Tuesday, June 24, 2014

a A... b B.... c C...

காதுகுத்தோ, கல்யாண வீடோ,  இல்ல சாமிக்கு படையலோ.. இப்படி எந்த பொது நிகழ்ச்சியா இருந்தாலும் சரி,  இந்த மாதிரி ஆட்கள சர்வசாதாரணமா பாக்கலாம்...

வெள்ளக்காரன் காலத்துல ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டராவோ அல்லது தாசில்தாராவோ இருந்து Retire ஆகிட்டு, விடாம  நம்மளத் தேடிவந்து பக்கத்துல உக்காந்துகிட்டு, "In 1947... When i was in poonaa..." அப்டின்னு வெள்ளக்காரன் Government பத்தியோ, இல்ல அந்தக்கால Austin Car பத்தியோ கதறக்கதற ஒரு மணிநேரம் நம்மகிட்ட இங்கிலீஷ்ல போட்டுத்தள்ளுற ஆளுங்க ஊருக்கு ஒருத்தர் கண்டிப்பா உண்டு...




எங்க ஊருல ஒரு பெரியவர் இப்படித்தான் பக்கத்துல இருந்தவர்கிட்ட அந்தக்காலத்தப் பத்தி இங்கிலீஷ்ல போட்டுத்தள்ளிட்டு இருந்தாரு... "So Much Water has flown under the bridge.." அப்டினு அவர் சொல்ல.. அதுக்கு அர்த்தம் புரியாம பக்கத்துல இருந்தவரு, ஏதோ எங்க ஊரு முள்ளியாத்து பாலத்துல தண்ணி தொறந்துவுட்டதா நெனச்சுகிட்டு.. "ஆமாங்க நெரையத் தான் போகுது.. இந்த வருஷம் பருவத்துலயே தெறந்து விட்டுட்டாங்ய.."னு பதிலுக்கு ஒரு பிட்ட போட..அந்தப் பெருசு தெரிச்சு ஓடிட்டாரு.. பக்கத்துல இருந்து பாத்த எனக்கு அந்த வயசுல அர்த்தம் புரியாட்டாலும்.. பிற்காலத்துல அதுக்கு அர்த்தம் தெரிஞ்சு.. பாவம் அந்தப் பெருசு எவ்வளவு நொந்திருப்பாருன்னு நெனச்சு சிரிச்சுகிட்டேன்..

பெருநகரங்கள் அல்லாத சின்ன சின்ன கிராமத்துலேந்து வந்து இன்னைக்கி பெரிய கம்பெனில இந்த இதும்பாங்களே... அதான்யா. இந்த இதும்பாங்களே... அந்த வேல பாக்குற ஆளுங்க எல்லார் வாழ்க்கையிலும் கண்டிப்பா ஆழமான அழுத்தமான நினைவுகள ஏற்படுத்தியிருக்கிற‌ விஷயம் இங்கிலீஷ்....

என்னதான் English Medium ல‌ படிச்சாலும், தாத்தா செத்ததுக்கு கூட நாம "As I am Suffering from fever"னு தான் எழுதுவோம்.. ஏன்னா நமக்கு தெரிஞ்ச English அவ்ளோ தான்.. மூணுவரி poetry ல முப்பது தப்பு பண்ணி, அதுக்காக முட்டியெல்லாம் போட்ட வீரப் பரம்பரை ஆச்சே நம்ம பரம்பரை...

அவ்வளவு ஏன்.. "Union Minister" அப்டிங்கிறதயே "வெங்காயம் மந்திரி"ன்னு தமிழ்ல Translate பண்ற அளவுக்கு நமக்கு ஆங்கில அறிவு அப்போ ரொம்ப அதிகம்..




அதையும் மீறி ஊருக்குள்ள எவனாச்சும் "What is your name?", "How are you?", "Good Morning Meeeeeeesssssss!!!!!!"னு ஒண்ணு ரெண்டு வார்த்தை பேசுனாலும் அவனையும் "பீட்டர் உடுறான்.. சீன் போடுறான்னு சொல்லி நாமளே காலி பண்ணிருவோம்...

சில பேரு காலேஜ் போகுறப்ப தான் புத்திவந்து Spoken English Class எல்லாம் போவாங்ய... அந்த வயசுல நீ போறது English படிக்கிறதுக்காடா??? ரைட்டு..விடு..

காலேஜ் போறவரைக்கும் அப்பிடி இப்பிடி அட்ஜஸ்ட் பண்ணி வண்டிய ஓட்டுனாலும், இன்டெர்வியூன்னு வரும்போது தான் சனியன் சடைபின்ன ஆரம்பிக்கும்...

சும்மாவா சொன்னாப்ல‌ வைரமுத்து "வயித்துக்கும் தொண்டைக்கும் நடுவுல ஒரு உருண்டை உருளுதுன்னு... எங்கயோ இன்டெர்வியூல இங்கிலீஷ் வராம செமையா முழிச்சிருப்பாப்ல போல... கரெக்டா எழுதியிருக்காரு...

'வேலைக்காரன்' ரஜினி மாதிரி, Vijay Hazare called Vinoo Mankad.. and then Vinoo Mankad called Vijay Hazare..."னு செம பிராக்டிஸ் எல்லாம் பண்ணிட்டு நம்மாளு ஒருத்தரு Interview க்கு போனாரு..

ஒரே கேள்வி தான்.. "Alma Mater?" அப்டின்னு..


நம்மாளு காதுல அது "அல்வா மேட்டர்"னு விழுந்திச்சு... "சே.. என்னடா மேட்டர பத்தியெல்லம் கேக்குறாங்ய‌"ன்னு மனசுக்குள்ள திட்டிகிட்டே நம்மாளு முழிக்க.. அத புரிஞ்சுகிட்டு அந்த ஆபீசர் "Schooling..." அப்டின்னு லீட் எடுத்துக் குடுத்ததும்... "புனித அந்தோணியார் நடுநிலை ஸ்கூல் சார்..." அப்டின்னு இங்கிலீஷ்ல கலக்க... ஆபீசர் கொஞ்சம் மெரண்டு தான் போயிட்டாரு.. பிற்காலத்துல இதே ஆளு "St. Antony's" அப்டின்னு படம் காட்டுற அளவுக்கு வளந்தாரு...

 வேலைக்கு சேர்ந்த மொதல் கொஞ்ச நாள் நம்ம மானத்த காப்பாத்துற மூணு Englsh வார்த்தை " Yes Sir, No Sir, Ok Sir.."...

அதுக்கப்புறம், வராத இங்கிலீஷ வம்படியா இழுக்கிறதுக்காக‌ கத்துக்கிற மூணு வார்த்தை " Well... You See... You Know..."

இங்கிலீஷ் நல்லா வந்திருச்சுன்னா அத வச்சுகிட்டு நம்மாளு Aim பண்ற‌ அடுத்த மூணு வார்த்தை என்னன்னு ஒலகத்துக்கே தெரியுமே...

ஆஃபீஸ விட்டுத்தள்ளுங்கப்பா... தனிப்பட்ட விஷயத்துல கூட இங்கிலீஷால நொந்த ஆளுக எவ்வளவு பேரு தெரியுமா... நம்மாளு ஒருத்தருக்கு அவரோட ஃப்ரெண்டு  ஒருநாள் போன் பண்ணி, மச்சான் எனக்கு தெரிஞ்ச ஃப்ரெண்ட் Google ல‌ HR வேல பாக்குறாங்க‌ (Yes.... ஆமா.. That was a Girl..அது ஒரு பொண்ணே தான்..) Introduce பண்ணி வைக்கிறேன்.. நாளைக்கு வந்துடுன்னு சொன்னாரு... நம்மாளும் உடனே.. பயங்கர குஜாலாகி, பர்சனாலிடிய 2 இன்ச் ஏத்தி, கையில எல்லாம் பவுடர் அடிச்சு (கை குலுக்கணும்ல..) கெளம்பிப் போனாரு...

அந்தப் புள்ளையும் வந்துச்சு.... சந்தோஷத்துலயும், பதட்டத்துலயும் நாக்கு வரண்டு,  "Please to meet You"ன்னு இவர் சொல்றதுக்காக வச்சிருந்த ஒரே டயலாக்க மறந்து போயி, கைய குலுக்கிகிட்டே "Wish you a Happy Birthday..."னு சொல்ல‌.. அதுக்கப்புறம் என்ன.. ஊரே சிரிச்சிச்சு...

இங்கிலீஷ் சாமான்யன மட்டுமில்ல பெரிய பெரிய்ய ஆளுங்கள கூட ஆட்டி வச்சிருக்கு... தந்தை பெரியார் ஒரு தடவை அண்ணா அவர்கள கூப்பிட்டு,  "சொல்லியாச்சு" அப்டினு தந்தி குடுன்னாரு... அண்ணாவும் உடனே "Have been told" அப்டின்னு தந்தி குடுத்தாரு.. அதுக்கு பெரியார் சொன்னாராம்... "ஏம்பா Have been told அப்டின்னு குடுத்தா மூணு வார்த்தை வருதே அதுக்கு பதிலா "Tolded" அப்டின்னு குடுத்தா ஒரே வார்த்தைல முடிஞ்சிருமே"ன்னு..

"English is just a language..." அப்டின்னு சொல்ற ஆளுங்க கொஞ்சம் நிதானமா யோசிக்கணும்...

"We are calling from TK TK TK Bank for Free Credit Cards",அப்டின்னோ "We are calling from Country Club, you have got free gifts sir.." அப்டின்னோ மொபைல்ல நம்ம விடாம வெரட்டுற கருப்புக‌ளுக்கு இங்கிலீஷ் அப்டின்றது "பிழைப்பு"..

Dan Brown,  Sydney Sheldon, Jeffrey Archer, Paulo Coelho ...இந்த நாலே நாலு பேர மட்டும் தெரிஞ்சு வச்சுகிட்டு, நாசா விஞ்ஞானி லெவலுக்கு பில்டப் குடுக்குற ஆளுங்களுக்கு இங்கிலீஷ் அப்டிங்கிறது "விளம்பரம்".. (என்னடா விளம்பரம்.. நீ வாங்குற பத்து அஞ்சு பிச்சைக்கு இதெல்லாம் தேவ தானா??)..

இதுல இன்னும் பெரிய கொடுமை உண்டு.. சில பேர் தெரியலன்னு சொன்னா கூட விடமாட்டான்.. "How about R.K.Narayan?.. Indian Author only..." அப்டிம்பான்..

(டேய்... டேய்... எனக்கு மீடியா சொல்லிக்குடுத்ததெல்லாம் ராம.நாராயணனும், காழியூர்.நாராயாணனும் தான்..எனக்கு R.K.Narayan எல்லாம் தெரியாதுடா... என்ன உடுங்கடா... நாராயணா இந்த கொசுத்தொல்ல தாங்கமுடியலடா...)

பழைய இங்கிலீஷ் நாவலோட அட்டையக் கழட்டி "அஞ்சு புள்ளி கோலம்" புத்தகத்துக்கு மாட்டிவிட்டு வச்சிருக்கிற புள்ளைகள பாத்து பெரிய படிப்பு படிச்ச புள்ள போலருக்குன்னு நம்புற ஊரு தானே நம்ம ஊரு...

அவ்வளவு ஏன்.. இப்பக்கூட.. ஆபிஸ்ல கூட வேலபாக்குற பொண்ணுங்க எதாச்சும் "Quantum of Solace..." பாத்துருக்கீங்களா... "Pirates of Carribean.." புடிக்குமான்னெல்லாம் கேட்டா.. "கடைசியா நான் பாத்த இங்லிஸ் படம் "சோலே" தாங்க..."னு சொல்ற அளவுக்கு ஆங்கிலம் நம்மாளு வாழ்க்கையில தாறுமாறா தாண்டவம் ஆடுது...

நம்மாளு என்ன வச்சுகிட்டாய்யா வஞ்சன பண்றான்.. அவனுக்கு வரமாட்டேங்குது... அவ்வளவு தான்...

சரி இதுக்கு என்ன தான் பண்றது....... இதுக்கெல்லாம் ஒரே தீர்வு..  நேரா டெல்லி தான்...



No comments:

Post a Comment