Friday, June 20, 2014

ஒரு கிராமத்துக் கிளியும்... அதன் ஒறமொறையும்...!!

பதினஞ்சு வருஷத்துக்கு முந்தி, நம்மூரு க்கம் ரெண்டு நாள் கரண்ட் வராதுன்னு சொன்னாக் கூட கவலையே படமாட்டாங்ய... ஆனா ஊருக்குள்ள ரெண்டு நாள் பஸ் வராதுன்னு சொன்னா தவிச்சு தள்ளாடிருவாங்ய... 'நச்'சுனு சொல்லனும்னா, தி காலத்துல எப்படி "பசு" கிராமத்தானோட வாழ்வின் ஒரு அங்கம்னு சொல்லுவாங்களோ அதே மாதிரி நவீன காலத்துல "பஸ்" தான் கிராமத்தான் வாழ்வோட ஒரு அங்கம்...



பொன்வண்டு சோப் அல்லது புலி மார்க் சீயக்காய் விளம்பரம் போட்ட பையில தேன் முட்டாயி,குருவி ரொட்டி, ஊறுகாய் பாக்கெட்டு, சுருட்டு, பீடிக்கட்டு, பட்டை சோம்பு, கருவாடு பாக்கெட்டு இதர மளிகை சாமன்கள் வாழைத்தார் கட்டைய வெட்டி மூடியா போட்ட டின்ல எண்ணெய், பிரம்பு கூடைக்குள்ள வெக்கப் பிரி சுத்துன வெத்தலக் கவுளி, பெரிய வாழை மட்டைல சுத்துன எலைக்கட்டு,பனை ஓலை விசிறி பண்டல், பால் கேன், நியூஸ் பேப்பர், வாழைத்தார், பலாப்பழம் இப்படி உள்ளேயும் வெளியேயும், காலை முதல் மாலை வரை ஒரு கிராமத்தானுக்கு தேவையான எல்லாத்தையும் ஏத்திகிட்டு வர்ர காமதேனுவே பஸ் தான்...

எல்லாரும் புள்ளைங்களுக்கோ அல்லது தான் வளக்கிற செல்லப் பிராணிங்களுக்கோ தான் பேரு வைப்பாங்க.. ஆனா அதுக்கு அடுத்து மனுஷன் பேரு வைக்கிற விஷயம் பஸ் தான்..

எங்க ஊருல ஒரு போக்குவரத்து அதிகாரி அரசு பஸ்ஸுக்கெல்லாம் "கிராமத்து கிளி", "தங்க ரதம்", "மன்னை மயில்" இப்டினெல்லாம் பேரு வச்சாரு... அதப் பாத்துட்டு, "என்னய்யா இது, கிராமத்துக் கிளின்னு பேரு வச்சிருக்கானுவ.. கிராமத்து எருமமாடுன்னு வச்சிருந்தா கரெக்டா இருக்கும்... எளவு ஒரு மைலுக்கு ஒருக்க எறங்கி தள்ள வேண்டியிருக்கு, பத்தாததுக்கு ஆத்துக்குள்ளாற அப்பப்போ எறங்கிருது.."னு நக்கல் அடிக்குங்க எங்க ஊரு பெருசுங்க...

பஸ்ஸ வச்சி நம்மாளுங்க பண்ற அளப்பறை சொல்லி மாளாது...

பஸ் ஸ்டாண்டு முனைல பஸ் திரும்பும் போதே, வாடிவாசல்ல அவுத்துவுட்ட ஜல்லிக்கட்டு மாடு மாதிரி இருவது முப்பது பேரு அதுமேல பாஞ்சு, எடம் புடிக்கிறதுக்காக துண்டு, பை, நோட்டு, குடை,செருப்பு,தூக்கு வாளின்னு கண்ட கருமத்தையும் ஜன்னல் வழியா உள்ள தூக்கிப் போட்டு.. இன்னும் சிலபேரு, பெத்தபுள்ளையக் கூட உள்ள தூக்கிப் போட்டு "ரோதைய விட்டு தள்ளிக் குந்து ஆயி"ன்னு அட்வைஸ் பண்ணி, அடுத்த பந்திக்கு கறி கெடைக்காதுன்ற மாதிரி அடிச்சுப் புடிச்சு ஏறி உக்காருறதுக்குள்ள ஒரு பெரிய யுத்தமே நடந்துரும்...



உள்ள போயும் சும்மா இருக்க மாட்டாங்ய, கன்னுபோட்ட் மாடு பசியில வெக்கல திங்கிற மாதிரி எங்க ஊரு கெளவிங்க வாய் நெரய வெத்தலைய மென்னு எவன் மேலயாச்சும் துப்பி ஏழரைய கூட்டிருங்க...சின்னப் பய எவனாச்சும் வேடிக்க பாக்குறேன்னு சொல்லி கம்பிக்குள்ள தலையவுட்டு மாட்டிகிட்டு அலறி ஊரையே ரெண்டு பண்ணுவாங்ய... சில பேரு கைய வச்சிகிட்டு சும்மா இருக்கமுடியாம, பஸ்ஸுக்குள்ள நகத்த வச்சு சொரண்டியே ஆர்ட்டின்ல அம்பு விடுவாங்ய.. இத எழுதும்போது நியாபகத்துக்கு வருது.. கைப்பிடித்த மனைவிகிட்ட செமையா ஒதவாங்கிட்டு வந்த யாரோ ஒரு தீர்க்கதரிசி "புகைப்பிடித்தல் உடல் நலத்துக்கு கேடு" அப்டின்னு எழுதி இருந்ததுல "பு"ன்ற மொதல் எழுத்தமட்டும் சொரண்டி எடுத்து போறபோக்குல ஒரு வாழ்க்கை தத்துவத்தையே சொல்லிட்டுப் போனான்...

பஸ்ஸுக்குள்ள எழுதிவைக்கிற வாசகங்களும் செமையா இருக்கும்... "பெண்கள்" அப்டிங்கிற வார்த்தைக்கு "பூவையர், பாவையர், மங்கையர், மலரினம்"னு கண்டமேனிக்கு ஆராய்ச்சி பண்ணி எழுதி கலைத்தாகத்த தீத்துக்குற ஆளுங்க உண்டு...  

அதுலயும் "நான் என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது.. நாம் என்று சொன்னால் உதடு ஒட்டும்"னு ஒரு கட்சி எழுதிவைக்க... "Government Bus Foot Boardடே பஸ்ஸோட ஒட்டமாட்டேங்குது... ஒதடு ஒட்டுனா என்ன ஒட்டாட்டி என்ன"னு அடுத்து வந்த கட்சியோட போக்குவரத்து அமைச்சர் சட்டமன்றத்துலயே கலாய்ச்ச வரலாறெல்லாம் நம்மூரு பேருந்துக்கு உண்டு...

பஸ்ஸ கண்டுபுடிச்ச நாளோ, பஸ்ஸக் கண்டுபுடிச்சவன் பொறந்த நாளோ, இல்ல பஸ்ஸச் செஞ்ச நாளோ இது எதுக்குமே சம்பந்தமே இல்லாம "பஸ் டே"ன்னு ஒண்ணக் கொண்டாடி, இதையே சாக்கா வச்சு களவாணி படத்து விமல் மாதிரி வசூல் பண்ணி சரக்கடிக்கிற வரையில எளந்தாரிப் பயலுக வாழ்க்கையில பஸ் கூட ஒரு ஒறமொற மாதிரி தான்...
பஸ்ஸுன்னு சொல்லிட்டு காதல் இல்லமலா??.. கால் ரெண்டுக்குள்ள சொருகுன கட்டம் போட்ட கைலியும், பக்கத்துல இருக்குறவன் தோள்மேல போட்ட கையுமா, " 09:50 விஜய்ல வரேன்னிச்சு மாப்ள... டிரைவருக்கு பின்னாடி மூணாவது சீட்ல குந்திருக்கேம்னிச்சு..."ன்னு தன்னோட ஆளுக்காக வெயிட் பண்ற காதல் நாயகர்கள் நம்ம ஊரு பஸ் ஸ்டாப்புல ரொம்ப பேரு... அந்த காதல் வாகனம் அவனக் கடந்து போற வரைக்கும் அவனுக்குள்ள ஒரு ரஜினி, கைய பேண்ட்டுக்குள்ள விடாமலே "காதலின் தீபம் ஒன்று" பாடிகிட்டு இருப்பாரு...

இதெல்லாம் தாண்டி, "விஜய்" போகுதா மணி 09:50, கே.பி.டி யா மணி ஆறேகால், ராஜலட்சுமியா மணி 08:20ன்னு கடிகாரமே இல்லாம நேரத்த சொல்ற அளவுக்கு பஸ்ஸுக்கும் அவிங்யளுக்கும் ஒரு நெருக்கம் உண்டு...

வெவரமான இன்னும் சிலபேரு "என்னண்ணே வண்டியோட வாஸ்துவே வேறமாதிரி இருக்கு.. நம்பரும் நம்மூரு நம்பர் மாதிரி இல்லையேன்னு கரெக்டா கேள்வியப் போடுவாங்ய... அதுக்கு ".. இதுவா, மொதல்ல பல்லவன்ல ஓடுச்சு, பொறவு டாக்டர். அம்பேத்கர்னு ஆக்குனாவோ, அதுக்கும் பெறகு மருதுபாண்டியர்ல மூணு வருசம் வச்சு ஓட்டிருக்காவ்வோ இப்ப இங்க வந்துருக்குன்னு.. சொப்பன சுந்தரி கார் மாதிரி வண்டியோட வரலாறு சொல்ற ரசனையான டிரைவர்களும் நம்மூர்ல நெரைய உண்டு...

இவங்யளே இப்படின்னா இவங்யள பஸ்ஸுக்குள்ள வச்சு மேக்கிறவங்ய பண்ற அழும்பு இன்னும் ஜாஸ்தி...

லேடிஸ் கான்வெண்டோ, காலேஜோ நெருங்கிடிச்சுன்னா போதும், போட்டுருக்கிற சட்ட பட்ட்னயெல்லாம் பப்பரப்பான்னு அவுத்துவுட்டு, நட்டகுத்தா எந்திரிச்சு ஆக்சிலேட்டர் மேல நின்னாலும் நாப்பதுக்கு மேல நகராத வண்டில கூட, காதல் பரத் மாதிரி ஒரு சைடு போஸ்ல உக்காந்துகிட்டு நாலு வெரல்லயே கியர் லிவர தட்டுறதாகட்டும்.. ஒண்ணுக்கு ரெண்டா ஏர் ஹாரன வச்சுகிட்டு அதுலயே 'என்னடி முனியம்மா' பாட்டு வாசிக்கிறதாகட்டும்.. அப்படியே போயிங் விமானத்தஜக்க்க்குனு தூக்குற பைலட் லெவலுக்கு பெர்ஃபாமன்ஸ்ல பின்னுவாங்ய...


அதே மாதிரி 30 பேருக்கு 1 ரூவா டிக்கெட் போடனும்னா, எவன்யா ஒவ்வொரு டிக்கெட்டா போட்டுகிட்டுன்னு சொல்லி டிக்கெட் புக்கோட நடுவுல அஞ்சு பக்கத்துக்கு செங்குத்தா கோடு போட்டு இந்தா வச்சுக்கன்னு சொல்றதாகட்டும், அடிக்கிற நம்மூரு வெயில்லயும் ஆஸ்திரேலியா ஷூட்டிங் போன ஹீரோ மாதிரி உள்ள ஒண்ணு, வெளில ஒண்ணுனு சட்டைய போட்டுகிட்டு வாயில வச்ச விசில்லயே வயலினெல்லாம் வாசிச்சு பெர்ஃபாமன்ஸ் பண்றதாகட்டும் டிரைவருக்கு கொஞ்சமும் சளைச்சதல்ல கண்டக்டர் ஸ்டைல்... அது சரி இந்த நாட்டோட ஸ்டைலான ஹீரோவே ஒரு கண்டக்டர் தானே..

கண்டக்டர்னு சொல்லும்போது இன்னொரு விஷயம் நெனப்புக்கு வருது... வண்டிய நிறுத்தணும்னா "ஓல்டேஏஏஏஏஏன்ன்ன்ன்..."னு ஒரு சவுண்டு விடுவாங்ய பாரு... ரொம்பக் காலம் வரைக்கும் இந்த "ஓல்டேன்"னுக்கு அர்த்தம் தெரியாம மண்டகாஞ்சு அலைஞ்சு கடைசில கண்டுபுடிச்சேன்.. அது "ஓல்டேன்" இல்ல "Hold On" அப்டின்னு..

சாதாரண மக்களுக்கு மட்டுமில்லாம, அரசியல் கட்சிகளுக்கும் பஸ்ஸுக்கும் கூட மிகப்பெரிய தொடர்பு உண்டு....

"சேரன், சோழன், பாண்டியன்"னு நிர்வாக வசதிக்காக ஆரம்ப காலத்துல அந்தந்த மண்டலத்துல ஆட்சி செஞ்ச அரசர்களோட பேர பஸ் போக்குவரத்துக் கழகங்களுக்கு வெச்சாங்க. அப்புறம், அண்ணா, காமராஜர், பட்டுக்கோட்டை அழகிரின்னு தலைவர்கள் பேர பஸ்ஸூக்கு வைக்க ஆரம்பிச்சதுல தான் வந்துச்சு சிக்கல்.. அடுத்து ஜாதிக்கு ஒரு தலைவர் பேர்ல போக்குவரத்துக் கழகம் ஆரம்பிக்கிற அளவுக்கு இந்த வியாதி முத்திப் போயி... கடைசில ராஜ்கிரண் மாதிரி வரிக்கு வரி "தக்காளி" போட்டு பேசுற மாவட்டத்துல, பஸ்ஸுல போன ரெண்டு ஜாதி ஆளுங்க ஒருத்தர ஒருத்தர் அடிச்சுகிட்டு தக்காளி சட்னிய தரைல ஓடவிட்ட கொடுமை வரைக்கும் போச்சு...

மரத்தவெட்டி ரோட்டுல போட்டு பஸ்ஸ ஓடவிடாம செய்யுறது, கண்ணாடிய ஒடைக்கிறது, பஸ்ஸுக்கு தீய வச்சு கொளுத்துறது இதெல்லாம் நவீன அரசியல்ல ஒரு அங்கமாவே மாறிப்போச்சு... அதனால பஸ்ஸுக்கும் தனக்கும் உள்ள இத்தனை தொடர்பும் மறந்தும் போயிடுது...

கடந்த ஒரு மாசத்துல அரசியல் தலைப்புச் செய்திகளுக்கு அடுத்து எல்லாப் பத்திரிக்கையிலும் மெயின் கவரேஜே பஸ் விபத்துக்கள் தான்...

அரியலூரில் நேருக்கு நேர் மோதல், ஆற்றுக்குள் கவிழ்ந்த பஸ், பிரேக் பிடிக்காமல் கோயிலுக்குள் புகுந்த பேருந்து, சைதாப்பேட்டையில் கவிழ்ந்த பேருந்து... இப்படி ஏராளம்... ஒவ்வொரு விபத்துலயும் செத்தவன் கணக்க சொல்லி மாளாது...



அரசு நடைமுறைப்படி ஒரு வண்டியோட Running Condition, பிரேக் புடிக்குதா, இல்லையான்னு டியூட்டி முடிஞ்சு போற ஒவ்வொரு டிரைவரும் எழுதிவைக்க ரிப்போர்ட் புக்குன்னு ஒண்ணு உண்டு.. அது போக போக்குவரத்து துறையே வண்டிய அப்பப்போ பரிசோதனை செய்ய Fitness Certification ன்னு ஒண்ணு உண்டு...

இது அத்தனைக்கும் மேலபிரேக் புடிக்காமஆத்துக்குள்ளதாவுற "கிராமத்துக் கிளிய" என்னன்னு சொல்றது.. முந்தி எல்லாம், ஸ் எஃப் சிக்கு போகுதுன்னாலே, பொண்டாட்டி ஆடி சீருக்கு அம்மா வீட்டுக்கு போற மாதிரி டிரைவர்கள் எல்லாம் பிரைட்டா ஆயிடுவாங்க‌..

நெஜமான Defect என்னன்னு கண்டுபுடிக்காம, Nerolax பெயிண்ட வாங்கி பளபளன்னு அடிச்சு உடுறதுங்கிறது, பல்லு போன பாட்டிக்கு Papaya Face Pack போட்டுவிடுறதுக்கு சமம்.. அதனால இந்தப் பிரச்சினைக்கு என்ன பண்ணலாம்...

  • சொப்பன சுந்தரி கார் மாதிரி "Date முடிஞ்ச" இரும்பையெல்லாம் எடைக்குப் போட்டு "Dates" வாங்கி இந்திய குழந்தைகளோட இரும்புச்சத்த அதிகப்படுத்தலாம்...
  • அப்படியே "பழைய இரும்பு வாங்க... விற்க.. எங்க கிட்ட வாங்க"ன்னு வண்டிக்கு பின்னாடியே விளம்பரம் கூட குடுக்கலாம்...
  • ரொம்ப சென்டிமென்டான வண்டி.. அப்டியெல்லாம் செய்ய முடியாதுன்னா, வண்டி நம்பர மட்டும் TN01,TN02,TN30 ன்னு இருக்கிறத, "எமன் 01, எமன் 02, எமன் 03"னு மாத்தலாம்.. ஆங்கிலத்துல ஸ்டைலா "MN01,MN02"னு போட்டுக்கலாம்...
  • முத்து படத்துல வர்ர அம்பலத்தாரோட கார் மாதிரி, பஸ்ஸுக்கு முன்னாடி ரெண்டு எரும மாட்டு கொம்பு வச்சு விட்ரலாம்.. எமனோட வண்டி வருதுன்னு தெரிஞ்சு எல்லாரும் எச்சரிக்கையா இருப்பாங்க... இப்படி எவ்வளவோ செய்யலாம்...
சாமிக்கு மாலையப் போட்டு கோயிலுக்கு கெளம்புறவன, சாமியாக்கி போட்டோவுல மாலைய போடுற வகையில கூட "கிராமத்துக் கிளி" நமக்கு ஒறமொற தாம்லே...

வண்டிய எடு ரை...ரை....!!!!!

Tuesday, June 17, 2014

யேய்...என்ன வச்சு காமெடி கீமெடி பண்ணலியே???

"ஒலகத்துல ஒரே ஒரு எம்.ஜி.ஆர் தான்.. கருப்பு எம்.ஜி.ஆர், புளூ எம்.ஜி.ஆர், செவப்பு எம்.ஜி.ஆர்னு எல்லாம் கெடையாது... நீ கருப்பு எம்.ஜி.ஆர்னா நான் கருப்பு நேரு... இப்ப என்ன பண்ணுவ போ...."

"கருப்பு எம்.ஜி.ஆர்" விஜயகாந்த பத்தி மூணு வருஷத்துக்கு முந்தி திருவாரூர் மீட்டிங்ல "கருப்பு நேரு" வடிவேலு கழுவி கழுவி ஊத்துன வசனம் தான் மேல நீங்க படிச்சது...



அதுக்கப்புறம் கருப்பு நேருவோட கலைவாழ்க்கையே கரண்ட் போன கருமாதி வீடு மாதிரி கருங்கும்முனு இருளும், சோகமுமா மாறிப் போன கதை நாடறிஞ்சது... மூணு வருஷ வனவாசத்துக்கு பிறகு தன்னோட தெனாலிராமன் படம் மூலமா மீண்டு(ம்) வந்திருக்காரு வடிவேலு... போன வாரம் காஃபி வித் டிடி ல ஐயா தான் கெஸ்ட்...

அப்டின்னா வடிவேலு கருப்பு நேருவான்னு உங்களோட கேள்வி முடியறதுக்குள்ள... வடிவேலுவுக்கு "கருப்பு நாகேஷ்" அப்டின்னு ஒரு பேரு இருக்கு தெரியுமா?? (நல்லா கேக்குறாங்கய்யா டீட்டெய்லு...)

சகட்டுமேனிக்கு கலாய்ச்சாலும் சாகித்ய அகாடமி விருது கெடச்ச மாதிரி சிரிக்கிற ஆளுங்கள தமிழ்நாட்டு மக்களுக்கு ரொம்ப புடிக்கும்...வடிவேலுவும் வந்த புதுசுல அப்படித்தான்...

ஆரம்ப காலங்கள்ல, கவுண்டமணி - செந்தில் ஜோடியோட அப்பரசண்டியா அங்கொண்ணும் இங்கொண்ணுமா தலையக்காட்டிட்டு இருந்தவரு Life ல முதல் கியர் விழுந்தது காதலன் படத்துல தான்...

அந்தப் படத்த எடுத்த கே.டி.குஞ்சுமோன் தான் தன்னோட  படமான "சிந்து நதி பூ" படத்துக்கு 1994ல தினமணில‌ " "கருப்பு நாகேஷ்" வடிவேலு நடிப்பில்" அப்டின்னு ஒருவிளம்பரம் குடுத்தாரு... அன்னிக்கு தேதிக்கு நாகேஷுக்கும் அவருக்கும் இருந்த ஒரே ஒத்துமை கால்கிலோ கறி கூட இல்லாத பாடி மட்டும் தான்... (அப்ப நான் சிக்குனு சிறுத்தக்குட்டி மாதிரி இருந்தேன்..)


பின்னாட்கள்ல, "நான் தேவர் மகன் படத்துல Pathos ல பேர் எடுத்த ஆளு"னு வடிவேலுவே சொல்லிகிட்டாலும், காமெடியத் தவிர வேற எந்த ரோல்லயும் என்னால வடிவேலுவ அப்போ கற்பனை கூட பண்ணிப் பாக்கமுடியாது... ஏன்னா அது எல்லாமே அவருக்கு கொஞ்சமும் வரவே வராத விஷயம்...

அவரோட ஆரம்ப கால Pathos Actingக்கு உதாரணமா ஒரு செய்தி கூட உண்டு.. தேவர் மகன் பட ஷூட்டிங்.. சிவாஜி இறந்து போயி அவரப் படுக்க வச்சிருக்காங்க.. அப்போ சுத்தி நிக்கிற எல்லாரும் அழுவுற மாதிரி சீன்... "அய்யய்யோ...அய்யாயாயா... போயிட்டீங்களே.." ன்னு வடிவேலு ஒப்பாரி வைக்க ஆரம்பிக்க, படுத்திருந்த சிவாஜி எந்திரிச்சு, "எலாய்.. யார்ரா அவன் ஒப்பாரி வைக்கிறவன்.. சத்தம்போடாம அழுவணும்"னு சொல்ல, வெரண்டு போயி சத்தமில்லாம நடிச்சாரு அப்டின்னு...

"முத்து" படம் நடிக்கும் போது 50 படங்களத் தொட்டிருந்த வடிவேலுக்கு சரியான பிரேக் கொடுத்த படம்... இன்னும் சொல்லப் போனா ரிட்டையர்மெண்டுக்கு கவுண்டமணி ஏற்கனவே தயாராகிட்டு இருந்த அந்த சமயத்துல, வடிவேலுவ முன்னணி நடிகரா அடையாளம் காட்டின படம், வி. சேகரோட "காலம் மாறிப் போச்சு"..

"சகல.. ஏன் அடி என்னான்னு நீ பாத்ததில்லையே.. இன்னைக்கு நீ பாக்கிற"ன்னு சவடால் விடுறது ஆகட்டும்... உள்ள போயி கோவை சரளா பொளந்தெடுத்ததும் அலறி அடிச்சிகிட்டு வெளிய ஓடிவந்து.. 
"யோவ்.. நீயெல்லாம் ஒரு சகலையா?? உள்ள கைய முறுக்கிகிட்டு நெஞ்சுல குத்துறாய்யா, அந்த குத்து குத்துறா.. வெளில நின்னு வேடிக்க பாக்குறியேடா அறிவுகெட்டவனே"ன்னு பொலம்புறதாகட்டும் மிடில் கிளாஸ் ஆடியன்ஸ் மொத்தத்தையும், வடிவேலு கட்டி இழுக்க ஆரம்பிச்ச படம் அது..



குறிப்பா கோவை சரளாகிட்ட அடிவாங்குறதுன்னு ஒரு புது டிரெண்டையே ஆரம்பிச்சு வச்ச படம் அது.. வரிசையா "விரலுக்கேத்த வீக்கம்,பொங்கலோ பொங்கல்,வரவு எட்டணா செலவு பத்தணா, கூடி வாழ்ந்தால் கோடி நன்மை" இப்படி வடிவேலுவுக்கு வி.சேகர் போட்டுக் குடுத்த ரூட் அவர நேரா மெயின்ரோட்டுல கொண்டு சேர்த்தது...

அடுத்து பார்த்திப‌னோட‌ ஜோடி போட‌ ஆர‌ம்பிச்ச‌ வ‌டிவேலுவுக்கு "வெற்றிக்கொடி க‌ட்டு" ப‌டத்துல தான் "வ‌ந்துட்டான்யா வ‌ந்துட்டான்யா"ன்னு அவ‌ரோட‌ முத‌ல் பாப்புல‌ர் ட‌ய‌லாக் ஆர‌ம்ப‌ம் ஆச்சு..

அதுக்குப் பிற‌கு Facebook ல‌ வெட்டியா ட‌ய‌லாக் உடுற‌ ப‌லபேர் பொழைப்புக்கு வ‌ழிப‌ண்ற‌ மாதிரி வ‌ரிசையா ஏக‌ப்ப‌ட்ட‌து ச‌ர‌மாரியா வ‌ந்து விழ‌ ஆர‌ம்பிச்சது...

கொஞ்ச‌ம் சாம்பிள் பாக்க‌லாமா?

  • நீ புடுங்குற‌தெல்லாமே தேவை இல்லாத‌ ஆணி தான்
  • அலோ துபாயா? அங்க‌ என்னோட‌ பிர‌த‌ர் மார்க் இருக்காறா?
  • Why blood? same blood!!!
  • நான் அப்ப‌டியே ஷாக்காயிட்டேன்...
  • மாப்பு வ‌ச்சுட்டான்யா ஆப்பு!!!

காமெடி சேனல் பாத்தோமா, கட கண்ணிக்கு போயி பொழப்ப பாத்தோமான்னு இல்லாம, கப்பித் தனமா, இதையெல்லாம் ஃபோன்ல‌ கால‌ர் டியூனா வ‌ச்சிகிட்டு அல‌ஞ்ச‌ ப‌க்கிங்க‌ நெற‌ய‌ பேரு..

அது வ‌ரைக்கும் வ‌டிவேலு ந‌டிச்ச‌ ப‌ட‌ம் ஹிட், வ‌டிவேலு பேசின‌ வ‌ச‌ன‌ம் ஹிட் அப்டின்னு இருந்த‌ நெல‌மைய‌ மாத்தி "வ‌ண்டு முருக‌ன், அலார்ட் ஆறுமுக‌ம், வ‌க்கீல் வெடிமுத்து, ச‌ங்கிம‌ங்கி, கைப்புள்ள‌"ன்னு ப‌ட‌த்தோட டைரக்டர விட தன்னோட கேரக்டர பிரபலம் ஆக்குனது வடிவேலுவோட ஹைலைட் ரெக்கார்டு...

வடிவேலுவோட  Speciality யே" ரத்தக் கண்ணீர் மாதிரி பழைய பட சிடி தேயத்தேய காப்பியடிக்காம, சரக்கையும் ஷகிலாவையும் மட்டுமே காமெடின்னு நம்பாம, எந்த தனிநபர் விமர்சனமும் இல்லாம, கருத்து கந்தசாமியா மாறி நாட்டத் திருத்துறேன்னு கெளம்பாம, யாரையும் மிமிக்ரி பண்ணாம எல்லாரையும் ரசிக்க வச்சது தான் (ஏன்ன்... நல்லாத்தானே போயிட்டு இருந்திச்சு...)

பொதுவா வடிவேலுவோட ஃபார்முலா ரொம்ப சிம்பிள்...

ஊருக்குள்ள சவடால் விடுற டுபாக்கூர் பார்ட்டியோ அல்லது எல்லா களவாணித்தனமும் பண்ணி மாட்டிகிற ஆளோ... அதிகபட்சம் இது ரெண்டுல ஒண்ணு தான்.. ஆனா சந்திரமுகி, வின்னர், கிரி, ரெண்டு, எல்லாம் அவன் செயல், போக்கிரி, தலைநகரம், மருதமலைன்னு படத்துக்கு படம் பட்டைய கெளப்புன ஃபார்முலா...

இப்படி ஹைவேல போயிட்டிருந்த வண்டி, சடப்புனு ரூட்டு மாறி கொடசாஞ்ச சம்பவம் வடிவேலுவுக்கு மட்டுமில்ல தமிழ்நாட்டு சினிமா ரசிகனுக்கும் செம அடி...

அப்புறம் என்ன... கொடசாஞ்ச வண்டி நேரா இன்னொரு தெருவுல இருக்குற சந்துக்கு போச்சு.. அங்க "சந்தானம், சிங்கம்புலி, பவர் ஸ்டார், சாம் ஆண்டர்சன், பிரேம்ஜின்னு... ஒரு பதினோரு பேரு... மூணு வருஷம் மூச்சு தெணற தெணற அடிச்சாங்யம்மா... தமிழனும் அடிச்சுட்டு போங்கடான்னு விட்டுட்டான்...

அதுக்கு முன்னடி, ஓமகுச்சி, தயிர்வடை தேசிகன் மாதிரி பலவீனமா இருக்கிற காமெடி நடிகர பாத்து தமிழன் சிரிச்ச காலம் மாறி, நடிப்பே ரொம்ப பலவீனமா இருக்கிற "பிரேம்ஜி, சாம் ஆண்டர்சன், பவர் ஸ்டார்" மாதிரி ஆளுங்களையெல்லாம் நடிகனா பாத்து சிரிக்க வேண்டிய நெலம (புள்ளப் பூச்சிக்கெல்லாம் கொடுக்கு மொளைக்கும்னு நான் என்ன கனவாடா கண்டேன்...ஹய்யோ...)

ஏற்கனவே "உங்க ஆயா ரெயின்கோட்டு போட்டுகிட்டா குளிப்பா?"ன்னு பத்திரிக்கையாளர பேசப்போயி, "பத்மஸ்ரீ"ய பறிமுதல் பண்ணுங்கடான்னு எவனோ கோக்குமாக்கா கொளுத்திப் போட, அது பரபரப்பா பத்திக்க, Mute ல போட்ட‌ Music Channel மாதிரி விவேக் இருந்ததும், போதாததுக்கு வடிவேலு வாயக்குடுத்து வகையா மாட்டுனதும் சேர்ந்து மூணு வருஷத்துல தமிழ்நாட்டு ரசிகனோட நகைச்சுவை உணர்வ மகாமட்டமான நெலமைக்கு கொண்டுபோச்சு...

சரி அதுகெடக்கட்டும் வடிவேலு கருப்பு நேருவா?? இல்ல கருப்பு நாகேஷா?? அதுக்கு வருவோம்.. என்னக் கேட்டா ரெண்டுமே இல்ல வடிவேலு ஒரு கருப்பு சந்திரபாபு... (யேய்.. இதுல இவன் வேறயா?? புதுசா இருக்கு...)

ச‌ந்திர‌பாபு, ப‌ல‌ திற‌மைக‌ளின் உறைவிட‌ம்..ரொம்ப‌ ந‌ல்லா ஆடுவாரு, ரொம்ப‌ ரொம்ப ந‌ல்லா பாடுவாரு.. அது ம‌ட்டுமில்லாம‌ ஒரு மிக‌ச்சிற‌ந்த‌ ந‌டிக‌ர்... வடிவேலுவும் அப்படித்தான்.. நல்லா இல்லாட்டாலும் ஓரளவுக்கு பாடுவாரு, பின்னழக தூக்கி தூக்கி ஆடுவாரு.. நல்லா நடிப்பாரு (இதான் நீ சொல்ல‌ வ‌ந்த‌ லாஜிக்கா மூதேவின்னு நீங்க‌ காறித்துப்ப‌ ரெடியாகிற‌து தெரியுது... வெயிட்.. வெயிட்.. வெயிட்)

ஒருமுறை சந்திரபாபு ஃபுல்லா சரக்கடிச்சிட்டு, ஒரு பத்திரிக்கைக்கு பேட்டி கொடுத்தாரு.

மூணே கேள்வி தான்.... முடிஞ்சது சோலி...

ஜெமினி கணேசன் பத்தி என்ன நினைக்கிறிங்க?

அவன் என்னோட ஆதி கால நண்பன். திருவல்லிகேணியில குப்பு முத்து முதலி தெருவில ஒரு மாடியில நான் குடியிருந்தேன். அப்பா அவன் ‘தாய் உள்ளம்’ படத்துல நடிச்சி கிட்டிருந்தான்.

அப்போ அவனுக்கு நான் காமெடி எப்படி பண்ணனும், பேத்தாஸ்னா எப்படி பண்ணனும், லவ் சீன எப்படி பண்ணனும்னு நடிச்சி காட்டினேன்.

அடே அம்பி, இத்தனை வருஷம் ஆச்சேடா, இன்னும் நடிப்புல எந்த முன் னேற்றத்தையும் காணுமேடா. நீ போன ஜென்மத்துல வட்டி கடை வச்சிருந்திருப்படா, படுபாவி.

சிவாஜி கணேசன் பத்தி உங்க அபிப்ராயம் என்ன?

அவர் நல்ல நடிகர். பட், அவரை சுத்தி காக்கா கூட்டம் ஜாஸ்தி இருக்கு. அந்த ஜால்ரா கூட்டம் போயிடிச்சின்னா அவர் தேறுவார்.

MGR பத்தி உங்க அபிப்ராயம் என்ன?

அவர் கோடம்பாக்கத்துல ஒரு ஆஸ்பத்திரி கட்டுறதா கேள்விப் பட்டேன். பேசாம கம்பவுண்டரா போகலாம்.

இதுக்க‌ப்புற‌மும் சொல்ல‌ணுமா என்ன‌ ந‌ட‌ந்திருக்கும்னு.... (வ‌ட‌க்குப‌ட்டி ராம‌சாமிக்கு குடுத்த‌ ப‌ண‌ம் ஊ.. ஊ...ஊ... தான்).

ச‌ர‌க்க‌ போட்டுட்டு எம்.ஜி.ஆரை க‌லாய்ச்சு ச‌ங்கு ஊதிக்கிட்ட‌வ‌ரு ச‌ந்திர‌பாபு.
ச‌ர‌க்கு போட்டாருன்னு க‌ருப்பு எம்.ஜி.ஆரை க‌லாய்ச்சு ச‌ங்கு ஊதிக்கிட்ட‌வ‌ரு வ‌டிவேலு...


அதுனால தான் சொல்றேன்...
 
"அன்புத் தாய்மார்க‌ளே... அருமைப் பெரியோர்க‌ளே.. இனிய‌ குழ‌ந்தைக‌ளே... வ‌டிவேலு க‌ருப்பு ச‌ந்திர‌பாபு... க‌ருப்பு ச‌ந்திர‌பாபு...க‌ருப்பு ச‌ந்திர‌பாபு...!!!


 (சொல்ட்டார்ப்பா....ராஜா.. நீ சொன்ன‌ வார்த்தைய‌ த‌ஞ்சாவூர் க‌ல்வெட்டுல‌ வெட்டிவ‌ச்சுட்டு அது ப‌க்க‌த்துல‌யே உக்காந்துக்க‌..உன‌க்கு பின்னாடி வ‌ர்ர‌ ச‌ந்த‌திக‌ள், அத‌ ப‌டிச்சு தெளிவா நட‌ந்துக்குக்குவாங்க‌...)

Thursday, June 5, 2014

அந்தக் கொழந்தையேயேயேயேயே.... நீங்க தான் சார்ர்ர்ர்ர்ர்ர்!!!!!!!!!!

கதை கேக்கறதுன்னா சின்னப்புள்ளைல இருந்தே நம்ம எல்லாருக்கும் புடிச்ச விஷயம்... அதுனால தான் போர்பந்தர்ல இருந்து போயஸ் கார்டன் வரைக்கும் குட்டிக் கதைக்கு தனி மவுசு...

கத கேக்கறது தான் ஜாலியே தவிர கத சொல்றது இருக்கே.. யப்பா அது பெரிய கொடுமை... அதுலயும் சின்னப் பசங்களுக்கு கத சொல்றது இருக்கே அது உலகமகா டார்ச்சர்...

துபாய் கிரவுண்டயே மூத்தர சந்தா நெனச்சுகிட்டு, மூச்சு தெணற தெணற அடிச்சு அஸ்வின அழவச்ச மேக்ஸ்வெல் மாதிரி... கேப்பே விடாம கேள்வி மேல கேள்வி கேட்டு நம்மள கேஜ்ரிவால் ஆக்கி, கால்கிலோ கரியையும் பூசிடுவாங்ய.. இல்லன்னா  "இதுல எப்டிண்ணே எரியும்..... போங்கண்ணே..."னு பெட்ரொமாக்ஸ் செந்தில் மாதிரி ஒரே கேள்வில நம்மள‌ Fuse போக வச்சிருவாங்ய...

மொத்தத்துல நமக்கு செய்கூலி இல்ல... ஆனா 'சேதாரம்' உண்டு...

நம்ம Friend ஒருத்தர் போன வாரம் ஒரு forward message அனுப்பி இருந்தாரு...



இதே மாதிரி ஒரு experience எனக்கும் நடந்துச்சு... தெரியாத்தனமா ஒரு சின்னப்பயலுக்கு கத சொல்லப் போயி நான்பட்ட பாடு இருக்கே... அவனுக்கு நான் சொன்ன கத இதாங்க...

ஒரு காட்டுல ஒரு சிங்கம் இருந்துச்சாம்.. அது அந்தக் காட்டுக்கே தலைவன்.. அது ரொம்ப நல்ல சிங்கமாம்.. அதுக்கு ஒரு குட்டிப் பையன்... அந்த ராஜா சிங்கத்துக்கு ஒரு தம்பி... அது ரொம்ப கெட்ட் சிங்கம்.. எப்புடியாச்சும் அண்ணன போட்டுத்தள்ளிட்டு தான் ராஜா ஆகிடணும்னு அதுக்கு ஒரு எண்ணம்... நெனச்ச மாதிரியே சூழ்ச்சி பண்ணி அண்ணன் சிங்கத்த கொன்னுட்டு தான் ராஜா ஆகிடுச்சாம்... அந்த குட்டி சிங்கத்த காட்டவிட்டே வெரட்டிடுச்சாம்... குட்டிசிங்கம் வளர்ந்து பெரியாளாகி தான் Friends கூட சேர்ந்து காட்டுக்கு திரும்பிவந்து தான் சித்தப்பாவ பழிவாங்கி தானே மறுபடி ராஜா ஆகிடுச்சாம்... இதான் கத...

சொல்லி முடிச்சதும் மேலேருந்து கீழ வரைக்கும் பாத்துட்டு... "இதான் சிங்கம் கதயா ? " அப்டின்னான்...  எங்க சிங்கம் கதைல அனுஷ்காவே வரலன்னு கேப்பானோன்னு நமக்கு வந்த பயத்த வெளிய காட்டிக்காம... "ஏன்டா? அப்டின்னேன்..

ஆனா அவன் நான் கொஞ்சம் கூட எதிர்பாக்காத ஒரு குண்ட தூக்கி போட்டான்... "சிங்கம் கத சொல்றேன்னு சொல்லிட்டு படையப்பா கத சொன்னா கேள்வி கேக்காம என்ன செய்வாங்க...?"

"டேய்.. என்னடா சொல்ற...?"

" ஆமா.. சிவாஜி..  சிவாஜின்னு ஒரு சிங்கமாம்.. அது ஊருக்கே தலைவனாம்... அதுக்கு மணிவண்ணன்னு ஒரு தம்பி சிங்கமாம்.. அது ரொம்ப கெட்ட சிங்கமாம்.. சிவாஜி சிங்கத்துக்கு ரஜினி.. ரஜினின்னு ஒரு குட்டி சிங்கமாம்... மணிவண்ணன் சூழ்ச்சி பன்னி சிவாஜிய கொன்ன்னுட்டு ரஜினிய வீட்ட விட்டு வெரட்டிட்டாராம்... வீட்ட விட்டு போன ரஜினி சிங்கம் ரமேஷ் கண்ணா, செந்தில்னு தான் Friends கூட திரும்பி வந்து சித்தப்பாவ பழிவாங்கி வீட்டுக்கே ராஜா ஆயிட்டாராம்... இந்த கத எனக்கு தெரியாதா??... படையப்பா படத்த சிங்கம் கதன்னு ரீல் விடாத...."

இதுக்கு மேல ஒரு அடி விழுந்துச்சு.... சேகர் செத்துருவான்னு அந்த சின்னப்பயகிட்ட இருந்து எஸ்கேப் ஆனேன்...

உண்மையில நான் அவனுக்கு சொன்னது 1994 ல வெளிவந்து சக்கபோடுபோட்டு, 4 Golden Globe award, Grammy Award for best Music னு விருதுகளையும் அள்ளிக் குவிச்ச,  "The Lion King", Hollywood Animation படத்தோட கதை... இதெப்படி நம்மூர்லன்னு பயங்கர யோசனை...



"ஒரு (சிங்கிளா வர்ர) சிங்கமே... சிங்கம் கதைய... காப்பியடிக்கிரதே... ஆச்சர்யக்குறி!!!!!


ஓ... அதுனால தான் அதுக்கு முந்தின படத்துலயே "சிங்கம் ஒன்று புறப்பட்டதே....."ன்னு சிம்பாலிக்கா பாட்டு வச்சியா தலைவா.....கலக்கிட்ட தலைவா ...கலக்கிட்ட தலைவா ... " அப்டின்னு மண்டைக்குள்ள ஒரு கொறளி சத்தம்... அப்ப தான் எனக்கு இன்னொரு பொறி தட்டுச்சு...

"தலைவா" அப்டின்னாலே  (பல படத்து ) கலக்கல் தானே... அப்டின்னு யோசிக்க ஆரம்பிச்சு......

சத்யராஜ், சத்யராஜ்னு ஒரு ஊர்ல ஒரு சிங்கமாம்... அது நல்ல சிங்கமாம்... அது ஒரு கூட்டத்துக்கே தலைவனாம்... அதுக்கு விஜய் விஜய்னு ஒரு குட்டி சிங்கமாம்..  பெரிய சிங்கத்துக்கு பொன்வண்ணன்.. பொன்வண்ணன்னு ஒரு தம்பி சிங்கமாம்... தம்பி சிங்கம் அண்ணன் சிங்கத்த கொன்னுட்டு அந்த எடத்துக்கு தான் வந்துருச்சாம்... அப்போ ஆஸ்திரேலியா ஓடிப்போன குட்டி சிங்கம் தான் Friends கூட திரும்பி வந்து சித்தப்பாவ பழிவாங்கி கூட்டத்துக்கே தலைவன் ஆகிடுச்சாம்...

ரெண்டு பேங்கு.. ரெண்டு ஏஜெண்ட்டு... மாதிரி, ரெண்டு சிங்கம்... ரெண்டு சினிமா... (ஸ்ஸ்ஸ்ஸ் அப்ப்பா இப்பவே கண்ணக்கட்டுதே... கார்ட்டூன் படத்தையெல்லாமா காவு வாங்குவீங்க..)...

அதுசரி, "I am sam" படத்த ஸ்வெட்டரோட சேத்து சுட்டவங்யளாச்சே நாங்க... சிங்கம் கதைய சுடமாட்டோமா...

இப்படி ஒரு கதைய பலபேர் எடுத்தது ஒருபக்கம் இருக்கும்போது, பல கதைய ஒருத்தர் எடுத்துப்புட்டாருன்னு ஒரு மேட்டரு...

ரெண்டு வாரத்துக்கு முந்தின ஒரு பத்திரிக்கைல, கதாசிரியர் கலைஞானம், தேவர் மகன் படத்தோட கதை என்னோடது தான், ஒரு சமயம் கமல்கிட்ட ஒரு கதையோட Outline சொன்னேன்.. அத அடிப்படையா வச்சுகிட்டு தேவர் மகன் படத்த கமல் எடுத்தாருன்னு ஒரு செய்திய உட்ருக்காரு...

ஏற்கனவே இந்த கதை என்னோடதுன்னு இசையமைப்பாளர் கங்கை அமரன் வேற சொல்லிருக்காரு... இது கமல் கதையா? கலைஞானம் கதையா? கங்கை அமரன் கதையா?

சரி இத கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணுவோம்...

கமல் வேணும்னா கடவுள் பாதி... மிருகம் பாதி கலந்து செஞ்ச கலவையா இருக்கலாம்... ஆனா அவர் படங்கள் "Crazy" கொஞ்சம்...  "Angrezi" கொஞ்சம் கலந்து செஞ்ச கலவை அப்டிங்கறது ஒரு பொதுவான விமர்சனம்...


உதாரணத்துக்கு....

The Witness.. படத்துல இருந்து "சூரசம்ஹாரம்"
God Father...  படத்துல இருந்து "நாயகன்"
She devil..  படத்துல இருந்து "சதி லீலாவதி"
9 to 5... படத்துல இருந்து "மகளிர் மட்டும்"
Bachelor.. படத்துல இருந்து "பம்மல்.கே. சம்பந்தம்"
Planes, Trains and Automobiles..  படத்துல இருந்து "அன்பே சிவம்"
Very bad things...  படத்துல இருந்து "பஞ்ச தந்திரம்"
Mrs.Doubt fire... படத்துல இருந்து "அவ்வை சண்முகி"
What about Bob?... படத்துல இருந்து "தெனாலி"

இப்படி  கமல் ஆங்கிலத்துல இருந்து "கட்டிப்புடி வைத்தியம்" பண்ணுன.. (I mean "ஆங்கில படத்தின் தழுவல்" அப்டிங்கிறத கமல் பாணில சொன்னேம்பா) ஏகப்பட்ட உதாரணங்கள் இணையத்துல கொட்டிக் கெடக்கு... பின்ன... "உலக"நாயகன்னா சும்மாவா??...

ஆனா ஒரு விஷயம் ரொம்ப முக்கியமானது... எட்டணா தேங்கா முட்டாய அப்படியே எடுத்து Eclairs Cover சுத்தி விக்கிற ஆசாமி இல்ல கமல்..  மூலக்கதைல‌, கம்யூனிசம், பெரியாரிசம், தமிழிசம், செக்யூலரிசம், ஃபெமினிசம் குறிப்பா கமலிசம் இப்படி ஊருல உள்ள எல்லா இசத்தையும் ரெவ்வெண்டு கரண்டி எடுத்து கலந்து, மேற்கொண்டு காமெடிய சதும்ப ஊத்திக் கலக்கி, அன்னைக்கி தேதிக்கி ராஜாவோ, ரகுமானோ இல்ல யார் பாப்புலரோ அந்த ஆள் மியூசிக்குல நச்சுனு 5 பாட்ட வாங்கி அதையும் போட்டு, ஜாதி சங்க தலையீடு, மதத் தலைவர்கள் பிரச்சனைன்னு தாளிச்சு இந்த மொத்த இசத்தின் ரசத்த தான் கமல் படமா வெளில ஊத்தி விடுவாரு...

எந்தக் கதையும், கதாசிரியரும், இயக்குனரும் கமல் படம்னு ஒண்ண‌ உருவாக்க நெரைய Compromise பண்ணியாகனும்... சும்மா ஒரு பேச்சுக்கு சொல்லணும்னா... "கதையில ஹீரோயின் தாலிபான் தீவிரவாதியோட பொண்ணா இருந்தாலும், அவளுக்கு "இந்து" னு மட்டுமே பேர்வைக்கிற சுந்தர்.சி கூட அன்பே சிவத்துக்காக பல படிகள் இறங்கி வரவேண்டி இருந்தது... இதோட End Result என்னன்னா, கமல் நடிக்கிற எந்தக் கதையும் திரையில பாக்கும் போது கமல் படமா மட்டுமே தெரியும்...

இத ஆத்து ஆத்துன்னு ஆத்திட்டு இருக்கும் போதே எனக்கு மறுபடி பொறி தட்டுச்சு...

சிவாஜி.. சிவாஜின்னு ஒரு சிங்கமாம்.. அது ஊருக்கே தலைவனாம்... அது ரொம்ப நல்ல சிங்கமாம்.. அதுக்கு கமல்.. கமல்னு ஒரு குட்டி சிங்கமாம்... சிவாஜி சிங்கத்துக்கு காகா ராதாகிருஷ்ணன்னு ஒரு தம்பி சிங்கமாம்... அவங்க குடும்பமே ரொம்ப மோசமாம்... குட்டி சிங்கம் உலக லெவல் சிங்கம் அப்டிங்கிறதுனால, சித்தப்பா கூட மோதாம அவுக பையன் கூட மோதி ஜெயிக்குது...

நடுவுல மானே தேனே பொன்மானே மாதிரி, "நான் கள்ளனில்ல மறவன்.."னு வசனம் பேசுறது, கோயில்ல பூட்ட ஒடச்சு வச்சி பகுத்து அறியிறது, கவுதமியோட ஊர சுத்துறது... களத்துல கம்பு சுத்துறது... ரேவதி கழுத்துல பூவ சுத்துறது..... மொத்ததுல எனக்கு தலையே சுத்துறது.... ஆஆஆஆஅ அபிராமி அபிராமி (யோவ்... அது விருமாண்டி பட கதாநாயகிய்யானு நீங்க திட்டுறது கேக்குது... இருந்தாலும் இத சொல்லலைன்னா டயலாக் முடியாதுல்ல...)

இப்படியெல்லாம் போட்டுக் கலக்கிட்டா நம்ம கார்ட்டூன் கத கூட கமல் கதையாகிடும்...

ஆக... மூணு பேங்கு... மூணு ஏஜென்ட்டு...      மூணு சிங்கம்.... மூணு சினிமா.... (ஸ்ஸ்ஸ்ஸ் ஓவரா கண்ணக் கட்டுதே....)

இதே நெலம நீடிச்சா ஹீரோவுக்கு கதசொல்ல வர்ர கதாசிரியர் இப்பிடித்தான் கதய சொல்லி ஆகணும்...

ஒரு காட்டுல ஒரு சிங்கம் சார்... அந்த சிங்கத்துக்கு ஒரு கொழந்த பொறக்குது...... அந்தக் கொழந்தையேயேயேயேயே.... நீங்க தான் சார்ர்ர்ர்ர்ர்ர்!!!!!!!!!!

Monday, September 30, 2013

லியோ கப்பாசா!!!!


பொதுவாவே தமிழ் சினிமா இசை வரலாறு பத்தி எந்த Critic கிட்டகேட்டாலும்..."ஜி.ராமநாதன்...எம்.எஸ்.வி..இளையராஜா-ஏ.ஆர்.ரகுமான்..."இப்படி நாலே வார்த்தைல சொல்லிடுவாங்க... ஏன்னு கேட்டா இவங்க தான் 60, 70, 80, 90 கள்ள தமிழ் சினிமாவை ஆண்டவர்கள் அப்டின்னு பதில் வரும்...

மொதல் மூணு எப்படி இருந்தாலும் 90கள் விஷயத்தில‌ மட்டும் இந்த பொதுவான கருத்து உண்மையில்ல.. அதான் நிஜமும் கூட...

சில பேரு ஆமாமா 90ல கூட இளையராஜா கலக்கிட்டு இருந்தாருன்னு சண்டைக்கு வருவாங்க...

ஆனா 90களில் தமிழ் சினிமா இசையை ஆண்டது... தேவா தான்....

ரொம்ப இன்டெரெஸ்டிங்கான விஷயம் என்னன்னா... அந்தக்காலத்துல இளையராஜாவுக்காக மட்டுமே ஓடுன ராமராஜன் படத்துல தான் தேவா அறிமுகம் ஆனாரு (மனசுக்கேத்த மகராசா)..  ரொம்ப நாள் வரைக்கும் அதெல்லாம் இளையராஜா போட்ட பாட்டுன்னு நெனச்சிட்டு இருந்தேன்...

ஆரம்பத்துல மணிரத்னம், ஷங்கர் மாதிரி காஸ்ட்லி இயக்குநர்களின் ஃபேவரைட்டா ரகுமானும், வருஷத்துக்கு 25 படம்னு வகைதொகையில்லாம அடிச்சு தள்ளிகிட்டு இளையராஜா இருந்ததும் தேவாவை "Budget Director's Ilaiyaraja"ன்னு அடையாளம் காட்டிச்சு...

அதக் கரெக்டா புடிச்சிகிட்டு தேவாவும் இளையராஜா பாணியிலயே ஜெராக்ஸ் எடுத்து தள்ளுனாரு.. உதாரணத்துக்கு கொஞ்சூண்டு....

  • ஆடியில சேதி சொல்லி - என் ஆசை மச்சான்
  • கூவுற குயிலு சேவல பாத்து - சோலையம்மா
  • நில்லடி என்றது உள் மனது - காலமெல்லாம் காத்திருப்பேன்
  • செம்பருத்தி செம்பருத்தி - வசந்த காலப் பறவை
  • ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா - கட்டபொம்மன்
  • சின்னப்பொண்ணு தான் வெக்கப்படுது - வைகாசி பொறந்தாச்சு
  • ஒத்தையடிப் பாதையில - ஆத்தா உன் கோயிலிலே
இதுபோக நம்ம "யங் தளபதி"யோட அப்பா S.A.C யோட படங்களுக்கெல்லாம் தேவா தான் அன்னிக்கு தேதிக்கு ஆஸ்தான இசையமைப்பாளர்..

ரசிகன், தேவா, செல்வா, விஷ்ணு, செந்தூரப்பாண்டினு (நல்லகாலம் விக்ரமன் பூவே உனக்காக எடுத்து தமிழ்நாட்டக் காப்பாத்துனாரு)

இந்த சமயத்தில் தான் மெல்லிசை மன்னரால் தேவா "தேனிசைத் தென்றல்"னு பாராட்டப் பட்டதெல்லாம்...

தேவா சார் கேரியர மூணு அஜித் படத்த வச்சு சொல்லிரலாம்...

ஆசை

1995ல வந்த இந்தப்படம் தான் "இளையராஜாவோட Copy Cat"  அப்டிங்கிற ஷெல்ல ஒடச்சு "தேவா டைப் மியூசிக்" அப்டின்னு ஒரு புதிய அடையாளத்த வாங்கிக் கொடுத்துச்சு... அதுமட்டுமில்லாம அதுவரை எஸ்.பி.பி, மனோ, ஜானகி, சுவர்ணலதான்னு இருந்த டிரென்ட மாத்தி ஹரிஹரன், உன்னிகிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம்னு ஒரு புது கூட்டணிய ஆரம்பிச்சு வச்ச படம்னும் சொல்லலாம்...

இந்த மூணு பேருமே ஏ.ஆர். ரகுமான் இசையில் அறிமுகம் ஆகியிருந்தாலும், இவங்க மூணு பேரையும்  தேவா அளவுக்கு படத்துக்கு ரெண்டு பாட்டு குடுத்து கதறக் கதற Parade எடுத்த ஆளு யாரும் இருக்கமாட்டாங்க...

பின்னாட்களில் வந்த வாலி, குஷி, ஆஹா, கண்ணெதிரே தோன்றினாள், காலமெல்லாம் காதல் வாழ்க, நேருக்கு நேர், அப்பு மாதிரி படப் பாடல்களை கண்ணமூடிகிட்டு கேட்டாலும் இது தேவா மியூசிக்குனு சொல்லவச்ச அந்த டிரெண்டுக்கு அஸ்திவாரம் இந்தப்படம்....

வான்மதி :

தனக்கு பெரிய பிரேக் கெடச்ச அஜித் காம்பினேஷன்ல அகத்தியன் கூட "மதுமதி"ன்னு ஒரு படம் பண்ணிட்டு 1996ல‌அதே ஜோடி மீண்டும் "வான்மதி" படத்துல சேந்துச்சு...

"லியோ கப்பாசா"

கேக்கும்போது என்னன்னே அர்த்தம்புரியாம ஏதோ ஒரு ரஷ்ய விஞ்ஞானியோட பேரு மாதிரி இருந்தாலும் இந்த்ப் பாட்டு அன்னிக்கு தேவா சார் கேரியர்லயும், தமிழ் சினிமா இசையிலும் ஒரு பெரிய ஷிஃப்ட கொண்டு வந்துச்சு...

எனக்கு தெரிஞ்சு தமிழ்சினிமாவின் முதல் கானா பாட்டு (அல்லது குறைந்தபட்சம் முதல் சூப்பர்ஹிட் கானா பாட்டு ) இதுவாகத்தான் இருக்கும்...

இந்தப் பாட்டு குடுத்த பிரேக்னால ஆளாளுக்கு அடிச்சுப் புடிச்சு தேவா சார் கிட்ட கானா பாட்டு வாங்க ஆரம்பிச்சாங்க..

அடுத்து அடுத்து வந்த கானா பாடல்கள் அன்னிக்கு காலேஜ் மாணவர்களின் தேசிய கீதமாவே மாற ஆரம்பிச்சது...

வடுகபட்டி, ஆண்டிபட்டி,குச்சனூருன்னு அதுவரைக்கும் கேட்ட ரசிகனுக்கு "ஆனை கவுனி, அயனாவரம், பார்டர் தோட்டம், காசிமேடுன்னு தேவாவோட கானா பாடல்கள் அறிமுகப் படுத்துன வார்ததைகள் எல்லாம் புதுசா இருந்தது...

  • கவலைப் படாதே சகோதரா - காதல் கோட்டை
  • அண்ணா நகர் ஆண்டாளு - காலமெல்லாம் காதல் வாழ்க‌
  • குன்றத்துல கோயில கட்டி - நேசம்
  • ஊத்திகினு கடிச்சுக்கவா - நினைவிருக்கும் வரை
  • கந்தன் இருக்கும் இடம் - காதலே நிம்மதி
  • குலுக்கி வச்ச கொக்ககோலா - உயிரிலே கலந்தது
  • திருப்பதி ஏழுமல வெங்கடேசா - நினைவிருக்கும் வரை
கிட்டத்தட்ட ஒரு 25 படமாவது இந்த மாதிரி பாப்புலர் கானா பாட்டு வந்த படம் Easy யா List Out பண்ணிரலாம்...

டாப் கியர போட்டு தூக்கு தூக்குனு தூக்க ஆரம்பிச்சாரு தேவா...

காதல் கோட்டை :

அதே 1996ல அதே அஜித்-அகத்தியன்-தேவா-சிவசக்தி பாண்டியன் கூட்டணியல வந்து இந்திய சினிமாவுலயே பெரிய ஹிட் அடிச்ச  காதல் கோட்டை தேவாவ எங்கேயோ கொண்டு போயிருச்சு..

அப்டியே ரெண்டு காலையும் பூஷ் பண்ணி... கிருட்டு கிருட்டு கிருட்டுனு போயிகிட்டெ இருந்தாரு தேவா...

ரஜினிக்கு அருணாசலம், அண்ணாமலை, பாட்ஷா... கமலுக்கு அவ்வை ஷண்முகி, PKS , பஞ்ச தந்திரம்..... விஜய்க்கும் அஜித்துக்கும் அன்னிக்கு தேதில வந்த 90% படங்கள்... இது போக பிரசாந்த்துக்கு கல்லூரி வாசல், கண்ணெதிரே தோன்றினாள், அப்பு... சரத்குமாருக்கு நட்புக்காக, பாட்டாளி, சிம்மராசி... இப்படி Top to Bottom,  Tamil Cinema Industryல‌ யார் நடிச்சு படம் வந்தாலும் இசை தேவா தான்னு ஒரு ட்ரெண்டு வர்ர அளவுக்கு அசுர வளர்ச்சி அடஞ்சாரு தேவா.. 80கள்ள இளையராஜா இல்லாம படல் இல்லனு ஒரு டிரெண்ட் இருந்துச்சே அதுக்கு கொஞ்சமும் குறையாத வளர்ச்சி...

இதுல ரெண்டு பேருக்கும் ஒரு சின்ன வித்தியாசம் உண்டு.. தான் உச்சத்துல இருந்தபோது தனக்கு நிகரா யாருமே வளரமுடியாத அளவுக்கு விஸ்வரூபம் எடுத்தது இளையராஜாவின் சாதனை.. சொல்லப்போனா முறியடிக்க ரொம்பவே கஷ்டமான சாதனை தான்..

ஆனா விக்ரமனுக்கு எஸ்.ஏ.ராஜ்குமார்...... , சரணுக்கு பரத்வாஜ்..... , மணிரத்னம், ஷங்கர், ராஜீவ் மேனனனுக்கு ரகுமான்...., பாசில், பாலுமகேந்திரா, ஆர்.வி.உதயகுமார் படங்களுக்கு இளையராஜா... இது போக உள்ளத்தை அள்ளித்தா, நாட்டாமை, கோகுலம்னு ஆடிக்கொண்ணு அம்மாவாசைக்கு ஒண்ணு ஹிட் குடுத்த சிற்பி இப்படி கடுமையான போட்டி இருந்த காலத்திலும் "He was able to make it possible"... அதனால தான் மொதல்லயே சொன்னேன் 90களில் தமிழ் சினிமா இசையை ஆண்டது தேவா தான் அப்டினு...

இதற்கான காரணங்கள் என்னன்னு கொஞ்சம் பாப்போம்....

80 கள்ல வளச்சு வளச்சு எடுத்த , சின்ன கவுண்டர், சின்ன ஜமீன், பெரிய மாப்பிள்ளை, பாட்டுக்காரன், மாட்டுக்காரன், பண்ணக்காரன், காவக்காரன் இது மாதிரியான படங்களும் அதில் இருந்த ஒரே மாதிரியான இசைவடிவமும் ரசிகனுக்கு சலிச்சு போனது...

அடுத்து வந்த College Era படங்களுக்கு (அஜித், விஜய், பிரசாந்த், 40 வயசானாலும் அசராமல் காலேஜுக்கு போன முரளி)  இளையராஜாவின் இசை பொருந்தாமல் போனது (இதயம் படம் மட்டும் விதிவிலக்கு)...

லா லா லான்னு ஒரே ஒரு டியூன வச்சுகிட்டு கொஞ்சம் கூட சளைக்காம எல்லா படத்துக்கும் போட்டுக்குடுத்த (ஹிட்டும் அடிச்ச) எஸ், ஏ. ராஜ்குமார்

டெக்னாலஜி வளர்ச்சியும், பெரிய பட்ஜெட் படங்களுமாய் எட்டமுடியாத உயரத்தில் இருந்த ஏ.ஆர்.ரகுமான்...

Folk Music ல‌ Vareity எதிர்பார்த்த  audienceக்கு தேவா, சபேஷ் குரல்களில் "கானா"னு ஒரு புதிய இசை வடிவம் கொடுத்த உற்சாகம்..

ஹரிஹரன், உன்னிகிருஷ்ணன் குரல்கள் விஜய், அஜித் மாதிரி இளம் நாயகர்களுக்கு பொருந்திப் போனது...

எல்லாத்துக்கும் மேல 5 தம்பிகள், கூடவே மகன் ஸ்ரீகாந்த் தேவான்னு 6 பேரோட வேலை செஞ்சதால மியூசிச் ஃபேக்டரி மாதிரி வருஷத்துக்கு 30 படம்னு பண்ணித் தள்ளுனாரு தேவா...

கிட்டத்தட்ட 10-13 வருஷத்துல 400 படங்களுக்கும் அதிகம்னு கணக்கு சொல்லுது விக்கிபீடியா...

Beetles கிட்ட சுட்டது,  LP கிட்ட ஆட்டைய போட்டது,  Back Street Boys ஆல்பத்தோட "Ctrl C - Ctrl V"ன்னு ஆயிரம் விமர்சனம் வந்தாலும், மில்லீனியத்தை ஒட்டி வந்த தேவாவோட பாடல்கள் அவரோட தனித்துவமான பாடல்களா தான் எனக்கு தெரியும்... உதாரணத்துக்கு....

  • அவள் வருவாளா -  நேருக்கு நேர்
  • பூசு மஞ்சள் பூசு மஞ்சள் - கனவே கலையாதே
  • ஒரு மணியடித்தால் உன் நியாபகம் - காலமெல்லாம் காதல் வாழ்க‌
  • கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு - வெற்றிக்கொடி கட்டு
  • மொட்டு ஒன்று மலர்ந்திட நினைக்கும் - குஷி
  • நிலவைக் கொண்டுவா - வாலி
  • கனவே கலையாதே - கண்ணெதிரே தோன்றினாள்
  • கொச்சின் மாடப்புறா - புருஷ லட்ஷணம்
  • கருடா கருடா - நட்புக்காக‌
  • முதன் முதலில் பார்த்தேன் - ஆஹா
  • மனசே மனசே குழப்பமென்ன - நெஞ்சினிலே

சொல்லிட்டே போகலாம்.. அவ்வளவு அருமையான பாடல்கள்...

2000 - 2010 ல இந்த வேகம் "சபேஷ்-முரளி", "ஸ்ரீகாந்த் தேவா" போன்றவர்கள் தனித்தனியா இசையமைக்க ஆரம்பிச்ச பிறகு கொஞ்ச கொஞ்சமா கொறைஞ்சு ஒரு கட்டத்துல நின்னே போச்சுன்னு சொல்லலாம்...

யுவன், ஹாரிஸ் மாதிரியான இசையமைப்பாளர்களின் வருகையும், அடுத்துவந்த ரத்தக்களரி வகை படங்களும், காலமாற்றம் ரசிகனுக்கு அடுத்த டிரெண்டை அறிமுகம் செய்துவைத்ததும் ஒரு முக்கிய காரணம்...

எது எப்படி இருந்தாலும் தமிழ் சினிமா இசையில் தேவாவுக்கென்று ஒரு மிகமுக்கியமான இடம் உண்டு...

அதை ஒதுக்கிவிட்டு தமிழ் சினிமை இசையின் வரலாற்றை சொன்னால் அது முழுமையானது அல்ல என்பதே உண்மை...

தேவா சார்!!!!!!!! You Should come back again and you will!!!!!!! ( மீசக்கார நண்பா..... உனக்கு ரோஷம் அதிகண்டா.......)