாவில், அப்போதைய‌ முத‌ல்வ‌ர் திரு.எம்.ஜி.ஆர் அவர்கள் அணிவித்த‌ மோதிர‌த்தை, "நான் ந‌கை அணிவ‌தில்லை"ன்னு சொல்லி அங்கேயே க‌ழ‌ட்டிக்கொடுத்த‌ ச‌ம்ப‌வ‌த்தை அவ‌ர‌து "யாருக்கு யார் எழுதுவ‌து - ப‌க்க‌ம் 56ல்" பாக்க‌ முடியும்...
 
அதே போல‌ க‌ர‌காட்ட‌க்கார‌ன் ப‌ட‌த்தை எடுத‌த‌ த‌யாரிப்பாள‌ர் பின்னாட்க‌ளில் ப‌ண‌க்க‌ஷ்ட‌த்தில் இருந்த‌போது, அவ‌ர் கொடுத்த‌ செக்கை திருப்பிக் கொடுத்துட்டு, 10 பைசா வாங்காம‌ல் இசையமைச்சுக்கொடுத்த‌ ப‌ட‌ம் தான் "வில்லுப்பாட்டுக்கார‌ன்"... இந்த‌ த‌க‌வ‌லை விஜ‌ய் டி.வி நீயா நானாவில் அந்த‌ த‌யாரிப்பாள‌ரே சொன்னாரு..
 
அப்ப‌டிப்ப‌ட்ட‌ ஒரு ஆளுக்கு என்ன‌ ப‌ண‌த்தாசை இருக்க‌ முடியும்??????
 
(நீங்க‌ளே சொல்லுங்க‌ யுவ‌ர் ஆன‌ர்.. அத‌க் க‌ள‌வாண்டு போயி அவ‌ர் என்ன‌ செய்ய‌ப்போராரு?? )
 
#3)விசிலடிக்கக் கூடாதுன்னு சொல்றாரே.. இதென்ன பஜனை மடமா??
 
இது ரொம்ப முக்கியமான ஒரு கேள்வி...
 
ஒரு விஷ‌ய‌த்த‌ இந்த‌ எட‌த்துல‌ தெளிவுப‌டுத்த‌ணும்னு நென‌க்கிறேன்..
 
இளைய‌ராஜா பாட்டு கேக்க‌ற‌துக்காக‌ ஒரு க‌ச்சேரிக்கு போற‌து வேற‌... இளைய‌ராஜா க‌ச்சேரிக்கு போற‌து வேற‌.. ரெண்டும் ஒண்ணு கெடையாது...
 
இது அவரோட மொதல் Concert கிடையாது.. 6வது நிகழ்ச்சி (எனக்கு தெரிஞ்சு)..
 
ஒவ்வொரு தடவையும், வெறும் சினிமா பாட்ட மட்டும்  அவ‌ர் நிக‌ழ்ச்சி ந‌ட‌த்துற‌தில்ல‌...
 
அதையும் தாண்டி த‌ன்னுடைய‌ ர‌சிக‌னுக்கு தெரியாத‌ ப‌ல‌ நுணுக்க‌மான‌ விஷ‌ய‌த்த‌ சொல்ல‌ அவ‌ர் முய‌ற்சி செஞ்சுகிட்டே இருக்காரு..
 
உதார‌ண‌த்துக்கு..
 
1) ச‌ ரி க‌... இந்த‌ மூணே மூணு ஸ்வ‌ர‌த்த‌ வ‌ச்சுகிட்டு ஒரு பாட்டு க‌ம்போஸ் பண்ண‌முடியும்னு காட்டுறார்..
 
2) அவ‌ரோட‌ அடுத்த‌ நிக‌ழ்ச்சியிலேயெ இன்னும் ஒரு ப‌டி மேல‌ போயி 2 நோட்டுல‌ ஒரு சாங் பாடிக்காட்டுறாரு.. இன்னும் ஒருபடி மேல போயி "வா வா பக்கம் வா" பாட்டு ஒரே ஒரு நோட்டுல போட்ட் பாட்டுணு சொல்றாரு
 
3) ஒரு ம‌னித‌னுடைய‌ வாழ்க்கையில் இசை எங்கெங்கு எல்லாம் ப‌ங்கெடுக்கிற‌து அப்டிங்கிற‌த‌ ஒரு பீஸா க‌ம்போஸ் ப‌ண்ணிக் காட்டுறாரு..
 
4) ஒரே வரிய எத்தனை விதமா கம்போஸ் பண்ணமுடியும்.. பண்ணுவாங்கன்னு சொல்ராரு (மாங்குயிலே பூங்குயிலேவை 6 விதமாக இவர் பாடிக்காட்டியது இன்னும் எனக்கு நெனப்பிருக்கு..)
 
இதெல்லாம் ஒரு கடைக்கோடி ரசிகனால் வேறு எங்கும் பார்க்க‌வோ அல்ல‌து தெரிஞ்சுக்கவோ இயாலாத ஒரு விஷயம்..
 
இன்னொரு அற்புதமான சம்பவம்..
 
அதுவரைக்கும் வயலின் மாதிரி இருக்குற எல்லாமே வயலின் தான்னு நெனச்ச ஆளு நானு..
 
சிம்பொனி என்பது எப்படி இருக்கும்னு.. ரொம்ப எளிமையா "இதயம் போகுதே.." பாட்ட வச்சுகிட்டு ஒண்ணுக்கு மேற்பட்ட் கவிதைகளை ஒரே நேரத்தில் வாசிக்கும் அனுபத்தைப் போன்றது சிம்பொனின்னு சொல்லி  Explain பண்ணுனாரு பாருங்க..அய்யோ.. வார்த்தையே இல்ல..
 
முதல்ல‌ Violin, பின் Viola, பின்னர் Cello, பின்னர் Double Bass இன்னு ஒவ்வொண்ணா சேந்து, இதெல்லாம் மொத்தமா ஒரு இசைப்பிரவாகமா வரும்போது கெடைக்கிற அனுபவம் இருக்கே.. சான்சே இல்ல.. இந்த நுணுக்கத்த சொல்லும்போது.. அல்லது சொல்லவரும்போது விசில் அடிச்சா சொல்ல வந்த விஷயத அவரும் முழுசா சொல்ல முடியாது.. ரசிகனும் முழுசா கேக்க முடியாது..
 
ஒரு சிந்த்சைசர் அப்புறம் ஒரு ஆக்டாபேட்..இந்த ரெண்ட வச்சுகிட்டு கச்சேரிய முடிக்காம.. மெனக்கெட்டு 60 பீஸ் ஆர்க்கெஸ்ட்ராவ கொண்டுவந்து அதன் நுண்மையான ஒலிகளை எல்லாம் எல்லாருக்கும் சேக்க ஒரு ஆளு பிரயத்தனப்படும்போது விசில் மட்டும் அடிக்காதீங்க.. கை தட்டி உற்சாகப்படுத்துங்கன்ணு சொன்னா அவரு சொல்றதுல என்ன தப்புன்னு எனக்கு புரியல...
 
ஜனனி ஜனனியோ, அல்லது ஓம் சிவோஹமோ பாடும்போது அது பக்தி இசை தான்..சிம்பொனிய பத்தி சொல்லும்போது அது ஒரு Operaவுக்கு கொஞ்சமும் இளைச்சதல்ல...
 
இதெல்லாம் எனக்கு வேணாம்யா.. நல்ல குத்து சாங் பாடு.. அப்டின்னு சொல்ற ஆட்கள், கற்கண்டு பாயசத்துல எங்கய்யா கருவப்பிலயே காணுமேன்னு தேடுறதா தான் அர்த்தம்.. அவர்களுக்கான நிகழ்ச்சி நிச்சயம் இது அல்ல..
 
அத சி டி பிளேயரிலோ அல்லது வேறு எந்த கச்சேரியிலோ நாம கேட்டுட்டு போயிடலாம்..
 
இதுல‌ என்ன‌ பெரிய‌ பொல்லாத‌ புனித‌த்த‌ன்ம‌ வ‌ந்திருச்சுன்னு கேக்க‌லாம்.. இது புனித்த‌த்த‌ன்மைய‌ சார்ந்த‌ விஷ‌ய‌ம‌ல்ல‌.. ஒரு அடிப்ப‌டை நாகரிக‌ம்னு அவ‌ரு சொல்ராரு.. அவ்ளோ தான்..
 
மொத்தத்துல இந்த விமர்சனங்கள் / குற்றச்சாட்டுகள் எல்லாமே "சார்.. இவர் என்ன கிள்றான் சார்.. மீஸ்ஸ்.. இவன் என் சிலேட்டுகுச்சிய எடுத்துட்டு தரமாட்டிங்கிறான் மீஸ்ஸ்.." அப்டிங்கிற மாதிரி தான் எனக்கு தோணுது..
 
நல்ல சங்கீதத்த கேக்கணும், தெரிஞ்சுக்கணும்னா இத மாதிரியான விஷயத்த நோண்டி நொங்கெடுக்காம இருந்தாலே போதும்..
 
நாம புலிகேசியா இல்லாத வரைக்கும் இளையராஜா சார் நமக்கு ஓணாண்டிப் புலவரா தெரியவே மாட்டார் ( புதிய தத்துவம் பத்தாயிரத்தி நூத்தி ரெண்டு...)

1 comment:

  1. He He Heeeeeeeeeeeeeeeee.... Nice review... Ture, I agree, but i couldn't take your justification for first point. People waiting there paid money to hear for Raja's voice and not Gopi's voice... So an apology was expected....

    ReplyDelete