Friday, July 18, 2014

நில்லுவே!!!! நில்லுவே!!!!!

சில வருஷங்களுக்கு முந்தி மெட்ராஸ் பஸ்ல ஒரு பாட்டு ஓடிகிட்டு இருந்திச்சு.. பாட்டக் கேட்டு ஒரு திருநெல்வேலி அண்ணாச்சி.."யாரவே.. இவன் நில்லுவே நில்லுவேங்கான்..."னு கேக்க.. பக்கத்துல இருந்தவரு "அண்ணாச்சி, அவன் நில்லுவேன்னு சொல்லல... "நிலவே நிலவே"ங்கிறத தான் அப்படி பாடிகிட்டு இருக்கான்னு வெளக்கம் சொல்லிகிட்டுருந்தாரு...

ஒரு ரியாலிட்டி ஷோவுல எஸ்.பி.பி சொன்ன சம்பவம்... அதுவும் ஒரு நிலா பாட்டு தான்... "நான் சினிமால பாட வாய்ப்பு தேடி அலைஞ்ச போது எம்.எஸ்.வி சார் கிட்ட ஒரு பாட்டு பாடி காமிச்சேன்... உனக்கு சங்கதி எல்லாம் நல்லா வருது.. ஆனா தமிழ் தான் கொலபண்ற மாதிரி இருக்கு.. மொதல்ல போயி தமிழ நல்லா கத்துக்கிட்டு வந்து அப்புறம் பாடுறதுக்கு வாய்ப்பு தேடுன்னு சொன்னார்.." அப்டினு சொன்னார்.. அந்த பாட்டு "ராமு படத்துல பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடின நிலவே என்னிடம் நெருங்காதே..."

SPB க்கு மட்டுமல்ல, இந்த பாட்ட ஒரிஜினலா பாடின‌ PBSக்கு கூட தாய்மொழி தமிழல்ல... அவ்வளவு ஏன் ஆதிகாலம் தொட்டு தமிழ் சினிமா பாடகர்கள் பெரும்பாலான ஆட்களுக்கு தாய்மொழி தமிழ் கிடையாது...

TMSக்கு தாய்மொழி சௌராஷ்டிரம்..PBSக்கு தாய்மொழி கன்னடம்...கண்டசாலா, .எம்.ராஜா, பி.சுசீலா, எஸ்.ஜானகி, SPB, மனோ, ஷைலஜா இவர்கள் அத்தனை பேருக்கும் தாய்மொழி தெலுங்கு... யேசுதாஸ், மலேசியா வாசுதேவன், ஜெயச்சந்திரன்,கிருஷ்ணசந்தர்,சித்ரா, உன்னிமேனன், சுஜாதா, சுனந்தா, ஜென்சி இவர்களின் தாய்மொழி மலையாளம்...

ஆனால் TMS போல தமிழை உச்சரித்த பாடகர்கள் யாருமே இல்லைன்னு சொல்லலாம்... அவ்வளவு சுத்தமா தமிழ் உச்சரிப்பு இருக்கும்... அம்பிகாபதி படத்துல வர்ர "தமிழ் மாலை தனைச் சூடுவாள்.." ஒண்ணு போதும் இதுக்கு உதாரணம்...

TMS மட்டுமல்ல அதே போல தான் பாடும் நிலா பாலுவும்..

"ஆடும் இலைகளில் வழிகிற நிலவொளி
இருவிழி மழையில் நனைந்து மகிழும் வானம்பாடி..."

வைரமுத்துவோடஇந்த வரிகளைக் கேட்கிற யாரும் நம்பமாட்டங்க SPBக்கு தாய்மொழி தமிழ் இல்லைன்னு.. "", "", "" வேறுபாட்ட அவ்வளவு சுத்தமா பிரயோகம் பண்ணிருப்பாரு...

யேசுதாஸ் கிட்டதான் வைரமுத்து கொஞ்சம் திண்டாடிட்டாரு...என்ன ஒத்துமை பாருங்க அதுவும் ஒரு நிலா பாட்டு தான்..

அவரு ஏற்கனவே "திருக்கோயிலே ஓடிவா" அப்டிங்கிறதயே "தெருக்கோயிலே ஓடிவா"னு பாடுனவரு... "பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா" பாட்டுல‌.."பில்லை நிலா"னு யேசுதாஸ் பாட.. மீண்டும் மீண்டும் வைரமுத்து திருத்த, ஒரு கட்டத்துல யேசுதாஸ் செம கடுப்பாகி "நான் சாகுற வரைக்கும் திருத்திகிட்டே இருப்பீங்களா"னு கேக்க.. அதுக்கு வைரமுத்து "இல்லை.. தமிழ் சாகாத வரைக்கும்.." அப்டினு சொன்னதா அவருடைய ஒரு புத்தகத்துல எழுதியிருப்பாரு..

அப்படிப்பட்ட வைரமுத்துவே மண்ட காஞ்சு போற அளவுக்கு ஒரு ஆளு ஒரு வேலைய செஞ்சுபுட்டாரு..

ஒரு ரெக்கார்டிங்குக்கு கொஞ்சம் காலதாமதமா வர்ராரு வைரமுத்து.. பாட்ட பாடி முடிச்சுட்டு ஏர்போர்ட்டுக்கு கெளம்பி போயிட்டாரு பாடகர்.. சரி ரெக்கார்டிங் முஞ்சா என்ன.. பாட்ட போட்டு காமிங்க கேப்போம்னு பாட்டக் கேட்க ஆரம்பிக்கிறாரு.. ரெண்டாவது சரணத்த கேட்டவருக்கு பொறி கலங்கிருச்சு.. "பிரியமான பெண்ணை ரசிக்கலாம்.. தப்பில்லே"னு இவர் எழுதியிருந்தத... "பெரியம்மா பொண்ணை ரசிக்கலாம்.. தப்பில்லே"னு பாடி வச்சுட்டு போயிருந்தார் அந்த பாடகர்.. அப்புறம் என்ன... அவர வெரட்டி புடிச்சு கூட்டிகியாந்து மறுபடி ஒழுங்கா பாடவச்சு அனுப்பியிருக்காங்க‌... அந்த பாட்டு "கண்ணெதிரே தோன்றினாள்" படத்துல வர்ர "ஈஸ்வரா.." பாட்டு தான்...

அவரு தான் இந்த பதிவோட தொடக்கத்துல நான் சொன்ன "நில்லுவே" பாட்டயும் பாடின "உதித் நாராயணன்..அந்த நில்லுவே "ரோமியோ ஆட்டம் போட்டால்" பாட்டுல வர்ர ஒரு வரி...

இவரோட தாய்மொழி போஜ்புரி.. தமிழச் சொல்றீங்களே.. இவரு இந்தியையே இந்த லட்சணத்துல தான் பாடுவாருன்னு அழுவுற சில அக்மார்க் டெல்லிவாலாக்கள் உண்டு..

இவர மொதல்மொதல்ல தமிழுக்கு தொண்டுசெய்ய கூட்டிகிட்டு வந்தது என்னவோ . ஆர். ரகுமான் தான்.. ஆனா பெரிய அளவுல படத்துக்கு படம் பாட்டு குடுத்து வளத்துவுட்ட புண்ணியத்தை கட்டிக்கொண்டவர்கள் இசையமைப்பாளர்கள் தேவாவும், வித்யாசாகரும்...

ஆரம்ப காலத்துல இவரு பாடுன "கோயம்புத்தூர் மாப்பிள்ளைக்கு பொண்ணு கடிச்சா" பாட்டுலயே பாதி புரியாது (அதுபோகட்டும்.. அண்ணே அது கடிச்சா இல்ல.. கெடச்சா)

.எம். ராஜா பாடும் போது லேசான ஒரு Nasal tone இருக்கும் ஆனா வார்த்தைகள் தெளிவா இருக்கும். ஆனா நம்மாளு முழுசுமே மூக்கால தான் பாடுவாப்ல.. என்ன ஒரு வித்தியாசம் பாதி பாட்டு என்னன்னே புரியாது... 

"சில்லோன்னு சிங்ள பொண்ணே சிணுங்காதே.. ஜில்லோன்னு ரொடியிருந்தா ஒதுங்காதே.." (என்ன சொல்ல வர்ராருன்னு கண்டுபுடிக்கிறவங்களுக்கு நலாஸ் ஆப்பக்கடை கூப்பன் பரிசு..)

"காஸ்ஸூ மேல்லே காஸ்ஸூ வந்த கொட்டுஹிர நேரமித்து... வாசக்கதுவ்வே ராஸ்ஸலச்சுமி தட்டுஹிர நேரமிது.. (சார்.. பெண் பாவம் பொல்லாதது... அதுவும் தமிழ், ராசலட்சுமினு ரெண்டு பேரு பாவம்...)

ஏரோப்பிளேன் பறக்குது பரு மேலே.. (யார்ரா அவன் பரு மேல ஏரோப்ளேன் உட்டவன்..)

புது வெஸ்ஸம் கட்டப் பொர்ரோம் .... புது வால்வை தேடி பொர்ரோம்.. (தெய்வமே.. அது வால்வு இல்ல வாழ்வு..)

ஹைலைட்டா ஒண்ணு உண்டு.. "நீ வாது தக்க ரொம்ப கெட்டிக்காரன்"... (சத்திய சோதனை...)

இதாச்சும் பரவால்ல ஹீரோ ஜாலியா பாடுற பாட்டுனு மன்னிச்சு விட்டுடலாம்.. "யெங்கேய்யோ பார்த்த மைக்கம்"னு இவரு பாடுற மாடுலேஷனுக்கும்.. படத்துல வர்ர எமோஷனுக்கும் துக்கிளியூண்டு சம்பந்தமும் இருக்காது..

இவரு னி ஆளு இல்ல‌.. ஆமா இவ மாதிரியே ஒரு பெரியகூட்டமே இருக்கு...

சுக்விந்தர் சிங்குனு ஒருத்தரு.. "நெதியே அடி நைல் நெதியே"னு பாடிருப்பாரே அவரே தான்.. அதே மாதிரி சுரேஷ் பீட்டர்ஸ்னு ஒருத்தர்... இவரு வாய்ஸ் ரொம்ப பிரம்...Constipation... Come to the motion.." தான் தாரந்திரமே...

மீபத்துலகூட சிவாஜி த்துலஒரு பாட்டு... இப்போ.. எத்தக் கூடாதஎடத்துலம்மழுதை ஓங்கி ஒரு எத்து எத்திருச்சுன்னு ச்சுக்கங்க‌.. அப்டியே வாயமூடி...கண்ணு பிதுங்கி ம்ம்ம்ம்ம்ம்க்க்க்க்க்ம்ம்ம்ம்ம். னு ஒரு முக்கு முக்குவோமே அப்டியே அதே வாய்சுலஅதே பிட்சுலபாடுங்க‌.. "ஒரு கூடை ன்லைட்.. ஒரு கூடை மூண்லைட்.." சூப்பரப்பு.. இந்த பாட்ட பாடுனவருக்கும் இது மாதிரி எதோ ஒரு சம்பவம் நடந்திருக்கணும்..

ஆண் பாடகர்களுக்கு கொஞ்சமும் சளைச்ச ஆளுங்க இல்ல பாடகிகள்...


அந்த காலத்துலயே "பேஷும் வார்த்தை... உண்மை தானா"ன்னு பானுமதியம்மா பாடும்போது நமக்கு லைட்டா "ஷங்கட்டமா" தான் இருக்கும்...

"ஷென்பாஹாமே.. ஷென்பாஹாமே"னு தமிழுக்கு வந்த ஆஷா போன்ஸ்லே, மீரா படத்துல "யேன் விரித்தாய் ஸெருஹை.."னு பிச்சு ஒதறி இருப்பாங்க.. சமீபத்தில கூட
மதுஸ்ரீ"மருதாணி விழியில் ஏன்" பாட்ட பாடிகாட்டு முனீஸ்வரனுக்கு காவு குடுத்திருப்பாங்க..

அவ்வளவு ஏங்க...12பி படத்துல ஒரு பாட்டு வரும் "சரியா தவறா"னு..  

பாட்டை எழுதுன மகானுபாவர் "நாங்க பச்சை பச்சையா கேள்விகள் கேட்டா சரியா தவறா"னு எழுதி இருக்காரு.. அத அந்த புள்ள "நாங்க பாச்சை பாச்சையா கேள்விகள் கேட்டால் சரியா தவறா"னு பாடியிருக்கும்..  

அடுத்த வரிதான் இன்னும் ஹைலைட்... "ஆண்கள் பார்த்தால் பரவசம் வருதே.." அப்டிங்கிறத "அங்க பாத்தா பரவசம் வருதே.."னு பாடும் பாருங்க‌.. (கேக்குற நமக்கே தல கிர்ருனு சுத்தும்...)

போன வாரம் ஒரு பேட்டில "தமிழை சாகாமல் காப்பாத்துற பொறுப்பு நம்மகிட்ட தான் இருக்கு"ன்னு வைரமுத்து அவர்கள் பேசி இருக்காரு..

எம்.ஜி.ஆர், சிவாஜி, எஸ்.எஸ்.ஆர் இவர்கள் எல்லாருக்குமே தமிழை சுத்தமாக பேசக் கூடிய நாயகர்கள்னு ஒரு இமேஜ் உண்டு. அதனால இவர்களுக்கு பாடும்போது அதீத எச்சரிக்கையோடு, தமிழை தப்பா உச்சரிக்க ஒத்துக்கவே மாட்டாங்க.. ஆனா இன்னிக்கு ஹீரோவுக்கு தமிழ் தெரியாது.. இசையமைப்பாளருக்கு அதப் பத்தி கவலையே கெடையாது..இதுபோக பாடலாசிரியருக்கும் உக்காந்து திருத்துற அளவுக்கு சுதந்திரமோ அல்லது ஸ்கோப்போ கெடையாது... அப்டியே சொன்னாலும், விடுங்க சார் டிரெண்டியா இருக்குன்னு சொல்லிருவாங்க..

இதப் படிக்கிற ஒருசிலருக்கு தோணலாம்.. என்னவோ வெளி ஆளுங்கள சொல்றியே, தாய்மொழி தமிழா இருக்கிற சில ஆளுங்களே ஒழுங்கா உச்சரிக்கிறதில்லைன்னு...

100% நிஜம் தான்.. ரொம்ப Strict வாத்தியார் இளையராஜாவ பக்கத்துல வச்சுகிட்டே.. "சின்ன கன்னன் அளைக்கிறான்"னு "", "", "", "" எல்லாத்தையும் கலந்துகட்டி 2006 concert யுவன் சங்கர் ராஜா பாடின பாவத்துக்கு பரிகாரம் பண்ண, அடுத்த concert பாலமுரளி கிருஷ்ணாவையே அழைச்சிட்டு வந்து பாடவைக்க வேண்டியதா ஆயிடுச்சு...

ஒரு நண்பர்கிட்ட பேசிகிட்டு இருந்தப்போ "சினேகிதனே சினேகிதனே" பாட்டுக்கு முன்னால "தொகையறா" ஒண்ணு வருமே தெரியுமான்னு கேட்டேன்.. அவரு சட்டுனு " தெரியுமே.. நேட்ரு உன்னி ராவில் உன்னி திலப்பு மடியே..."ன்னு பாட ஆரம்பிச்சாரு.. உன் தமிழறிவுல தீய வைக்க...அது ராவுல உன்னியும் இல்ல பகல்ல உன்னியும் இல்ல.. இது வைரமுத்துவோட "பெய்யெனப் பெய்யும் மழை" வந்த ஒரு கவிதைன்னு சொல்லிட்டு அவருக்கு அந்தக் கவிதைய சொன்னேன்..

நேற்று முன்னிரவில்
உன் நித்திலப் பூமடியில் (நித்திலம்னா முத்துன்னு அர்த்தம்)
காற்று நுழைவதுபோல்
மனம் கலந்து களித்திருந்தேன்...

இன்று பின்னிரவில்
அந்த ஈர நினைவுகளில்
கன்று தவிப்பதுபோல்
மனம் கலங்கிப் புலம்புகிறேன்..

கூந்தல் நெளிவுகளில் - எழில்
கோலச் சரிவுகளில்
காந்த அசைவுகளில்
என் கர்வம் அழிந்ததடி...

இந்தப் பாட்ட பாடுனவரும் ஒரு பச்சைத் தமிழர் தான்..இப்படி பாடுனா கர்வம் மட்டுமில்ல ஏன் தமிழும் சேந்து அழியாது..

அதுசரி.. நமக்கென்ன.. படம் ஓடுனா சரி தான்..   
ஏத்தோ சவ்க்கியம் பருவா இல்லை!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

No comments:

Post a Comment